07 ஜூன் 2015

எனது முதல் மின் நூல்

   

 நண்பர்களே, வலைப் பூவில் நுழைந்து, மலர்ந்து மனம் வீசும் நல் உள்ளங்களை உடைய, தங்களின் அறிமுகத்தைப் பெற்று, ஆண்டுகள் மூன்று கடந்து விட்டன.

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

     வலைப் பூவில், எனக்குப் புதுப் புது உறவுகளையும், எனக்கென்று ஓர் முகவரியினையும் பெற்றுத் தந்தத் தொடர்.


முனைவர் சா.கிருட்டினமூர்த்தி,
முன்னாள் தலைவர், அறிவியல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர்

திரு துரை. செல்வராசு
தஞ்சையம்பதி

திரு வெ.சரவணன்,
தலைமையாசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
,
திரு ஆ.சதாசிவம்,
உதவித் தலைமையாசிரியர்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,தஞ்சாவூர்

திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி

முனைவர் ப.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோழ நாட்டில் பௌத்தம்


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்


திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்

திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்


திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று


நமது நம்பிக்கை
இதழின் ஆசிரியர்
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா

கணிதமேதை தொடருக்கு பேருதவி புரிந்த,
தன்னலமற்ற,
இந் நல் உள்ளங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

நன்றி சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது என்பதையும் உணர்கின்றேன்.


நண்பர்களே,
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
தொடர்
இப்பொழுது மின்னூலாய் வெளி வந்துள்ளது
என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


சீனிவாச இராமானுஜன்
தொடரை
மின்னூலாய் கொண்டு வந்திருப்பவர்
ஒரு சீனிவாசன்
வியப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

     இலட்சக் கணக்கான ஆங்கில நூல்கள், இணையத்தில் கொட்டப் பெற்று, மலை மலையாய் குவிந்து கிடக்கும், இக்காலத்தில், தமிழ் நூல்கள் மடு அளவிற்குக் கூட இணையத்தில் இல்லாதது வேதனையே.

     இவ்வேதனையை, சாதனையாய் மாற்ற, களம் இறங்கி இருக்கும் அமைப்புதான்,

       சென்னை, மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு மூலைகளிலும் வாழும் தமிழன்பர்கள் 15 பேர் ஒருங்கிணைந்து உருவாக்கியிருக்கும் அமைப்புதான்,

இவர்களுள் முதன்மையானவர்
திரு டி.சீனிவாசன்

     நண்பர்களே, வலைப் பூவில் வலம் வரும், உங்களது எழுத்துக்களை, மின்னூலாய் மாற்றி, உலகை வலம் வரச் செய்ய, இவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

    நாமும் நமது எழுத்துக்களை மின்னூலாய் மாற்றலாமே?

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
மின்னூலை
வெளியிட்டிருக்கும்
நண்பர் திரு டி.சீனிவாசன் அவர்களுக்கும்
அவர்தம் குழுவினருக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெருமைப் படுகிறேன்.

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
நூலினை
தரவிறக்கம் செய்ய

நன்றி நண்பர்களே,
தரவிறக்கம் செய்து,

மாபெரும் கணிதமேதைக்கு
தங்கள் இதயத்திலும், இணையத்திலும்
ஓர் இடம் கொடுத்தமைக்கு
மீண்டும் நன்றி நண்பர்களே.