19 ஜூலை 2016

பவள விழா









விடுமுறை விண்ணப்பம்

நண்பர்களே, வணக்கம் .நலம்தானே.

    நான் மாணவனாகப் பயின்ற, நான் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா, எதிர்வரும் 22.7.2016 வெள்ளிக் கிழமை அன்று சிறப்புடன் நடைபெற உள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றொரு அங்கமாய் திகழும், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவும், எம் பள்ளி விழாவும் ஒன்றிணைந்து கொண்டாடப் பட இருக்கின்றன.

இவ்விழாவின் போது, நானும், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும் இணைந்து எழுதிய இராமநாதம் என்னும் நூலின் வெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், எதிர்வரும் 24.7.2016 ஞாயிறு காலை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மற்றொரு அங்கமாய் திகழும் இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா சிறப்புடன் அரங்கேற இருக்கின்றது.

இவ்விழாவின் போது கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்காகப் பணியாற்றிவரும் ஆறு பேருக்கு விருதுகளும் வழங்கப்பெற உள்ளன. அடியேனுக்கும் ஒரு விருது.

இவ்விழா ஏற்பாடுகளின் காரணமாக, கடந்த பல நாட்களாகவே, வலையின் பக்கம் வர இயலா நிலை.  விழா நிறைவு பெறும் வரை இந்நிலையே தொடந்தாக வேண்டிய நிலை.

எனவே, வலையுலக நண்பர்களாகியத் தாங்கள் இன்னும் சில நாட்களுக்கு எனக்கு விடுப்பு வழங்கி உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

 அடுத்த வாரம் முதல், மீண்டும் தங்களை நாடி வலைக்கு தினமும் வருவேன். அதுவரை விடுமுறை வழங்குங்கள் நண்பர்களே.

அன்புடைய தங்களை விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு உள்ளன்போடு அழைக்கின்றேன்.

வருக  வருக  வருக


என்றென்றும் தோழமையுடன்,

கரந்தை ஜெயக்குமார்





 .