06 டிசம்பர் 2016

ஆழ்ந்த இரங்கல்கள்


தஞ்சைத் தரணியில்
பன்னெடுங்காலமாகத் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
மாணவர் இல்லம்,
தமிழ் பயிலும் மாணவியர் விடுதி, கூடுதல் நூலகக் கட்டிடம் முதலியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கென,
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறேன்
என்று மனமகிழ்ந்து அறிவித்து,
அறிவித்த வண்ணம், மனமுவந்து வழங்கியும் மகிழ்ந்தவர்
தமிழக முதல்வர்
மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின்
மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்