28 ஜூன் 2020

பள்ளிக்காக, ஆறாவது முதலாளி




நண்பர்களே, வணக்கம்.

     கொரோனா கால ஊரடங்கில், வீட்டிற்குள் முடங்கித் தவித்த எனக்கு, நேரத்தைக் கடத்துவதற்கானப் புது வழியினைக் காட்டியவர் வலைச் சித்தர் ஐயா அவர்கள்.

     அமேசான் தளத்தில் மின்னூல்களை வெளியிடுங்கள் என்றார்.

     வலைச் சித்தரின் வார்த்தையை சிரமேற்கொண்டு, நான் நான்கு மின் நூல்களை வெளியிட்டதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

     இதோ மேலும் இரு புது மின்னூல்கள்.

பள்ளிக்காக


கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிறுவனங்களுக்குத், தன் முதல் வருவாயில் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்த வள்ளல்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பயிலும் திக்கற்ற மாணவர்களுக்காகத், தன் சொந்த செலவில், திக்கற்ற மாணவர் இல்லம் கட்டிக் கொடுத்ததோடு, மாணவர்கள் பசியாற,  இருபத்து மூன்று ஏக்கர் நிலத்தினையும், அறக்கட்டளையாக்கி வழங்கிய, பசிப்பிணி மருத்துவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க முதற்றலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனாரின் வேண்டுகோளினை நிறைவேற்ற, தமிழ் இசை இலக்கண நூலினை எழுதி, இவ்வுலகிற்கு வழங்கியவர்.

     இம்மூவரின் சிறப்புமிகுப் பணிகளை ஒருங்கிணைத்துக் கூறும் நூல் பள்ளிக்காக.

ஆறாவது முதலாளி



     நான் படித்து ரசித்த, ரசித்துப் படித்த, ஏழு நூல்களின் சிறப்புக்களைக் கூறும் நூல் ஆறாவது முதலாளி.

     இவ்விரு நூல்களையும் இன்று (28.6.2020) முதல் செவ்வாய்க் கிழமை (30.6.2020) வரை கட்டணமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்



     படித்துப் பாருங்கள் நண்பர்களே.

     மின்னூல் உருவாக்கத்திற்கு வழி காட்டிய வலைச் சித்தருக்கும், மின்னூல் உருவாக்கத்தின்போது, தோன்றிய இடர்களைத் தகர்த்தெறிய உதவிய, முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவக்ளுக்கும், இமயத் தலைவர் திரு இராய.செல்லப்பா ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள்.

     வலைச் சித்தருக்கு ஜெ.







ஒலிப் பேழை