24 பிப்ரவரி 2021

நெடுங்குன்ற வாணர்

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும்

அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.

     ஓர் ஆசிரியர் என்பவர், உயர்  குடியில் பிறந்தவராகவும், பல நூல்களைக் கற்றறிந்த அறிவும், அவ்வறிவை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், எடுத்துக் கூறத் தகுந்த ஆற்றல் உடையவராகவும், நாவன்மை கொண்டவராகவும், நிலத்தையும், மலையையும், தராசுவையும், மலரையும் ஒத்த குணங்கள் உடையவராகவும், உலக ஒழுக்கத்தை உணர்ந்தவராகவும், உயர்ந்த குணங்கள் பலவற்றை உடையவராகவும் இருக்க வேண்டும் என்பது நன்னூலாரின் கருத்தாகும்

    

17 பிப்ரவரி 2021

நண்டு செய்த தொண்டு

 

     திருமணம்.

     காதல் திருமணம்.

     திருமணத்திற்கு முன்பே, காதலன் காதலியிடம் உறுதியாய் கூறினார்.

     உடுத்திய உடையோடு, நீ மட்டுமே வரவேண்டும்.

     உன் வீட்டு, செல்வத்தின் நிழல் கூட உன்னோடு வரக் கூடாது.

07 பிப்ரவரி 2021

எழுத்துக்காரக் குடும்பம்


     பல தடைகளைக் கடந்து, திருமணமான மகிழ்ச்சியில், புகுந்த வீட்டிற்குள்  காலடி எடுத்து வைக்கிறார், அந்த மருமகள்.

     அடுத்த நொடி, மாமியார் மயங்கி விழுகிறார்.

     சகுனமே சரியில்லை.

     ஜாதகத்துல தோஷம்

     ஆளுக்கு ஆள், மனம் போன போக்கில், குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போக, யாரோ ஒருவர், தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க, மாமியார், கண் விழிக்கிறார்.