16 நவம்பர் 2014

கனவில் வந்த காந்தி 2


நண்பர்களே நாம், எண்ணற்ற நட்புகளோடு பழகியிருப்போம், பழகிக் கொண்டே வருகின்றோம். ஆயினும் சிலரைப் பார்த்த உடனேயே, பேசத் தோன்றும், நட்பாய்ப் பழகத் தோன்றும். உண்மைதானே.

தேவகோட்டை கில்லர்ஜி




மதுரையில், இந்த மீசைக்கார நண்பரை முதன் முதலாய் நேரில் கண்டபோது, ஏதோ ஓர் பழைய நட்பினைப் புதுப்பித்துக் கொண்ட உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, புதிய நட்பாக தோன்றவேவில்லை.

மீசைக் கார நண்பருக்குப் பாசம் அதிகம்.

     யார், யார் கனவிலோ, யார், யாரோ வரும் இக்காலத்தில், இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். நமது எண்ணங்கள்தானே கனவில் வரும்.

உயர்ந்த, உன்னத எண்ணத்திற்குச் சொந்தக்காரர் இவர்.

     கனவில் வந்த காந்தி, இவரிடம் கேட்ட பத்து கேள்விகளை, நம் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.


     
காந்திக்குத் தமிழர்கள் மீது அன்பு அதிகம். காந்தி தமிழ் கற்றவர். தமிழில் பேசவும் அறிந்தவர்.

      இந்தியன் ஒப்பீனியன் என்னும் இதழில் 5.6.1909 அன்று காந்திஜி அவர்கள், தான் எழுதிய கட்டுரையில், தாம் அக்கறையுடன் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்பியதற்கான காரணத்தை, அவரே கீழ்க் கண்டவாறு விளக்கி எழுதியிருக்கிறார்.
இந்தப் போராட்டத்தில் தமிழர்களுக்கு இணையான அளவு, இந்தியர்களில் வேறு எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும், என் மனதளவிலாவது, என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நாம் தமிழைக் கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப் படிக்க, அதனுடைய அழகுகளை கண்டு அனுபவிக்கிறேன். அது மிக மிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பில் இருந்தும், அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில், புத்திக் கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள, விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள். மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன்.
     அதனால்தான், அபுதாபியில், வேலை செய்து அசந்து போய், உறங்கிக் கொண்டிருந்த, மீசைக்கார நண்பரின் கனவில், காந்தி தோன்றியிருக்கிறார். கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

     தேவகோட்டையாரே, இதோ, தங்களிடம் காந்தி கேட்ட கேள்விகளுக்கு, எளியேனின் எண்ணங்களையே பதிலாய் தருகின்றேன்

01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
     மீண்டும் கரந்தையில் பிறக்கவே ஆசை

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ஆகா. நடக்கிற காரியமா?
ஒரு நாட்டினை நல்லரசாக, வல்லரசாக மாற்றும் சக்தி பெற்றவை, வல்லமை பெற்றவை ஆயுதங்கள் அல்ல. ஆயுதங்களை விட வலிமையான, கல்வியே.
எனவே கல்வித் துறை அரசுடமையாக்கப் படும்.
ஏழு வயதில்தான் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கவே அனுமதிக்கப் படுவர்.
பத்து வயது வரை அரை நாள் பள்ளி
பதினைந்து வயது வரை, மதிப்பெண்ணில் முதலாம் இடம், இரண்டாம் இடம், கிடையவே கிடையாது.
விரும்பும் மேற்படிப்பு.

03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
இந்தியாவே நல்லரசாய், வல்லரசாய் மாறியபின், இந்தியர்களுக்கு வெளிநாட்டில் என்ன வேலை.

04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
இன்றிருக்கும் முதியோர் இல்லங்கள் அனைத்தும் நூலகங்களாக மாற்றப்படும்.  50 வயதிற்கும் மேல் அனைவருக்கும் ஓய்வூதியம். பெற்றோருடன் வாழும் வரைதான், பிள்ளைகளுக்கு அரசுப் பணி. இல்லையேல் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும், அவர்களும் முதியோர்கள் ஆக்கப் படுவார்கள்.

05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
ஒரு முறை, ஒரே முறைதான் பதவி வகிக்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்று இந்திய அரசியல் பணி என்னும் படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தந்தை அரசியலில் பதவி வகித்தவராக இருந்தால், அவரின் மகனுக்கும், மகளுக்கும், இத்தேர்வு எழுத தடைவிதிக்கப் படும்.

06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
வாய்ப்பே இல்லை. தேர்வுகள் அனைத்தும் ஆன் லைன் முறையிலேயே நடத்தப் பெறும். தேர்வர் ஒவ்வொருவரின் விடைகளும், அப்பொழுதே, அக்கணமே இணையத்தில் தானாகவே பதிவேற்றம் செய்யப்பெற்று, பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் படும். தேர்வர் தேர்வறையை விட்டு வெளியே வரும் முன்னே, தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிடும்.

07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
விஞ்ஞான வளர்ச்சிக்கென்று தனி நிதி ஒதுக்கீடு கிடையாது. ஆனால் விஞ்ஞானிகள் கேட்கும் எந்த பொருளும், அது எவ்வளவு தொகையாக இருந்தாலும், கேள்விகள் ஏதுமின்றி, உடன் கிடைக்கும்.

08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?
செய்துதான் ஆக வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், முதலில் பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவும் ஆன் லை முறையில். நூறு சதவீத மக்களும் வாக்களித்தே ஆக வேண்டும்.

09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
நூறு சதவிகித வேலை வாய்ப்பு

10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
மீண்டும் பிறவாமை வேண்டும்.
பிறப்பின் பறவையாய், அகண்ட வானில் உலகை வலம் வர வேண்டும்.

இவ்வினியப் பதிவினைத் தொடர, நான் அழைக்கும் நண்பர்கள்

01.   திருமிகு கவிஞர் முத்துநிலவன்

02.   திருமிகு திண்டுக்கல் தனபாலன்

03.   திருமிகு இரா.எட்வின்

04.   நண்பர் ஜோக்காளி பகவான்ஜி

05.   சகோதரி வேலு நாச்சியார் மு.கீதா

06.   சகோதரி மகிழ்நி றை மைதிலி கஸ்தூரி ரங்கன்
http://makizhnirai.blogspot.com/

07.   நண்பர் சிட்டுக்குருவி விமலன்

08.   திருமிகு மணவை ஜேம்ஸ்
manavaijamestamilpandit.blogspot.in

09.   நண்பர் ம னசு பரிவை சே. குமார்

10.   நண்பர் தளிர் சுரேஷ்

நண்பர்களே, தாங்கள் ஒவ்வொருவரும், பத்து நண்பர்களை அழைத்து, கருத்துக்களைப் பகிரச் சொல்லலாமே.