02 பிப்ரவரி 2019

திருச்சி வலைப் பதிவர் மறைந்தார்




திருச்சி வாழ், வலைப் பதிவர்
திருமிகு தி.தமிழ் இளங்கோ அவர்கள்
இன்று 2.2.2019 சனிக்கிழமை காலை
இயற்கையோடு இணைந்தார்.

நாளை காலை 10.00 மணி அளவில்,
எண்.27, துளசி இல்லாம், 3 வது குறுக்குத் தெரு,
நாகப்பா நகர், கே.கே நகர் புதிய பேருந்து நிலையம்,
திருச்சி
என்னும்,
அன்னாரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.

அழைக்கவே வேண்டியதில்லை, தகவல் தெரிந்தாலே போதும்,
முதல் மனிதராக வருகை தந்து, எந்நிகழ்வையும் சிறப்பிக்கும் பண்பாளர்.


அகவை முதிர்ந்த போதிலும்,
நண்பராகவே அனைவருடனும் பழகியவர்.
பழகுதற்கு இனியவர்,
பாசத்தில் உயர்ந்தவர்
எழுத்தை நேசித்தவர்,
நல் உள்ளங்களைப் போற்றியவர்.

பாசமிகு தோழரின் பிரிவால்
இணைய உலகில் ஒரு வெற்றிடம்
உருவாகியிருக்கிறது,

தங்களின் நினைவுகள்
என்றும் எம்மோடிருக்கும்.

கரந்தை ஜெயக்குமார்