-------. கடந்த
வாரம் -----.
பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப்
புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம்
உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.
----------------------
அரசர் கல்லூரி
திருவையாற்று வேதபாட சாலையில் தமிழையும் புகுத்த வேண்டும் என்பது, வட்டக்
கழகத் தலைவராய் அமர்ந்த பின் தோன்றிய எண்ணமல்ல. பல ஆண்டுகளாக முயற்சி மேற் கொண்டிருந்தவர்தான்
உமாமகேசுவரனார்.
1917 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழாவில், பழமை பெருமைகளிற் சிறந்த
நம் தமிழ் மொழி வழங்கும் தமிழகத்தில், இத் தஞ்சை மன்னரால் அறத்திற்கென்று
அளிக்கப்பட்டிருக்கும் பொருளின் பயனைக் கல்வி நெறியில் தமிழர்கள் அடையுமாறு,
இளைஞர்களின் கல்விப் பயிற்சிக்கு வேண்டியாங்கு உதவவும், திருவையாற்று வட மொழிக்
கல்லூரியில் தமிழையும் முதன்மைப் பாடமாக வைத்து நடத்தவும், தஞ்சாவூர் இறைத்
தண்டற்றலைவர் (Collector) அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் (District Board) விண்ணப்பம் செய்கிறோம் என்னும்
தீர்மானத்தினை, உமாமகேசுவரனார் முன்மொழிந்து நிறைவேற்றினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும்
தீர்மானத்தினை அனுப்பி நிறைவேற்றி வைக்கும்படி வேண்டிய போதிலும், தமிழைப் புகுத்த
முடியாத நிலையே நீடித்தது.
இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு வட்டக் கழகத் தலைவராக உமாமகேசுரனார்
தேர்ந்தெடுக்கப் பட்டார். திருவையாற்றில் தமிழைப் புகுத்தும் முயற்சியில்
முழுமூச்சுடன் இறங்கினார்.
திருவையாற்று வடமொழிக் கல்வி நிர்வாகத்தினரை, வட்டக் கழகத் தலைவராய்
சந்தித்தார். இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் வட மொழி வளர்ச்சிக்காக மட்டுமே
உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில், தமிழைப் புகுத்து என்பது இயலாத செயலாகும், என்ற
பதிலே கிடைத்தது.
உடனே, இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் எழுதப்பட்ட அறக்கட்டளை சாசனத்தையே
பார்த்துவிடுவோமே, என்று எண்ணி சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றார்.
சரசுவதி மகால் நூலகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த திரு எல்.உலகநாத
பிள்ளை அவர்கள் மூலமாக, சரபோசி மன்னர் எழுதிய அறக்கட்டளைச் செப்புப்
பட்டயத்தைப் பார்வையிட்டார். ஆனால் அந்த செப்புப் பட்டயமோ, வடமொழியில் எழுதப்
பட்டிருந்தது. எனவே செப்புப் பட்டயத்தைப் படியெடுத்துக் கொண்டு கடலூர் நோக்கிப்
புறப்பட்டார்.
கடலூருக்கு அருகேயுள்ள, திருப்பாதிரிப் புலியூர் என்னும் இடத்தில்
அமைந்துள்ள ஆதீனம், திருக்கோவலூர் ஆதீனம் ஆகும். இத் திருக்கோவலூர்
ஆதீனத்தின் ஐந்தாம் குருமூர்த்தியாகப் பொறுப்பேற்று, ஐம்பத்து மூன்று ஆண்டுகள்
செங்கோலோச்சியவர், ஞானியார் அடிகள் ஆவார். இவர் தமிழ் மொழிப் புலமையும்,
வடமொழிப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். மேலும் தமிழவேள் உமாமகேசுவரனாரிடத்து
மிக்கப் பற்றும் பாசமும் உடையவர். பின்னாளில் உமாமகேசுவரனார் அவர்களுக்கு, செந்தமிழ்ப்
புரவலர் என்னும் சீர்மிகு பட்டத்தினையும், தமிழவேள் என்னும்
செம்மாந்தப் பட்டத்தினையும் வழங்கி அருளியப் பெருமகனார் இவரே ஆவார்.
இத்தகு பெருமை வாய்ந்த ஞானியார் அடிகளை உமாமகேசுவரனார் சந்தித்தார்.
பட்டயத்தின் நகலினைக் காட்டி, மன்னர் இரண்டாம் சரபோசியின் அறக்கட்டளைக் குறித்த
விவரங்களை ஆராய்ந்து கூறுமாறு வேண்டினார். பட்டயத்தின் நகலினைக் கவனமுடன் படித்த
ஞானியார் அடிகள், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இவ்வறக்கட்டளை
நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, வடமொழி கற்பிப்பதற்காக என்று
எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை.
எனவே ஏழை மாணவர்களுக்கு இவ்வறக்கட்டளை மூலம் தமிழ் கற்பிக்கத் தடை எதுவும்
கிடையாது என்று கூறி, அக்கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்க வழி
வகுப்பது தமிழராம் நமது கடன் என அறிவுறுத்தி, ஆசி வழங்கி உமாமகேசுவரனாரை
வழியனுப்பினார்.
1920 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப்
பணியாற்றிய சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், 1924 இல் மாவட்டக் கழகத் தலைவரானார்.
1930ஆம் ஆண்டு வரை இவரே மாவட்டக் கழகத்தின் தலைவர். மாவட்டக் கழகத்தின் தலைவரே,
சத்திரம் நிர்வாகத்தின் தலைவராவார். இக்காரணத்தால் திருவையாற்று வேத பாடசாலையின் தலைவரானார் சர் ஏ.டி.பன்னீர்
செல்வம். இதனால் உமாமகேசுவரனாரின் பணி எளிதாகியது.
1924 ஆம் ஆண்டு, திருவையாற்று வேத பாடசாலையில், தமிழ் பயில்வதற்காக, பத்து
மாணவர்களுக்குத் தமிழவேள் இடம் ஒதுக்கினார். அடுத்த ஆண்டில் மாணவர்களின்
எண்ணிக்கையினை இருபதாக உயர்த்தினார். மூன்றே ஆண்டுகளில் தமிழ் பயிலும் மாணவர்களின்
எண்ணிக்கையும், வட மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமானது. வட மொழிக்கு
இணையாக, சமமாக தமிழும் நங்கூரம் இட்டு அமர்ந்தது.
உமாமகேசுவரனார் இதோடு மனநிறைவு அடைந்தாரா என்றால், அதுதான் இல்லை. சர்
ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையினைப் பயன்படுத்தி, 1927 ஆம் ஆண்டில், வேத
பாடசாலையின் பெயரினை அரசர் கல்லூரி என மாற்றினார. அவ்வருடமே சென்னைப்
பல்கலைக் கழகத்தாரின் இசைவு பெற்று தமிழ் வித்வான் பட்டப் படிப்பினையும்
ஏற்படுத்தினார்.
இவ்வாறாக ஒரு வடமொழிக் கல்லூரியில் தமிழை நுழைத்து, ஏழை மாணவர்கள் இலவசமாய்
தமிழ்ப் பயில வழி வகுத்தப் பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.
இன்று அரசர் கல்லூரியில், தமிழ் சமஸ்கிருத மொழிகள் இரண்டிலும் இளங்கலைப்
பட்டம் முதல் முனைவர் பட்ட வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன.
1927 ஆம் ஆண்டு முதல் இன்று வரை
இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கானோரும், பட்டம் பெற பயின்று
வருவோரும், தங்கள் இல்லங்களில் வைத்து வணங்க வேண்டிய மும்மூர்த்திகள் இரண்டாம்
சரபோசி மன்னரும், உமாமகேசுவரனாரும், சர் ஏ.டி.பன்னீர் செல்வமும் ஆவர்.
நாகத்தி
தஞ்சை வட்டத்தில் இரண்டு தீவுச் சிற்றூர்கள் உண்டு. ஒன்று
நாகத்தி, மற்றொன்று தொண்டரையன் பாடி. இவை நாற்புறமும் ஆறுகள் சூழ, ஆறுகளின்
இடையினில் தீவாக அமைந்த ஊர்களாகும். நாகத் தீவு என்பதே பின்னாளில் நாகத்தி என்று
மருவிற்று. இவ்வூர்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே,
ஊரின் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றாலும், கோடைக் காலங்களில் பொசுக்கும்
ஆற்று மணலில் நடக்க வேண்டும்,ஆற்றில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில் நீந்தித்
தான் கடக்க வேண்டும். உமாமகேசுவரனாரின் குல தெய்வமும் இவ்வூரில் இருப்பதால், சிறு
வயது முதலே, இப்பகுதி மக்களின் நிலையினை நன்கு உணர்ந்தேயிருந்தார்.
எனவே, வட்டக் கழகத் தலைவராய்
பொறுப்பேற்றவுடன், நாகத்தி மற்றும் தொண்டரையன் பாடி என்ற இவ்விரண்டு
ஊர்களுக்கும் தனித் தனியே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். நாகத்திப் பாலமானது
உமாமகேசுவரனார் காலத்திலேயே கட்டி முடிக்கப் பெற்றுவிட்டது. தொண்டரையன் பாடி
பாலம், உமாமகேசுவரனார் காலத்தில் தொடங்கப் பட்டு, பின்னர் மாவட்டக் கழகத்தால்
கட்டி முடிக்கப் பட்டது.
ஏழூர் திருவிழா
போற்றிப் புகழ்
மாவட்டக் கழகம் பொலியப் பலபணிகள்
ஆற்றி மகிழ்ந்தார் திருவையாற் றேழூர்
விழாவில் வழிபாடு
நோற்றுச் செல்வோர்
துயர்தீர நொடிகள் இல்லா வழிப்பாதை
கூற்றக் கழகப்
பொருள்கொண்டு கோலியமைத்துப் புகழ்பெற்றார்
-
பாவலர் பாலசுந்தரம்
வட
இந்தியாவில் ஐந்து நதிகள் பாயும் மாநிலம் பஞ்சாப் என்றழைக்கப் படுகிறது.
தமிழகத்தில் மூன்று ஆறுகள் பாயும் ஒரு ஊர் முக்கூடல் என்றும் திருமுக்கூடல்
என்றம் அழைக்கப் படுகிற்து. கேரளாவிலோ மூன்று ஆறுகள் பாயும் ஊரானது மூணாறு
என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் ஐந்து ஆறுகள் பாயும் பகுதியானது திருவையாறு
என்று வழங்கப் படுகிறது.
குந்தி
நடந்து குனிந்தொருகை கோலூன்றி
நொந்திருமி
யேங்கி நதைத்தேறி - வந்துந்தி
ஐயாறு
வாயாறு பாயாமு னேஞ்சமே
ஐயாறு
வாயா லழை
என்று ஐயடிகள் காடவர்கோனால்
போற்றப்படும் ஐயாறு, திரு என்ற அடைமொழியுடன் திருவையாறு என அழைக்கப்
படுகிறது.
காவிரியின்
கரையோரமாக எத்தனையோ கோயில்கள் இருப்பினும், திருவையாற்று ஐயாரப்பர் கோயிலை மட்டுமே
காவிரிக் கோட்டம் என சுந்தரமூர்த்தி நாயனார் அழைக்கிறார்.
திருவையாற்றிலுள்ள
ஐயாறப்பர் கோயிலில், சித்திரைப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, ஏழூர் திருவிழாவானது
நடைபெறுகிறது. சித்திரைத் திங்களில் நிறைமதி நாளன்று ஐயாரப்பர் பல்லக்கில்
புறப்படுவார். தேவாரம் பாடுவோரும், பஜனை பாடுவோரும் என ஆயிரக் கணக்கானோர்
பல்லக்கினைப் பின் தொடர்ந்து செல்வார்கள். ஐயாரப்பர் பல்லக்கினைத் தொடர்ந்து
நந்தியம் பெருமான் மனைவியுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்படுவார். இவ்விரண்டு
பல்லக்குகளையும் வழங்கிய பெருமைக் உரியவர் மராட்டிய மன்னன் சிவாஜியின் மனைவி
கௌரம்பாபாயி அவர்களாவார்.
திருவையாற்றிலிருந்து
கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும்
இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர்
பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது,
இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள்
நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும்
மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
..... வருகைக்கு நன்றி நண்பர்களே.
மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா.
வணங்க வேண்டிய மும்மூர்த்திகள் தான்... ஏழூர் திருவிழா தகவல்கள் பொக்கிசம்...
பதிலளிநீக்குநன்றி ஐயா...
தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குஎப்படி இத்தனை தகவல்களையும்
பதிலளிநீக்குசேகரிக்கிறீர்கள் படங்களுடன் மிகச் சிறப்பாகத்
தருகிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது
உங்கள் உழைப்புக்கு சிரம் தாழ்த்தி
வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்
மகிழ்ச்சி கொள்கிறேன் தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன அய்யா. தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கமே, இத தொடருக்குக் காரணம் அய்யா. நன்றி. தொடரந்து வருகை தருமாற அன்போடு அழைக்கின்றேன்
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்குவட மொழிக்கு இணையாக, சமமாக தமிழும் நங்கூரம் இட்டு
பதிலளிநீக்குஅமர்ந்தது.
வியக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குமிகவும் அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு.தமிழும் தமிழர் தம் மாண்பும் வாழ்க!..
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குஅன்றைய தமிழ்த்தொண்டு பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை! தொண்டரையன்பாடி எங்கிருக்கிறது?
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி சகோ. தஞ்சைக்கு அடுத்துள்ள பூதலூர்
நீக்குஎன்றும் சிற்றூறுக்கு அருகில் தொண்டரையன் பாடி உள்ளது.
பல வருடங்களுக்கு முன்னர் தொண்டரையன் பாடியில் உள்ள பாலத்தைக் காண்பதற்காக நான், எனது ஆசிரியர் திரு ஆ.இராமகிருட்டினன், திரு புலவர் சிவ.திருஞானசம்பந்தம் ஆகியோர் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாலம் உரு மாறி போய்விட்டதா என்றும் தெரியவில்லை. ஊர்க்காரர்களுக்கும் தெரியவில்லை
தங்களின் பதிலுக்கு இனிய நன்றி! சரித்திரப்பெயராய் இருக்கிறதே என்ற ஆவலில் தான் தொன்டரையன்பாடி பற்றி அறிந்து கொள்வதற்காகக் கேட்டேன். நானும் தஞ்சையைச் சேர்ந்தவள் தான். தஞ்சை வரும்போது தங்களை சந்திக்கிறேன்.
நீக்குஇறைத் தண்டற்றலைவர் (Collector) நாட்டாண்மைக் கழகத்தார் (District Board) என முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களை அறிந்து வியந்தேன். தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குமிகவும் சிறப்பான தகவல்கள். பழைய சொல்லாடல்களை தெரிந்து கொள்ள முடிந்தது......
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குTHIS WEEK VERY NICE.I WAS LEARN MORE INFORMATION.EVERY WEEKS YOU TELL LOT OF INFORMATION .VERY VERY THANKS SIR.
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்
நீக்குஅன்பின் ஜெயக்குமார் - பல்வேறு அரிய தகவல்கள் - தேடிப் பிடித்து விளக்கமாகப் பதிவிட்டமை நன்று- கணித ஆசிரியராக இருந்து கொண்டு தமிழில் அழகாகப் பதிவுகள் எழுத்துவது பாராட்டுக்குரியது. தஞ்சையில் பிறந்து ( 1950-63) 13 ஆண்டுகள் கழித்து மதுரை வந்து - அப்படியே வாழ்க்கை இன்னும் தஞ்சைப் பக்கம் வருவதற்கு வாய்ப்பளீக்க வில்லை. கரந்தட்டான் குடி தான் கரந்தையா ? - ஒரு முறை தஞ்சை வரவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
பதிலளிநீக்குபல பத்திகள் துவங்கும் போது ” ஆம் ஆண்டு “ என்று ஆண்டினைக் குறிப்பிடாமலே துவங்குகின்றன. சரி செய்யலாமே !
அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர்ப் பந்தல் இன்றும் அமைக்கப் படுகிறதென குறிப்பிடப் படுகிறதே - ஏழூர் பல்லக்கு வரும் போது மட்டும் அமைக்கப் படுகிறதா ? நிரந்தரமாக நிர்வகிக்கபட வில்லையா
நல்வாழ்த்துகள் ஜெயக்குமார் - நட்புடன் சீனா
கரந்தட்டான்குடி என்பதுதான் கரந்தை என்று அழைக்கப் படுகின்றது.கருந்திட்டைக் குடி என்றும் சொல்வார்கள். தஞ்சைக்கு அவசியம் வாருங்கள், தங்களை வரவேற்கக் காத்திருக்கின்றேன்.
நீக்குஏழூர் திருவிழாவின் போது மட்டும் தான் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தர் சில அன்பர்களாள் அமைக்கப் படுகின்றது அய்யா.
தாங்கள் கூறிய படி, எழுத்துப் பிழைகளையும் சரி செய்கின்றேன். எவ்வளவுதான் முயன்றாலும் ,ஒன்றிரண்டு பிழைகள் , என்னையும் அறியாது வந்துவிடுகின்றன.
நன்றி
பதிலளிநீக்குகாய்தல் உவத்தல் இன்றி படிக்கிறேன். ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளர்க்கிறோம் என்று சொல்லியே உலகின் மூத்த மொழியான சம்ஸ்கிருதத்தை இன்றைய தலைமுறையினர் கற்க வழியில்லாமல் தூக்கிஎறிந்து விட்டனரோ.?
மாறுபட்டக் கருத்துக்களைக் கூட, விருப்பு வெறுப்பி இன்றி படிப்பதற்கு ஓர் உயரிய, உன்னத குணமும் மனமும் வேண்டும் அய்யா. அது தங்களிடம் முழுமையாகக் குடிகொண்டிருக்கின்றது.
நீக்குஎனது நோக்கம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வ்ரலாற்றை எழுதுவது மட்டும்தான். மொழிப் போராட்டம் குறித்தோ, அதன் நியாய தர்மங்கள் குறித்தோ, அதிகம் அறியாதவன் அய்யா நான்.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், உமாமகேசுவரர் அவர்களால், திருவையாற்று வட மொழி கல்லூரியில், தமிழும் நுழைந்ததே தவிர, வட மொழி வெளியேற்றப்பட வில்லை அய்யா.
அரசர் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பெற்றாலும், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் இன்றும் இளங்களை முதல் டாக்டர் பட்ட ஆய்வு வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன அய்யா.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநல்ல கேள்வி ஜிஎம்பி சார்.
நீக்குவடமொழி தேய்ந்தது தமிழால் அல்ல, உருது இந்தியால் என்பது என் எண்ணம். இதற்கு நிறைய ஆதாரங்கள் முகமதியர் வரலாற்றைப் படிக்கும் பொழுது புலனாகின்றன. தமிழ்நாட்டில் வடமொழி தேய்ந்தது இனவெறுப்பினால் ஒழிய மொழிவெறுப்பினால் அல்ல.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வடமொழியை விட எளியது இனியது.. ஹிஹி.. என்பதும் காரணம். நான் அறிந்த (சில) மொழிகளில் ஆங்கிலத்துக்கடுத்தபடி தமிழிலக்கணம் மிக எளிது (என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).
உருது இந்தியினால் வடமொழி தேய்ந்தது என்றால், ஆங்கிலத்தினால் வடமொழி ஒழிந்தது என்பேன்.
நீக்குவடமொழி இன்னும் அழியாமல் இருப்பதன் காரணம் நீங்கள் சொன்ன பாரம்பரியம் காரணம். இந்து மதமும் ஒரு காரணம். கடவுளருக்கு வடமொழி நெருக்கம் என்ற போர்வைப் பார்வையும்.
வடமொழியில் அதிகம் மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று இன்றைய +2 மாணவக்குழு உணர்ந்து வருகிறது - வடமொழி காரணத்தால் மொத்த மதிப்பெண் கணிசமாக உயர்வதால் நிறைய மாணவர்கள் +2வில் வடமொழி படிப்பதாக அறிந்தேன். (CBSE results analysisல் படித்தது).
anbulla jayakumar
பதிலளிநீக்குvanakkam. ennudaiya computer pazhuthu. enave ethuvum ezhutha mudiyavillai. Aanaal thodarnthu ungal pathivai vaacithu varukireen. thodarattum ungal tamizh pani. nenjam niram vaazhthukkal.
நன்றி அய்யா. தாங்கள் என்பால் காட்டும் ஆர்வமும், அன்பும் எனக்குக் கிடைத்த கொடுப்பினை அய்யா. என்றும் வேண்டும் இந்த அன்பு.
நீக்குஉமாமகேசுரனார் போன்றவர்களுக்கு நாமெல்லாருமே மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அவசியமேயில்லாத ஒன்றில் இத்தனை முனைப்போடு செயல்பட்டிருப்பது மிகுந்த நன்றிக்கடன் படவேண்டிய செயல்.
பதிலளிநீக்குஅருமையாக எழுதுகிறீர்கள். நிறையத் தமிழ் சொற்கள் கற்க முடிகிறது.
வெண்பா மூன்றாமடியில் வாயாறு என்பது வையாறு என்றிருக்க வேண்டுமோ?
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. வாயாறு என்பது சரிதான் அய்யா. ஆனால் அதே வரியில னெஞ்சமே என்பதை மெஞ்சமே என்று தவறுதலாக இருந்தது அய்யா திருத்தி விட்டேன். நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன் அய்யா
நீக்குஎமது முன்னையோர் தமிழை வளர்க்க, இல்லை நிறுத்த எவ்வளவோ பாடு பட்டிருக்கின்றனர். இந்த அருமை புரியாமலே ஆங்கில மோகத்தில் எம்மினம் அல்லலாடுகின்றது . அறிய தகவல்களைத் திரட்டித் தரும் உங்கள் பணிக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதமிழராய்ப் பிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதீவுச் சிற்றூர்களுக்கு ஆற்றில் நீர் வரும் காலத்தில் சென்று பார்த்து வர ஆசை.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. இது போன்ற தீவுச் சிற்றூர்களைக் காண்பதே ஒரு அழகுதான் அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன் அய்யா.
நீக்குசிறு வயதிலிருந்து எத்தனையோ முறை தஞ்சாவூர் – திருவையாறு பாதையில் பஸ்ஸில் பயணம் செய்து இருக்கிறேன். ( எனது அம்மாவின் ஊர் திருக்காட்டுப்பள்ளி பக்கம்) தண்ணீர் த்தம்பத் ததும்ப ஓடும் காவிரியின் கரையில் இருக்கும் அந்த கல்யாண மஹால் அழகை ரசித்து இருக்கிறேன். அந்த மஹாலின் பின்னணியில் இருக்கும் தமிழ் வரலாற்றை உங்கள் தொடர் மூலம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி!
பதிலளிநீக்குஎனது கருத்துரையில் “த்தம்பத் ததும்ப ஓடும் “ – என்பதனை பிழை நீக்கி,
நீக்கு” ததும்பத் ததும்ப ஓடும்” என்று வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா.காவிரியில் நீர் கரை புரண்டோடும் காட்சியே காட்சி அய்யா.
நீக்குதொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன் அய்யா.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிய முடியாத பல அரிய தகவல் கிடைக்கப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
அருமையாக எழுதியுள்ளிர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஅய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்
நீக்குபழைமையான தகவல்களை சேகரித்து வழங்கியமை பாராட்டுக்குரியது உங்கள் சேவையைத் தொடருங்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஅய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்
நீக்குநல்ல தகவல்கள். அவ்வப்போது கருத்துகளுக்கு சரியான விளக்கம் தருகிறீர்கள். இணையத்தில் காணப்படும் சிறந்த பதிவுகளாக இந்த தமிழ்ச்சங்கப் பதிவுகள் அமையும் என்பதில் ஐயமில்லை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஅய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
நீக்குதங்கள் களஞ்சியம் போன்று உள்ளது உங்கள் பதிவு அண்ணா
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்
நீக்குகாயத்ரிக்கு உதவியதற்கு உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
பதிலளிநீக்குவரலாற்று பொக்கிஷங்களை சிறுக சிறுக சேமிக்கிறீர்கள்...தொடருங்கள்....வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிஅய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
நீக்குஐயா... வணக்கம்! மிக அருமையான வலைத்தளம். இன்றுதான் உள் நுளைந்தேன். அறிவுக்கும் அறிந்திருக்கவும் வேண்டிய நிறைய விடயங்கள் இங்கு குவித்திருக்கின்றீர்களே...
பதிலளிநீக்குஅருமை! நிச்சயம் உங்கள் முன்னைய பதிவுகளையும் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும். தொடர்ந்து வருவேன். வாழ்த்துக்கள்!
அங்கு வந்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!
த ம. 5
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
நீக்குஉண்மையில் சிறப்பான கருத்துக் கலைத் தெரிவு செய்து செய்து பதிவு இருக்கின்றீர்கள் பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
நீக்குவாடா மொழிக்கு இணையாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்ட வரலாறை அழகாக கூறியுள்ளீர்கள்... சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குமன்னிக்கவும். வட மொழி பிழையால் வாடா மொழியாகி விட்டது...
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்
நீக்குதமிழ் மற்றும் தமிழகத்தின் பெருமை பற்றி எவ்வளவு நுட்பமான விசயங்கல். அப்பாப்பா! இன்றுதான் என் முதல் வருகை. இனி தவறாமல் வருவேன். பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்
நீக்கு