நான்
ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 30.8.2013 வெள்ளிக் கிழமை, எனது
பத்தாம் வகுப்பு மாணவியரை நோக்கிக் கேட்டேன்.
அடுத்த மாதம்
செப்டம்பர் 5 என்ன நாள் தெரியுமா?
ஆசிரியர் தினம்
டாக்டர் இராதாகிருட்டிணன்
பிறந்த நாள்
என பல குரல்கள்
எழுந்தன.
1920 ஆம்
ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக்
கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள்
விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக்
கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான்
ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி
மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.
பயண
நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம்
பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக
மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக,
குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்
பட்டிருந்தது.
பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே
வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர்.
பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து
விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம்
நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க
வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத
அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள்
ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.
பேராசிரியர் பயணிக்க வேண்டிய
தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு
பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும்,
குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.
பல்கலைக் கழகப்
பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக்
குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன்
ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே
கொண்டாடி மகிழ்கின்றது.
மாணவியரைப் பார்த்து மீண்டும்
கேட்டேன். இதே செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, வேறொரு சிறப்பும் உண்டு தெரியுமா? மௌனமே
பதிலாய் கிடைத்தது.
நண்பர்களே, மாணவியர் மட்டுமல்ல
நாமும் கூட மறந்து போன ஒரு சிறப்பு இந்நாளுக்கு உண்டு.
1908 ஆம் ஆண்டு ஜுலை ஏழாம் நாள்.
திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிமன்றம். நீதிபதி ஏ.எஃப். பின்ஹே தீர்ப்பு வழங்குகிறார். சுப்பிரமணிய
சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்த உதவியதற்காக ஆயுள் தண்டனையும், நாடு கடத்தல்
தண்டனையும், மேலும் திருநெல்வேலியில் மார்ச் ஒன்பதாம் நாள் ஆற்றிய சொற்பொழிவிற்காக
மற்றொரு ஆயுள் தண்டமையினையும், மற்றொரு நாடுகடத்தல் தண்டனையினையும்
விதிக்கின்றேன். குற்றவாளி இவ்விரு ஆயுள் தண்டனைகளையும், இரு நாடு கடத்தல்
தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.
பேசியதற்காகவும், நண்பருக்கு
உதவியதற்காகவும் இப்படியொரு தண்டனை நண்பர்களே. இந்தத் தண்டனைகளைப் பெற்றவர் யார்
தெரியுமா?
கைநோவக் கல் நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து
மெய் சோர்ந்தும் ஊக்கம் விடாத நின்ற – ஐயன்
சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல்
இன்று
சுதந்திரம் காண்போமோ
சொல்
என்று பாடினாரே கவிமணி, அவ்வீர்ர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி
அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.
ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பல்
விட்டாரே, அந்தக் கப்பல் ஓட்டியத் தமிழனின் பிறந்தநாள்தான், செப்டம்பர் 5
வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப்
பல்பொருளும்
தந்த சிதம்பரமவன்
தாம்தின்று - சந்தமில் வெண்
பாச் சொல்லைப்
பிச்சைக்கு பாரெல்லாம் ஓடுகிறான்
நாச் சொல்லும்
தோலும் நலிந்து
என்று தன் சொத்து முழுவதையும் நாட்டிற்காக இழந்த பிறகு, தன் வறுமை நிலையத்
தானே பாட்டில் பாடினானே, அந்தத் தியாகத் திருஉருவம் வ.உ.சி அவர்களின் பிறந்த
நாள்தான் செப்டம்பர் 5.
சிறை உடையில் வ.உ.சி |
அவாவியே வந்தென்னை
ஆண்டருள் ஈசா,
மூன்றிர திங்கள்
முரண்சிறை இருந்தேன்
இந்தவாரம் எடுத்த நிலுவையில்
ஐந்தி லொன்றாக அருகிய தென்னுடல்
அரிசி உணவுக்கு அளித்தனர் அனுமதி
பெரியவன், மற்றவன்
பேசான் என்னோடு
சீரிய நின்னடி
சிறமேற்கொண்டு யான்
பாரிய என்னுளப் பாரத்த் தாய்க்கும்
உரிமையோடு பெற்றெனை
உவம்யொடு வளர்த்த
பெருமை சேர்
அன்னைக்கும் பிறர்க்கும் எனது
மெய் மன
வாக்கால் விரும்பிஇன் றளித்தேன்
தெய்வ வணக்கமும்
சீர்தரும் வாழ்த்துமே
எனச் சிறையிலிருந்தவாறு, தந்தைக்குக் கவிதையாய் கடிதம் எழுதினாரே, அந்த
வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்தான் செப்டம்பர் 5.
மாணவியர் அனைவரும் ஆழ்ந்த அமைதியில்,
வியப்புடன் செய்தியைக் கேட்டனர். ஆம் மாணவிகளே, செப்டம்பர் 5,
இராதாகிருட்டிணன் அவர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி
அவர்களின் பிறந்த நாளுமாகும். இந்நன்னாளில் நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து
கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் ஓவியப்
போட்டி ஒன்றினையும் நடத்துவோமா? என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம்,
போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்
போட்டிக்கானத் தலைப்பைக்
கூறுங்கள் என்றனர். பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர்
இராதாகிருட்டினன் அல்லது செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி என்றேன்.
கட்டுரைப் போட்டிக்கானத்
தலைப்பு எனது ஆசிரியர்கள்,
மாணவிகளாகிய நீங்கள்
அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று,
தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில்,
உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு
ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய
உங்கள் எண்ணங்களை எழுதுங்கள் என்றேன்.
5.9.2013 வியாழக்கிழமை.
ஆசிரியர் தினம். செக்கிழுத்தச் செம்மலின் பிறந்த தினம். காலை பேச்சுப்
போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும், ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.
நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு
எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியரும் நண்பருமான திரு டி.கோபால்
அவர்களும், பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றியாளர்கள் மூவரையும்,
ஓவியப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் வெற்றியாளர்கள் மூவரையும் தேர்வு செய்து
கொடுத்தனர்..
கட்டுரைப் போட்டியில் கலந்து
கொண்டு மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.
எனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில்
மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது.
முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, தாங்களாகவே, சுயமாக
எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில், 7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம்
நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத்
தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.
அனைத்து மாணவிகளின்
கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால்
சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு
முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக்
காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.
பேச்சுப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர் |
ஓவியப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர் |
கட்டுரைப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர் |
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு எஃப் பிரிவு மாணவர்கள் |
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு மாணவியர் |
பரிசில்களை வென்ற பத்தாம் வகுப்பு மாணவியருடன் ஒரு குழுப் படம் |
மாலை பேச்சுப் போட்டி,
கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா.
பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில்
நடைபெற்றது. தலைமையாசிரியர் வெற்றியாளர்களுக்கானப் பரிசில்களை வழங்கிப்
பாராட்டினார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம்
அவர்களும், உடற்கல்வி ஆசிரியரும் நண்பருமான திரு துரை.நடராசன் அவர்களும், ஓவிய
ஆசிரியர் நண்பர் திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியர் நண்பர் திரு
டி.கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.
ஒரு சிறிய வகுப்பறையில்
நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்
நினைவினைப் போற்றுவோம்
தலைப்பே அருமை அய்யா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாளை மறந்து தான் போனோம். தாங்கள் மறவாமல் நினைவூட்டியமைக்கு நன்றி. தங்கள் பதிவில் அரிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுவதை காண முடிகிறது. அது தங்களின் வாசிப்பு அனுபவத்தால் விளைந்த சொத்து என்று கருதுகிறேன். தொடருங்கள் அய்யா.
பதிலளிநீக்குஅருமை அருமை...
பதிலளிநீக்குநன்றிகள் பல....
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்களின் பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்
பல்வேறு தகவல்களுடன் மிக அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.
-=-=-=-
என் தொடரின் பகுதி-45 ஐ 45/1/6 முதல் 45/6/6 வரை ஆறு உப பகுதிகளாக ஒரே நாளில் வெளியிட்டுள்ளேன். ஆறாவது லேடஸ்டு பகுதிக்கு மட்டும் வருகை தந்துள்ளீர்கள்.
அதன் ஆரம்பம் “அன்பின் சீனா ஐயா” அவர்களில் தொடங்குகிறது:
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html
தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் VGK
அறியாத பல புதிய தகவல்கள். அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல ஆசிரியரே ! தங்களுக்கு எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்குநிறைவான விழாவாக அருமையான பகிர்வுகள்..
பதிலளிநீக்குஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!
செப்டம்பர் 5 அன்று வ.உ. சி இன் பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவரைப் பற்றிய தகவல்கள் அளித்தது சிறப்பு. வ.உ.சி பற்றி நானும் எழுத நினைத்தேன். இவ்வளவு சிறப்பாக எழுதி இருப்பேனா என்பது சந்தேகமே!
பதிலளிநீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நாட்டுகுழைத்தவர்கள் எல்லாம்
பதிலளிநீக்குசிலையாய் நிற்கின்றார் முச்சந்தியில்
காக்கைகள் அனுதினம்
செய்யும் அபிஷேகத்துடன்
மழை கடவுள் கருணை காட்டினால்தான்
உண்டு அவர்களுக்கு குளியல்
மற்றபடி தொலைகாட்சி செய்திக்காக
மாலை மரியாதைகள் பிறந்த தினத்திலும்
நினைவு நாளிலும் மட்டும் சில
தலைவர்களுக்கு மட்டும் உண்டு.
அவர்கள் செய்த தியாகம்
வீணாகிபோய் விட்டது
நாட்டின் மானத்தை காக்க
கப்பலோட்டினார் வ உ .சிதம்பரனார்
கப்பல் படம் அச்சிட்ட காகித
ரூபாய் நோட்டிற்க்குதான் இன்று மரியாதை
அந்த நோட்டு இல்லாதவனுக்கு
கிடைப்பதோ பெரும் அவமரியாதை.
இன்றோ லட்சக்கணக்கில்
கல்வி கற்கின்றனர்
பல லட்சங்கள் செலவு செய்து.
கடல் கடந்து சென்று
தங்கள் அறிவை, உழைப்பை நம்மை
அடிமைப்படுதியவர்களுக்கே அளிக்கின்றனர்
அவர்கள் போடும் பிச்சை காசுக்காக
அறிய நூல்கள் பல எழுதியவர்
பலரும் அறிய அந்த நூல்களை
அச்சிட்டு பரப்பியவர்
நாட்டிற்காக அனைத்தையும்
துறந்தவர் .நன்றி மறந்த மக்களுக்காக
தியாகங்களை ஏற்றவர்.
எனினும் என்றும் நிலைத்துமணம் வீசும்
சுதந்திர போராட்ட
தியாகிகள் பட்டியலிருந்து
அவர் பெயரை யாரும் அகற்றமுடியாது
ஆசிரியர் தினத்தன்று வஉசி பிறந்த தினம். இந்த தினத்தைத் தாங்கள் கொண்டாடிய விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மாணவர்களிடையே இதுபோன்ற நிகழ்வுகளைக் கொண்டு சேர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தங்களின் செயல்பாடு மாணவர்களிடையே தங்கள் மீதான மதிப்பை மென்மேலும் உயர்த்தும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிகச்சிறப்பான நிகழ்வு! உங்களுக்கும் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் பாராட்டுக்கள்! – இமயத்தலைவன் (கவிஞர் இராய செல்லப்பா) -சென்னையிலிருந்து
பதிலளிநீக்குஅன்பின் கரந்தை ஜெயக்க்குமார் - அருமையான பதிவு - செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் - டாக்டர் இராதாகிருட்டிணனையும் செக்கிழுத்த செம்மல் வவுசியினையும் அவர்களீன் பிறந்த நாளில் நினவு கூர்ந்து பலப் பல செய்திகளுடன் பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஉன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் உண்ணை நீ உனர்ந்தால்தான் அது முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவருதலில் உங்ளுக்கு நிகர் யார் உளர்! எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்பரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ்!வளர்க தமிழ் உள்ளங்கள்!நன்றி.
பதிலளிநீக்குஉன்னால் முடியும் உன்னால் மட்டுமே முடியும் உண்ணை நீ உனர்ந்தால்தான் அது முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி அவர்களிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டுவருதலில் உங்ளுக்கு நிகர் யார் உளர்! எல்லாவற்றிற்கும் மேலாக இக்கட்டுரையில் வீரத்தமிழனாம் வ.உ.சிதம்பரனாரின் வீரச்செயல்கள் அவருடைய அர்பணிப்பு வாழ்க்கையை கண்டுமெய்சிலிர்த்தேன் .மேலும் டாக்டர் இராதாகிருட்டினனின் அறிமுத்தை உங்களைதவிர வேறுயாராலும் இவ்வளவு நேர்த்தியாக எழுதமுடியாது.ஒவ்வொரு வாரமும் தங்களின் கனிவான எழுத்தால் ஒவ்வொருவலைப்பு நண்பர்களையும் தங்களின் பாசவலையால் கட்டிவைத்துள்ளீர்கள்.வாழ்க தமிழ்!வளர்க தமிழ் உள்ளங்கள்!நன்றி.
பதிலளிநீக்குஒரு நாளின் பெரும்பகுதியைப் பிள்ளைகள் பள்ளியில் கழிக்கின்றனர். அவர்களைச் செப்பனிடும் செயலில் ஆசிரியர் பங்கும் அதிகம். நேரம் பார்த்து சரியான வழிகாட்டுதல்களோடு கற்பித்தல் மிகவும் சிறப்பானதாகும் . அதனை நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஆகவே நல்லாசிரியரான உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குஅன்புடையீர்!... டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்துடன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தையும் இணைத்து வழங்கிய பதிவு அற்புதம். வாழ்க!.. வளர்க!..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநாம் மறந்து விட்ட மாமனிதர் வ்.உ.சிதம்பரனார் பற்றிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி திரு கரந்தை ஜெயக்குமார்
அன்புடையீர்! டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்துடன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தையும் இணைத்து வழங்கியது அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறியாத பல விடயங் அறியக் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவதும் ஒரு சிறந்தபணி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறியாத பல விடயங்கள் அறியக் கிடைத்தமைக்கு எனது வாழ்த்துக்கள் அத்தோடு மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவதும் ஒரு சிறந்தபணி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குவணக்கம்.
இப்பதிவும் பதிவோடு நடத்தப்பெற்ற போட்டிகளும் உங்களைத் தரமான ஆசிரியர் எனும் நிலையைத் தாண்டி இன்னும் உயர்த்திப் பிடிக்கிறது. நான் தற்போது தமிழ்த் தொடர்புடைய எல்லா அறிஞர்களின் பிறந்தநாள்களையும் குறித்து ஒருசிறு நுர்லும் அதுகுறித்து பதிவிலும் எழுதவேண்டும் எனத் திட்டமிட்டு அதனைச் செய்துவருகிறேன். உங்களின் பதிவு அப்பணியை விரைந்துசெய்ய என்னை முடுக்குகிறது.
வாழ்த்துக்கள்
நன்றி.
Dear KJ,
பதிலளிநீக்குYou are a GOOD TEACHER, a GOOD MENTOR, a GOOD PARENT of our school students. Thank you and I wish you to continue.
காணக்கிடையாத அற்புதப் படங்களுடன்
பதிலளிநீக்குஅருமையான சிறப்புப் பதிவுக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
tha.ma 6
பதிலளிநீக்குவணக்கம் ஐயா... வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/09/blog-post_292.html
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் பிறந்த தினத்தை நாடு மறந்து போனாலும் தாங்கள் அதனைக் குறிப்பிட்டு எழுதியதற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. தங்களது வலைச்சரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2013/09/blog-post_292.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சார்.தங்களது வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகம்செய்துள்ளேன்.படித்துப்பார்த்து விட்டு கருத்துக்கூறவும்/
பதிலளிநீக்குஅனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.//
பதிலளிநீக்குஉங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தது அவர்களின் அதிர்ஷ்டம்.
குழந்தைகளின் சிந்தனை ஆற்றலை உயர்த்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாய் அமைய உதவிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
படங்கள் எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி.
வ.உ.சி பற்றிய பதிவு. மிக்க நன்றி.
பதிலளிநீக்குபடங்களும் சிறப்பு.
இவைகளை வாசிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
வேதா. இலங்காதிலகம்.