மனதில் அதுவரை
இருந்த மகிழ்ச்சி மறைந்து, ஒரு விதப் பதட்டம் தொற்றிக் கொண்டது.
அரை மணிக்கு
ஒரு முறை தொலைபேசிச் செய்தி வந்த வண்ணம் இருந்தது.
வண்டியின்
பழுது சரி செய்யப்பட்டு விட்டது.
திருச்சி
வந்து விட்டோம்.
பெரம்பலூர்
தாண்டிவிட்டோம்.
விழுப்புரம்
வந்துவிட்டோம்.
எப்படியும்
விமானம் புறப்படும் முன்னர் வந்து விடுவார்கள் என்பது உறுதியாயிற்று.
பதட்டம்
ஒரு வழியாக மெல்ல மெல்ல தணிந்தது.
விமான நிலையம்
சென்றோம். ஒரு பெரும் கூட்டமே எனக்காகக் காத்திருந்தது.
எனது கல்விக்
கட்டணங்களை இதுநாள் வரை செலுத்தி உதவிய, ஈரோட்டைச் சார்ந்த வேலு அய்யா அவர்களின் ஏற்பாட்டில்,
ஒரு பெரும் கூட்டமே எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தது.
கைத் தட்டல்கள்,
வாழ்த்தொலிகள், மகிழ்வான கை குலுக்கல்கள், தாய் தந்தையரின் பாசமான அரவணைப்பு அனைத்தையும்
ஏற்றுக் கொண்டு, விமானம் ஏறினேன்.
ஏறக்குரைய
12 மணி நேரம் வானில் பறந்த பிறகு, ஜெர்மனி நேரப்படி காலை 7..30 மணிக்கு, பிராங்ஃபோர்ட்
விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
இரண்டு மணி
நேரக் காத்திருப்பு. அடுத்த விமானத்தில் தொடர் பயணம்.
22.8.2003 அன்று இந்திய நேரப்படி, சரியாக இரவு 10.30 மணிக்கு விமானம் அமெரிக்காவில்
தரை இறங்கியது.
பிறந்த பொன்னாட்டை
விட்டு, வெகுதொலைவு வந்து தாய்,தந்தை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து,
தன்னந்தனியனாய், ஊன்று கோலுடன், அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தேன்.
நியூயார்க்கில்
தங்களின் பணி மற்றும் படிப்பு இனிதாக அமைய, வாழ்த்துக்கள்.
வாழ்த்து கூறி
விமான நிலைய அதிகாரி வரவேற்றார்.
என்னுடைய
கைரேகை மற்றும் கருவிழி புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. வருவாய்த் துறைக்கானப் படிவங்களை
உரிய இடத்தில் கொடுத்து, என்னுடைய பயணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு, வாடிக்கையாளர்
அறைக்குள் நுழைந்தேன்.
எனவே வாடிக்கையாளர்
அறைக்குள் நுழைந்ததும், பல்கலைக் கழகப் பணியாளரைத் தேடினேன்.
பல்கலைக்
கழகத்தில் இருந்து வரவேண்டிய உதவியாளர் வரவே இல்லை.
ஒரு கையில்
ஊன்று கோல், அருகில் பயணப் பெட்டிகள், விமான நிலையத்தில் தன்னந்தனியாய் நிற்கிறேன்.
தொடர்ந்து பேசுவேன்
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
படிக்கும் போது வரிகள் ஒவ்வொன்றும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது 1.2.3.4ஆகிய பகுதிகளை படிக்கவேண்டும் நிச்சயம் படித்து கருத்து பதிகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெற்றிவேல் முருகனுக்கு மனதைரியம் அதிகம்தான் !வாழ்த்துகள் !
பதிலளிநீக்குவெற்றிவேல் முருகனுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத ம 2
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம் கரந்தை மைந்தா !
பதிலளிநீக்குவெற்றி நடை போடும் வேல்முருகனுக்கு வந்த இடையூறுகள்
எல்லாம் சாதாரணமாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன் !
தொடர்கிறேன் நன்றி தம +1
பெயரெப்படி அவருக்குக்
பதிலளிநீக்குகாரணப்பெயராய் அமைந்தது என
யோசிக்க வைக்கிறது
அவரது அயராத முயற்சி
அவரைக் கூடுதலாய்
நேசிக்க வைக்கிறது
நேரடியாகக் காண்பது போல்
துடிப்புடன் சொல்லிச் செல்லும்
உங்கள் எழுத்து எங்களை விடாதுத் தொடர்ந்து
வாசிக்க வைக்கிறது
வாழ்த்துக்களுடன்...
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதம +1
புறப் பார்வை இல்லாத ஒருவர் அகப்பார்வையின் துணையோடும் அளப்பறியா மன தைரியத்துடனும் அந்நிய மண்ணில் அடியெடுத்துவைத்து சரித்திரம் எழுதிய அற்புதம் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கரந்தையாரே.
முருகனுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுருகனுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுருகனுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஎத்தனை இடர்கள் வரினும் அஞ்சா நெஞ்சம் கொண்ட திரு.வெற்றிவேல் முருகன் அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பார் என்ற எண்ணத்துடன் தொடர்கிறேன்.
அவருடைய மன உறுதியும், மனோ தைரியமும் அவரை என்றென்றும் காப்பாற்றும்.
பதிலளிநீக்குசோதனைகள் வரும்போதுதான் ஒருவரின் திடம் தெரிகிறது வெற்றி வேல் முருகனுக்குப் பாராட்டுகள்
பதிலளிநீக்குமுற்றிலும் நம்பிக்கையில்லாதவர்கள்கூட இத்தொடர் பதிவைப் படிக்கும்போது நம்பிக்கை பெறுவர்.
பதிலளிநீக்குசோதனைகள் தான் ஒருவரைப் புடம் போடுகின்றன. பக்குவப்படுத்துகின்றன. வெற்றிவேல் முருகனுக்கு இந்தச் சோதனைகள் அனைத்தும் வெற்றி வாகை சூடிட வாழ்த்துகள்
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
பதிலளிநீக்குபடிக்கும் போதே அவரின் தன்னம்பிக்கை நமக்குள்ளும் துளிர்விடுகிறது... ஒவ்வொரு பிரச்சினையின் போதும் மன வருத்தம் கொண்டு விபரீத முடிவெடுக்கலாமா என யோசிக்கும் நம் முன்னர்... மன வருத்தங்களை எல்லாம் தூர எறிந்துவிட்டு மகிழ்வோடு பயணிக்கும் வெற்றிவேல் முருகன் சார் உணமையிலேயே கிரேட்...
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா...
OK
பதிலளிநீக்குt.m.7
துணிவும் நம்பிக்கையும் தூண்டிவிட்டால் சாதிக்கலாம் என்பதற்கு அருமையான உதாரணம் வெற்றிவேல் முருகன் சார்! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குgood post
பதிலளிநீக்குதன்நம்பிக்கையின் மொத்த வடிவம் வெற்றிவேல் எனலாம். தொடர்கின்றேன் ஐயா!
பதிலளிநீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குதொடர்கின்றேன் !!
பதிலளிநீக்குகாலும் கையும் நன்றாக இருக்கும் நானெல்லாம் வெளிநாட்டு வாழ்க்கை பயணம் பற்றி அலுத்துக் கொள்ளவே கூடாது. நம்பிக்கை தரும் தொடர். நன்றி அய்யா
பதிலளிநீக்கு"கைத் தட்டல்கள், வாழ்த்தொலிகள், மகிழ்வான கை குலுக்கல்கள், தாய் தந்தையரின் பாசமான அரவணைப்பு அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, விமானம் ஏறினேன்." எனப் பயணித்தவரின் வெற்றிகளை, சாதனைகளைப் படிக்கத் தொடர்ந்து வருவோம்.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு
தொடருங்கள்
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. உணர்ச்சி மயமான பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள் !
பதிலளிநீக்கு