13 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 14



ஃ பிலடெல்பியா விளையாட்டு மைதானத்தில், பார்வையாளர்கள் அமரக் கூடிய வரிசையில், எங்களுக்கான இருக்கைகளைக் கண்டு பிடித்து அமர்ந்தோம்.

      விளையாட்டுத் திடல், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

      போட்டி தொடங்க ஒரு சில நிமிடங்களே இருக்கும் நிலையில், விளையாட்டு அரங்கின் அதிகாரி ஒருவர், என்னிடம் வந்து ஒரு ஹெட் போனைக் கொடுத்தார்.


       எதற்கு என்றேன்

       அணிந்துதான் பாருங்களேன் என்றார்

       இந்த ஹெட்போனை அணிந்து கொள்வதன் மூலமாக, விளையாட்டு அரங்கில் ஒலிபரப்பாகும், இரண்டு பன்பலை ஒலி பரப்புகளைக் கேட்க முடியும் என்றார்.

       ஹெட்போனை அணிந்து கொண்டேன்.

       போட்டி தொடங்கியவுடன், பன்பலை நிகழ்வுகளும் தொடங்கின. விளையாட்டு மைதான நிகழ்வுகளை, பார்வையற்றோரும் அறிந்து கொள்வதற்கான சிறப்பு வர்னணை அளிப்பதற்கான, பன்பலைகள் இவை என்பது  புரிந்தது.

        கால்பந்தாட்டம் முழுவதையும், பன்பலை மூலம் கேட்டு ரசித்தேன்.

---

      சில நாட்கள் கடந்த நிலையில், என் செலவினங்களைக் குறைக்கும் வகையில், மீண்டும் ஒரு முறை வீடு மாறினேன்.

     மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு அது.

     ஒரு அறையில், டொமினிக் குடியரசில் இருந்து குடிபெயர்ந்த 79 வயதான மரியாள் என்பவர் வசித்து வந்தார்.

     மற்றொரு அறையில் செந்தா கோலன் என்ற ஒரு இளம் பெண் வசித்து வந்தார்.

     மூன்றாவது அறையில் நான் குடியேறினேன்.

     செந்தா நகர வங்கி ஒன்றில், வீட்டுக் கடன் பிரிவில் பணியாற்றி வருபவர். சில நாட்களிலேயே இருவரும் நண்பர்களானோம்.

     இந்நிலையில், இந்திய இராணுவத்தில் பணியாற்றி, தனது ஐம்பத்து ஐந்தாவது வயதில், பார்வையினை இழந்த திரு பாலகிருட்டினன் என்பவருடைய நட்பினைப் பெற்றேன்.

     இந்தியாவில் இருக்கும் பொழுதே திரு பாலகிருட்டினன் அவர்களுக்கு, தன் ஐம்பத்து ஐந்தாவது வயதில், திடீரென்று கண் பார்வை குறையத் தொடங்கியது. 

     மிக மிக மெதுவாக அல்ல, மிக மிக வேகமாக.

     திரு பாலகிருட்டினன் அவர்கள், மூன்றே நாட்களில் முழுவதுமாய் தன் கண் பார்வையினை இழந்தார்.

     

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து, பார்வையற்றோர் தனித்து வாழ்வதற்கானப் பயிற்சியை மேற்கொண்டார்.

     மற்றவர்களை விட, அவர் சிறிதளவு மெதுவான நடையினையேக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுடைய உதவியின்றி, தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவிற்குத் தேறிவிட்டார்.

     அவருடைய இரண்டு மகன்களும், அமெரிக்காவில் நல்ல பணியில் இருந்ததால், இவருக்கு வேண்டிய கருவிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்து, இவரது வாழ்வினை எளிமையாக்கி இருந்தனர்.

       எந்த வயதில் பார்வையினை இழந்தாலும், நம்பிக்கை இருந்தால், நம் சொந்தக் காலில், நாம் நிற்க முடியும் என்ற பாடத்தை, இவரது வாழ்வு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

       திரு பாலகிருட்டினன் அவர்களை எதிர்பாராத விதமாக நியூயார்க்கில் சந்தித்தேன். அப்பொழுது ஏற்பட்ட தொடர்பு, தொடர்ந்தது.

       திரு பாலகிருட்டினன் அவர்கள் பலமுறை என்னுடன் தொடர்பு கொண்டு, தன்னுடன், ஓரிரு நாட்கள் தங்குவதற்காக, வாஷிங்டனுக்கு வருமாறு, அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.

      எனவே வாஷிங்டன் புறப்பட்டேன்.

      வெண்டி, செந்தா இருவரும் சைனா டவுன் பேருந்து நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பினர்.

      மூன்று நாட்களை வாஷிங்டனில் திரு பாலகிருட்டினன் அவர்களுடன் செலவிட்டேன்.

      திரு பாலகிருட்டினன் அவர்களின் அன்பான கவனிப்பில், மூன்று நாட்கள், மூன்று நொடிகளைப் போல் கரைந்தன. 

       மீண்டும் நியூயார்க் புறப்பட்டேன்.

     மாலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய சைனா டவுன் பேருந்து ரத்து செய்யப்பட்டதால், இரவு 8 மணி வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை.

    ஒரு வழியாக 8 மணிப் பேருந்தில் ஏறினேன்.

    செந்தாவை கைபேசி வழி அழைத்தேன்.

    எப்படியும் நியூயார்க் வந்தடைய, இரவு பன்னிரெண்டு மணி ஆகிவிடும் என்பதால், என்னை அழைக்கப் பேருந்து நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும், வீட்டின் கதனைப் பூட்டாமல் வைத்திருக்குமாறும் கூறினேன்.

    பேருந்து, நியூயார்க்கை வந்தடைந்த பொழுது இரவு மணி 12.45, 

    ஒரு மகிழ்வுந்தினைப் பிடித்து ஒரு மணியளவில் வீட்டை அடைந்தேன்.

   வீடு பூட்டப் படாமல் இருந்தது.

   வீட்டிற்குள் நுழைந்து, செந்தாவிற்கு நன்றி கூற, அவரது அறைக் கதவைத் தொட்டேன்.

      அவரது அறைக் கதவும் திறந்தே இருந்தது.

      செந்தா, வந்து விட்டேன். வீட்டின் கதவை எனக்காகத் திறந்து வைத்திருந்ததற்கு நன்றி என்றேன்.

      அடுத்த நொடி, செந்தா ஓடி வந்து, என்னைக் கட்டிப் பிடித்து, இறுக அணைத்து, பிரஞ்சு முத்தம் கொடுக்க முயன்றார்.

                                                                                            தொடர்ந்து பேசுவேன்.





     


26 கருத்துகள்:

  1. எந்த வயதில் பார்வையினை இழந்தாலும், நம்பிக்கை இருந்தால், நம் சொந்தக் காலில், நாம் நிற்க முடியும் என்ற பாடத்தை, இவரது வாழ்வு எனக்குக் கற்றுக் கொடுத்தது.
    இதே போல் என் உறவினர் ஒருவரும் வயதான காலத்தில் தன்னம்பிக்கையோடு வாழ்கிறார்.
    தொடரவும்

    பதிலளிநீக்கு
  2. அந்த பின்னிரவில் கூட விழித்திருந்து உங்கள் வரவுக்கு செந்தா மகிழ்கிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்கணுமா,சீக்கிரம் அதைச் சொல்லுங்க :)

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையூட்டும் விடயங்கள் பலரும் இதை அறிய வேண்டியது திடீர் திருப்பம் தொடர்கிறேன் நண்பரே...
    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இது தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு நல்ல பதிவு.
    முருகன் அவர்களின் கட்டுரை உங்களது கைவண்ணத்தில்
    சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பலரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்திலும் போட்டால் ஆங்கிலம் மட்டுமே படிக்க முடிந்தவர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. தொடர் நல்லா இருக்கு. ஆனால் 'தொடரும்'தான் நல்லா இல்லை. அடுத்தமுறை படிப்பதற்கு முன்பு, எதில் விட்டது என்றெல்லாம் பார்க்கவேண்டியிருக்கிறது.

    இந்தத் தொடருக்கு ஜெ. என்ன இடத்திற்குப் படம் வரைவார் என்று அவதானிப்பது கஷ்டமா?

    தன்'நம்பிக்கை வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரியவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. இந்தத் தொடர் எப்போது மின் நூலக வரும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது அய்யா வாழ்த்துகள்
    தம +

    பதிலளிநீக்கு
  9. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வாசிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டே விறுவிறுப்பாக செல்கிறது பதிவு.

    பதிலளிநீக்கு
  10. தன்னம்பிக்கைத் தொடர்...
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  11. கால்பந்து வர்ணனை, கெட்போன் வசதி நுட்பங்கள் அருமை.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. பார்வை இல்லாதவர்களின் மற்றபுலன்கள் அதிகத் திறன் பெற்றவை என்று கேட்டிருக்கிறேன் என் குடும்பத்திலேயே என் சித்தப்பாவும் என் அம்மாவின் அத்தையும் பார்வை இழந்தவர்கள்/ஒருவர் பிறவியிலேயே பார்வ்சை இல்லாதவர். எல்லோரைப் போலும் தனித்தியங்கும் சக்தி படைத்தவராய் இருந்தார்கள் ஆனால் வெளி நாடுகளுக்குப் போய் எல்லாம் இயங்கவில்லை. முருகன் வியக்க வைக்கிறார்

    பதிலளிநீக்கு
  13. அமெரிக்காவில் கடந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னே நிகழ்த்தியது. ஆரம்பமே அசத்தல்.

    பதிலளிநீக்கு
  14. தொடர்கிறேன். நண்பரே!
    த ம 6

    பதிலளிநீக்கு
  15. சோகத்திலும் ஒரு சந்தோஸத்தை இப்போது முருகன் உணர்வது போல இருக்கு பிரெஞ்சுமுத்தம் கண்டு! தொடர்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  16. செந்தா என்ன செய்தார்?...
    அறிய ஆவல்
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  17. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  18. நல்ல தொடர்...பல செய்திகள். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில். தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு