தமிழ் மொழியை விட்டால்
தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை
வேண்டுகிறேன்.
---------------------------------------
தமிழ்ப்
பொழில் இதழினைக் கண்ணுற்ற புலவர் அ.வரத நஞ்சைய பிள்ளை அவர்கள்,
இவ்விதழினை வாழ்த்தி இயற்றியப் பாடலைப் பாருங்கள்
வாழ்க நம் தமிழ்த்தாய் வாழ்க நம்
தனிமொழி
ஓங்குக மேன்மேல்
ஓங்குக நாடொறும்
ஊழியோர் கணமா
வுலப்பில்பல் லாண்டெலாம்
வாழியர் தமிழகம் மக்களொடு மகிழ்ந்தே
புகழ்பொருள் வேட்காத
கடமை பேணி
முன்னைநாள் நிலைமை
நன்னாராய்ந் திந்நாள்
அன்னையாந் தமிழண்ங்
கரந்தை கூரப்
பிறமொழி கவர்ந்த
புறமொழி நாணித்
தஞ்செயல் மீட்ப
தாமெனத் துணிவுறீஇக்
கரந்தை யூன்றிய
கழகந் தொடங்கின
நான்முத லிதுகாறு
நற்றமிழ்க் குழைத்த
தொண்டின் பயனாத்
தோன்றித் தழைத்தது
தமிழ்ப் பொழில் அம்ம தமிழர்காள் வம்மின்
தாயடி நிழலிற்
றங்கிவெப் பொழிமின்
ஆண்டு தோறும்
நீண்டுவளர் துணராற்
றிங்கட் கோர்
செழுமலர் பூத்து
நறுமணம் வீசி
நலிவுதீர்க் கும்மே
தலைமிசைப் புனைமின்
விழியி லொற்றுமின்
மார்புற அணைமின் தோண்மிசை தாங்குமின்
காட்சிக் கினியது
கைக்குமெல் லியது
நாவிற்கினிய நறுந்தேன்
சுரப்பது
கேட்குஞ் செவிபிற
கேளாது தகைவது
உற்றுநோக் குளத்துக்
குவகைமிக் கீவது,
இம்மை மறுமை
யிரண்டுமிங் களிப்பது
தமிழ்ப் பொழில் தொடங்கிய காலத்தில்,
இவ்விதழின் ஆண்டு சந்தா, சங்க உறுப்பினர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ.2 மட்டுமே
ஆகும். ஏனையோருக்கு ரூ.3 ஆகும்.
தமிழ்ப் பொழிலில் வெளிவரும் கட்டுரைகள், தூய தமிழில் வெளி வந்தன. எனினும்
நடை கடினம் என்று அவ்வப்போது சிலர் குறை கூறியதுண்டு. அதற்கு உமாமகேசுவரனார்
அவர்கள் அளித்த விளக்கம், இன்றும் நாம்
அனைவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.
இறைவன் திருவருளாலும், தமிழ் மக்கள்,
தமிழ்ப் புலவர்கள் ஆதரவாலும், பொழில் பதினாறு ஆண்டு, இப்பங்குனித் திங்களோடு
நிறையப் பெற்றுள்ளது. பொழில் தோன்றிய காலத்தும், பின்னும், எந்தெந்த
வழிகளிலெல்லாம் பொழில் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டுமென்று எண்ணினோமோ, அந்தந்த
வழிகளிலெல்லாம் பயணித்துள்ளது என்று கூறுவதற்கில்லை. ஒருவாறு காலந்தள்ளி வந்தது
என்றே நாம் கூறலாம்.
ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளள ஆங்கில
மொழியையும், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பெழுந்த வடமொழி நூல்களையும், இடர்பாடு
சிறிதுமின்றிக் கற்கவும், கற்று மகிழவும், பிறர்க்குக் கூறிப் பரப்பவும் ஆற்றலுடைய
நம் தமிழகத்துத் தமிழ் மொழியின் தூய சொற்கள், பொருள் விளங்கிப் பயன்தர
ஆற்றாவாயின், அது யாவர் குறை? பயிற்சிக் குறைவன்றோ? சொல்லாலும் பொருளாலும் பேசவும்
எண்ணவும் இனிமை தரும் எம் தாய்மொழி, இன்று இவ்வாறாயிற்றே என்று யாம் வருந்துதல்
பயனென்ன? தமிழோடு தொடர்புடைய வேற்று நாட்டவரும், இம்மொழியின் நன்மை உணர்ந்து
போற்றுமிடத்து, நம்மவர் யாம் பொருளுணர மாட்டோம், யாம் பொருளுணர ஆற்றேம் எனக்
கூறுவது, இதுகாறும் ஏழு வியப்போடு நின்ற இவ்வுலகத்து எழுந்த எட்டாவது வியப்பென்றே
எண்ணுகிறோம்...பொழிலின் நறுமணம் நாற்றிசையும் பரந்து உலகை மகிழ்விக்கத் தமிழ்த்
தெய்வம் துணை செய்வதாக.
பிற மொழிக்
கலப்பில்லாத தூய தமிழைப் பற்றி தமிழ் மக்கள் அறியாதிருப்பது குறித்து உமாமகேசுரனார்
கொண்ட துயரம் இதில் புலனாகிறது.
தமிழ்ப் பொழில்
இதழின் தொடக்க இதழ்கள் தஞ்சை, லாலி அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றன. ஒவ்வொரு
மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் பொழில் இதழானது அச்சாகி வெளி வருவதில்
தாமதமேற்பட்டது. தமிழ் மாதத்தின் முதல் நாளில் பொழில் இதழ் வெளிவர வேண்டும் என்று
உமாமகேசுவரனார் விரும்பினார். ஆனால் அச்சகத்தில ஏற்படும் தடங்கல்கள் காரணமாக,
இதழினை குறிப்பிட்ட தேதிகளில் வெளிக் கொணர்வதில் தொடர்ந்து தடைகள் தோன்றத்
தொடங்கின. இத் தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு உமாமகேசுவரனார் வழி ஒன்றும்
கண்டார். அதுவே இன்றைய கூட்டுறவு அச்சகமாகும்.
நீதிக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய
உமாமகேசுவரனார், கூட்டுறவு இயக்கத்தில்
மிகுந்த ஈடுபாடு உடையவர். கூட்டுறவு சங்கங்கள்
மூலம் வேளாளர், வணிகர், நடுத்தர மக்கள் முதலானோர்க்குக் கடன் கொடுத்து, மிகுந்த
வட்டி வாங்கும் லேவா தேவிக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து,
அவர்களுடைய கடன் சுமையைக் குறைப்பதோடு, அவரவரும் தொழில் செய்து முன்னேற வேண்டும்
என்பது நீதிக் கட்சியின் கொள்கைகளுள் ஒன்றாகும். சில தொழில்களைக் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்று
நடத்த வேண்டும் என்பது அக்கட்சியினரது திட்டமாகும். எனவே நீதிக் கட்சியின் ஆட்சி
காலத்தில், பல கூட்டுறவு சங்கங்கள் தோன்றின. மக்களுக்கு உதவி புரிந்தன.
உமாமகேசுவரனார் அவர்களும் கூட்டுறவு இயக்கத்தில் பங்குகொண்டு, கூட்டுறவுச்
சங்கங்கள் பலவற்றைத் தோற்றுவித்தார்.
திராவிட கூட்டுறவு வங்கி
உமாமகேசுவரனாரின் அரிய முயற்சியால் 1919 ஆம் ஆண்டு, கரந்தையில், திராவிடக்
கூட்டுறவு வங்கி ஒன்று தொடங்கப் பெற்றது.
கூட்டுறவு நிலவள வங்கி
கூட்டுறவு வங்கியினைத் தொடர்ந்து, 10.9.1926இல் உமாமகேசுவரனார் அவர்களால்,
தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றும் தொடங்கப் பெற்றது. இவ்வங்கி தற்போது
தஞ்சை, இராசப்பா நகரில் செயல்பட்டு வருகின்றது.
தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி
விற்பனைக் கழகம்
1939 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியால், தஞ்சாவூர் மாவட்ட
கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. மானோஜியப்பா
வீதியில் தொடங்கப் பெற்ற இக் கழகம், தற்போழுது நாஞ்சிக் கோட்டை சாலையில் இயங்கி
வருகின்றது.
தஞ்சாவூர் கூட்டுறவு அச்சகம்
தமிழ்ப் பொழில்
இதழினை திங்கள்தோறும் தவறாது வெளிக் கொணர விரும்பிய உமாமகேசுவரனார் அவர்கள்,
தமிழன்பர்கள் பலரின் உதவியோடு, கூட்டுறவு முறையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார்.
இக் கூட்டுறவு அச்சகம், 16.2.1927 முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு
அருகிலேயே, இராமர் கோவிலுக்கு அருகில் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் இவ்வச்சகம்
தஞ்சைக் கூட்டுறவு அச்சகம் என்னும் பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் இயங்கி
வருகின்றது. இன்றும் இந்த அச்சகத்திற்குச் செல்வோர், உமாமகேசுவரனாரின் திருஉருவப்
படம், இவ்வச்சகத்தின் வரவேற்பறையை அலங்கரிப்பதைக் காணலாம்.
கூட்டுறவு
அச்சகத்தின் தோற்றத்திற்குப் பின், சங்கத்தின் அனைத்து அச்சுப் பணிகளும், இந்த
அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் பொழில இதழும் காலந் தாழ்த்தாது வெளிவரத்
தொடங்கியது.
1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி,
விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
.....வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும்
சந்திப்போமா
தமிழ் மனம்: ஒன்று
பதிலளிநீக்குதமிழ் சிறக்கட்டும்...
இனிய சுதந்திரம் வாழ்க!.. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..பழைமையின் பெட்டகமாக தகவல்களைத் தருகின்றீர்கள்..இறைவன் திருவருளால் தங்கள் பணி மேலும் சிறந்து விளங்க வேண்டுகின்றேன்!..
பதிலளிநீக்குவாழ்க நம் தமிழ்த்தாய் வாழ்க நம் தனிமொழி*** *
பதிலளிநீக்குஓங்குக மேன்மேல் ஓங்குக நாடொறும்*** *
தமிழ்ப் பொழில் பூத்துக்குலுங்கும்
இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
// 1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி, விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. //
பதிலளிநீக்குகல்லூரியில் படிக்கும்போது நூலகத்தில் தமிழ்ப் பொழில் படித்ததாக நினைவு. இன்றும் தொடர்ந்து வெளிவருவது ஆச்சரியமான, மகிழ்ச்சியான விஷயம்தான். சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
சிறப்பான பகிர்வு... சுதந்திரதின நாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு1954ம் ஆண்டு தீலி.ஜங் ல் ம. தி.த.இந்து கல்லூரியில் இண்டர் படித்துக் கொண்டிருந்தேன் ! சம்ஸ்கிருத மொழி பேராசிரியர் ஆர். ஆர் எனும் ஆர்.ராமமூர்த்தி ! தமிழ்துறை தலைவர் பேராசிரியர் கு. அருணாசல கவுண்டர் ! அவர்தான் தமிழ் பொழில் இதழ் பற்றி கூறினார்! ஆர்.ஆர் தஞ்சாவூர்கரர்! அவரும் தமிழ் பொழிலை விரும்பிப் படிப்பார் ! நினவுகள் அசை போடுகின்றன !---காஸ்யபன்.
பதிலளிநீக்குpani cirakka vaazhththukkaL
நீக்குதந்தை தவறு செய்தான்
பதிலளிநீக்குதாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்துவிட்டோம்
பந்தம் வளர்த்துவிட்டோம்
என்றுஒரு திரைப்படப் பாடல் உண்டு
அதுபோல்தான் தமிழ் மொழியும் அன்றைய
தமிழ் பண்பாடும் அழிந்தமைக்கு காரணம் (இப்போது
இருக்கும் தமிழ் பண்பாடு பண்பாடல்ல -அது
வாய் சொல்லில் வீரம் வளர்ப்பவர்கள் கையில் சிக்கி தவிக்கிறது
.தமிழ் மொழி படும் பாடும் அதுவே )
தமிழின் மாண்பை பறை சாற்றும் உங்கள்
முயற்சியை பாராட்டுகின்ற வேளையில்
பிற மொழிகள்மீது குறை காண்பதை தவிர்க்கவும்.
இங்கிருப்போர் ஆதரவின்றி மற்ற மொழிகள்
தலை தூக்க இயலுமோ என்பதை
சிந்தித்து பார்த்தல் நலம்.
குறையை நம் மீது வைத்துக்கொண்டு
பிறர் மீது குறை கூறி என்ன பயன்?
அரசே தமிழில் கல்வி கற்றவர்களுக்கு
ஆதரவு தருவதில்லை.தமிழை வளர்க்கும்
நூலகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
குப்பைகளை சேர்க்கும் சுவரொட்டி
கலாச்சாரம்தான் இங்கு நடக்கிறது.
உணவு தரும் நஞ்சை நிலங்கள்
நடு தெருக்களாகிவிட்டன
மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும்
தலைவர்கள் பெருகிவிட்டார்கள்.
நல்லோர்கள் அருகிவிட்டார்கள்.
ஈதல் இசைபட வாழ்தல் என்ற
வள்ளுவனின் குரல் ஏட்டில்தான் உள்ளது .
இங்கு இசைந்துபோகும் குணமும் கிடையாது.
நல்லிசையும் கிடையாது.
எல்லோரும் ஒருவரை ஒருவர்
வசை பாடியே வாழ்நாளை ஓட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் எல்லோரிடமும்
தமிழ் உள்ளது.
தமிழ் பற்று உள்ளது .
உரிய வழிகாட்டுதலும்,
ஆதரவும் அளித்தால்
வேம்புபோல் அதுவும் வளரும். உறுதியாக .
அதனுடன் அனைத்து தாவரங்களும் வளரும்.
தமிழர்களிடையே அன்றும் ஒற்றுமை இல்லை
இன்றும் இல்லை. என்றும் இருக்காது.
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
என்றான் ஒரு கவிஞன்
அனைத்து நல்ல குணங்களோடு
தலைக் கனமும் உண்டு
என்பதை மறுத்தல் கூடுமோ?
அதை விட்டாலொழிய
முன்னேற்றம் எது?.
இவன் கூறுவதில் உண்மை காணலாம்
பொறுமையாக சிந்தித்தால்.
1925ல் துவங்கப்பட்ட இதழ் இன்னும் தொடர்ந்து
பதிலளிநீக்குவந்துகொண்டிருக்கிறது என்கிற செய்தி
மிக்க மகிழ்வூட்டுகிறது
அற்புதமான தகவல்களுடன் கூடிய
அருமையான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குஇன்றும் தமிழ்ப் பொழில் விளம்பரமின்றி வருவது பாராட்டுக்குரியது. தொடரட்டும் அதன் தமிழ்ப் பணி
பதிலளிநீக்குசிற்ப்பான பகிர்வுகள். இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம்!
பதிலளிநீக்குசுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
இதந்தரும் வாழ்வில் இனித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
Dear KJ.,
பதிலளிநீக்குI have read the comments on your article about THAMIZH POZHIL. All the comments are encouraging of our magazine and the importance of our mother tongue TAMIL.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவணக்கம்.
இன்றைய தமிழுலகத்திற்குத் தேவையான பதிவிது.
உணரவேண்டியவர்கள் உணரவேண்டிய தருணம் இது.
inrum kidaikkkirathaa! aduththa payanaththil vaankip padikkap paarkkiren. ungal pathivu veilikkonarum ariya seithikal niraivaaka ullana.
பதிலளிநீக்குதமிழை தமிழர்கள்தான் வளர்க்க வேண்டும். அந்த வகையில் தமிழ் பொழில் சிறப்பாக தொடர்ந்து வந்து கொண்டிக்கிறது என்பது மகிழ்வான செய்தி. தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் தமிழ் பொழில் சென்றடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதமிழாசிரியர்களில் வெகுசிலரே -பள்ளி கல்லூரிக்கு அப்பாற்பட்டும்- தமிழ்ப்பணியைத் தொடர்ந்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குபிறதுறை அறிஞர்களின் தமிழ்ப்பணியில் ஒரு தெளிவை நான் பார்த்திருக்கிறேன். தாங்கள் அந்த வகையினர் என்பதறிந்து மகிழ்ந்து, பாராட்டுவதன் அடையாளமாகத் தங்கள் வலையினைத் தொடரும் நட்பு வடடத்தில் சேர்ந்துவிட்டேன். தமிழ்ப் பொழில் போல் உங்கள் பணிகளும் வரலாற்றில் நிற்கும். நன்றி கலந்த வணக்கம்.
ஒரு இதழ் இவ்வாறாகத் தொடர்ந்து வருவது சாதனை. அச்சாதனையைத் தாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் தந்துள்ளமை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதமிழ் மொழியில் இதழொன்று பொழிலாகப் பல்லாண்டுகள் தொடர்ந்து வருதல் மகிழ்வளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
This week very nice .very very great article .thanks .
பதிலளிநீக்குஎழில் மிளிர
பதிலளிநீக்குவளம் செழிக்க
நிமிர்ந்து நிற்கும்
தமிழ்ப் பொலிவிற்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
வாழ்த்துக்கள்...
தமிழ் பொழில் இனிய நற்பணி தொடரட்டும்.
பதிலளிநீக்குநல்ல தகவலும் விடா முயற்சியும் தெரிகிறது.
இறையருள் நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து ,தமிழ் வாழ்க வாசகம் என அரசின் விளமபரங்கள் வளர்ந்த அளவிற்கு நமது மொழி வளர்ச்சி அடைந்ததாக தெரியவில்லை ...இந்நிலையில் தமிழ் பொழில் நற்பணியை வாழ்த்துகிறேன் !
பதிலளிநீக்கு