தமிழ்
பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழால் பாரதி
தகுதி பெற்றதும்
என்னென்று
சொல்வேன்.
பாரதிதாசன்
ஆண்டு 1921. சென்னை திருவல்லிக்கேணி.
பார்த்தசாரதி கோயில். கடந்த இரண்டு நாட்களாகவே, அக்கோயில் யானையின் குணம்
மாறியிருந்தது. அமைதியின்றித் தவித்துக் கொண்டேயிருந்தது. யானையின் பாகன் கூட
அருகில் செல்ல அச்சப்ட்டார்.
கருப்பு கோட், இடையிலோ வெள்ளை வேட்டி,
தலையிலோ முண்டாசு அணிந்த அவர், நெஞ்சம் நிமிர்த்தி, கம்பீரமாக, கையில் தேங்காய்ப்
பழத்துடன் யானையினை நெருங்கினார். இக்கோயிலுக்கு வரும் பொழுதெல்லாம், யானைக்குத்
தேங்காய் பழம் கொடுத்து மகிழ்ச்சி கண்டவர் இவர். இதோ இன்றும் தேங்காய் பழத்துடன்
யானையை நெருங்குகிறார்.
அந்த யானைக்கு மதம் பிடித்துள்ளது. அருகில்
செல்ல வேண்டாம்.
அன்பர்கள் பலர் தடுத்தனர்.
யானையும், யானும் நண்பர்கள். சக்தியின்
வடிவாகவே யானையினைக் காண்பவன் நான். யானை எம்மை ஒன்றும் செய்யாது.
யானையை நெருங்கினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில், மதம் பிடித்த
அந்த யானை, அம் மகா கவியை, தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேல்நோக்கி வீசப்பட்டவர்,
மீண்டும் யானையில் காலடியிலேயே விழுந்து மூர்ச்சையானார்.
காலா நான் சிறு
புல்லென மதிக்கிறேன் என்றன்
காலருகே வாடா,
சற்றே உனை மிதிக்கிறேன்
என யமனுக்கே
சவால் விட்டவர், யானையின் காலடியில்.
மதம் பிடித்த யானையின் அருகில் சென்று, அம்
மாமனிதரைத் தூக்கக் கூட அஞ்சி, அனைவரும் விலகி நின்றே வேடிக்கைப் பார்த்தனர்.
செய்தியறிந்த குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார்,
பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். துணிந்து யானையின் அருகில் சென்று, காலருகே
சுருண்டு கிடந்த, அம் மாமனிதரைத் தூக்கி வந்து மருத்துவ மனையில் சேர்த்தார்.
இரண்டொரு நாளில் எழுந்து நடமாடினாலும், உடல்
நிலை என்னவோ, நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே சென்றது.
நண்பர்களே, இம்மாமனிதர்தான் மகாகவி
பாரதி என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.
இளமையிலேயே, தனது பதினோராம் வயதிலேயே, ஈழக் கவி
ஒருவரால் பாரதி என பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவர் இவர்.
இத்துனை சிறு வயதிலேயே பாரதி பட்டமா? குமுறினான், பொறாமையின் உச்சிக்கே சென்றான்
ஒருவன். அவன் பெயர் காந்திமதி நாதன்.
தம்பி, உன்னால், பாரதி சின்னப் பயல்
என்று முடியுமாறு ஒரு கவி இயற்ற முடியுமா? அறைகூவல் விடுத்தான்.
காரது போல்
நெஞ்சிருண்ட
காந்தி மதி
நாதனைப்
பார் அதி
சின்னப்பயல்
பாடினார்
பாரதி. பாரதியைச் சின்னப் பயலாக நினைத்தவன், அதி சின்னப் பிள்ளையானான். வெட்கித்
தலை குனிந்தான்.
பாரதி, பாட்டுக் கொரு தலைவர் அல்லவா.
நாளேடுகளின் வழி, இச்செய்தியினை அறிந்த
பாரதி, நேரே இராஜாஜியின் இல்லம் சென்று, காந்தியைச் சந்தித்தார்.
எடுத்த எடுப்பிலேயே தன்னை, அறிமுகப்
படுத்திக் கொண்டார்.
நான் பாரதி. இன்று கடற்கரையில், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்துள்ளேன். தாங்கள் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வரமுடியுமா?
காந்தி சிறிது யோசித்தார். பிறகு சொன்னார்.
நீங்கள் நடத்தப் போகும் கூட்டத்தை, ஒரு
நாள் தள்ளி வைத்துக் கொள்ளலாமே?
எதற்காக ஒரு நாள் தள்ளி வைக்கச்
சொல்லுகிறீர்?. விடவில்லை பாரதி.
இன்று நான் வேறொரு கூட்டத்திற்குத் தலைமை
ஏற்க வேண்டும். அதற்காகத்தான்.
அப்படியென்றால் நீங்கள் அந்தக்
கூட்டத்திற்குப் போங்கள். நான் எனது கூட்டத்திற்குப் போகிறேன். ஆனாலும், மிஸ்டர்
காந்தி, நீங்கள் தொடங்கவிருக்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு, என்னுடைய
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலுக்குக் கூட காத்திராமல், அடுத்த நொடி,
கம்பீரமாய் எழுந்து வெளியே சென்று விட்டார் பாரதி.
ஏதோ ஒரு புயலே அடித்து ஓய்ந்தது போல்
இருந்தது.
பாரதி, அன்று, தான் நடத்திய
கூட்டத்தில்தான், இப்பாடலைப் பாடினார்.
வாழ்கநீ
எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று
வறுமை மிஞ்சி,
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு
நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த
காந்தி
மகாத்மாநீ வாழ்க வாழ்க.
மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையைக்
கொளுத்துவோம்
என்று கொதித்து
எழுந்தவர் பாரதி.
ஏட்டையும் பெண்கள்
தொடுவது தீமையென்
றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே
பெண்ணை பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்
என எள்ளி
நகையாடியதும் பாரதிதான்.
பட்டங்கள்
ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில்
பெண்கள்
நடத்த வந்தோம்
என்று
முழங்கியதும் பாரதிதான். இது மட்டுமா,
அச்சமில்லை
யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
உச்சிமீது
வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை
யச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
என்றும் வீறு
கொண்டு முழங்கிய பாரதியின் உடல் நிலை, யானை தூக்கி வீசிய அன்றிலிருந்தே,
மோசாமாகிக் கொண்டேதான் வந்தது. வயிற்றுக் கடுப்பு நோய் வேறு, தன் பங்கிற்குத் தன்
வேலையைக் காட்டத் தொடங்கியது.
மருத்துவர்கள் மருந்துகள் பல, கொடுத்தும்,
உண்ண மறுத்தே வந்தார்.
மருந்துகள் உண்ண மறுப்பதைக் கண்டு
வருந்திய, பாரதியின் மனைவியார், தன் மகள் சகுந்தலாவின் கையினால், மருந்து
கொடுக்கச் சென்னார்.
சகுந்தலா கொடுத்த மருந்தை, மறுக்காது
குடித்த பாரதி, சகுந்தலா, என் அருமை மகளே, நீ மருந்தாக எனக்குக் கொடுத்தது,
மருந்தில்லேம்மா, பார்லி கஞ்சி என்று கூறி, ஒரு கணம் கண் மூடியவர், அடுத்த
நிமிடம், அருகிலிருந்த நண்பர்களைப் பார்த்துக் கூறினார்.
அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி,
ஆபீசுக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்.
மகாகவி பாரதி கடைசியாகப் பேசிய வார்த்தைகள்
இவைதாம். பின் பேசவேயில்லை. கண் திறக்கவும் இல்லை.
1921,
செப்டம்பர் 11
மகாகவி பாரதி
இவ்வுலக
வாழ்வு துறந்த நாள்.
நண்பர்களே,
அந்நாள் இந்நாள்தான்.
செப்டம்பர்
11
பாரதியின்
நினைவு நாள்.
நண்பர்களே, சொல்வதற்கே, கூச்சமாக, அவமானமாக,
வேதனையாக இருக்கிறது, தனது இறவாக் கவிதைகள் மூலம், சுதந்திர உணர்வினை ஊட்டி,
மக்களின் நாடி, நரம்புகளை எல்லாம், முறுக்கேறச் செய்தானே, முண்டாசு முனிவன் பாரதி,
காக்கை
குருவியெங்கள் சாதி நீள்
கடலு மலையு மெங்கள் கூட்டம்
நோக்குந்
திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்,
என்று காக்கைக்
குருவிகளைக் கூட, தன் சாதியாகப் பாடினானே பாரதி, அம் மகாகவி பாரதி இறந்த பின்,
அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையைவிட, இறுதி ஊர்வலத்தில், கலந்து கொண்ட
மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
நண்பர்களே, பாரதியின் இறுதி ஊர்வலத்தில்
இருபது பேர் கூட கலந்து கொள்ளவில்லை, என்பதுதான், வரலாறு சுட்டும் கசப்பான உண்மை.
நண்பர்களே,
மகாகவி
பாரதியின் நினைவு நாளாம்
இந்நாளில்,
பாரதியை,
அம் மகா கவியை
நாமாவது
போற்றுவோமா
பாரதி
புகழ்
வாழ்க
வாழ்க என்று வாழ்த்துவோமா.
பாருள்ளவரை பாரதி புகழ் வாழும்! அருமையான பதிவு! நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅவர்தம் பூதவுடல் மரித்தாலும் புகழுடல் நம்மோடு இன்றும் வாழ்கிறது... உருக்கமான பதிவு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபாரதிக்கு நீங்கள் சமர்ப்பித்த அஞ்சலி மூலமாய் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது !
பதிலளிநீக்குத ம +1
பதிவு மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்க பாரதியின் புகழ்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமரயான பதிவு சார்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருந்தால் மகிழ்வாய் இருந்திருப்பார்
பதிலளிநீக்குஆம் ஐயா
நீக்குபாரதி இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால்
இறவாக் கவிதைகள் பலவற்றைப் படைத்திருப்பார் அல்லவா
சிரஞ்சீவிகளில் பாரதியும் ஒருவர். என்றென்றும் அனைவர் நெஞ்சினிலும் வாழ்ந்திருப்பார்.
பதிலளிநீக்குஆம் சகோதரியாரே
நீக்குபாரதி சிரஞ்சீவிதான்
நன்றி சகோதரியாரே
பாரதியை நன்றியுடன் நினைகூர்ந்த தங்களை இன்று வலைச்சரத்தில் நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குதொடர்க தங்கள் எழுத்துப்பணி.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html
நன்றி.
என்னையும் வலைச் சரத்தில் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குஎன்றும் வேண்டும் இந்த அன்பு
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று அவரின் சிறப்புகளை எழுதி நினைவஞ்சலி செலுத்தும் உங்களைப்போன்ற தமிழறிஞர்கள் இருக்கும் வரை பாரதியின் கவிதைகள் உயிர்ப்போடு தானிருக்கும்! சிறு வயது முதல் பாரதியின் கவிதைகள் வழியே வளர்ந்தவள் நான். உங்களுடன் சேர்ந்து நானும் அவருக்கு நினைவஞ்சலிகளை செலுத்துகிறேன்!!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குஅவரது எழுத்துக்கள் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப் படவில்லை என்னும் குறை இருக்கிறது. பாரதிக்கு நினைவஞ்ச்லி உங்கள் பாணியில் சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குமகாகவி பாரதியின் நினைவு நாளில் சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபாரதியை மகா கவியைப் போற்றுவோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி பதிவிற்கு.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி சகோதரியாரே
நீக்குஎன்றும் நெஞ்சில் இருக்கும் மகாகவிக்கு சிறப்பான நினைவஞ்சலி..
பதிலளிநீக்குவாழ்க மகாகவி பாரதியின் புகழ்!..
பாரதி நினைவு நாளில் மகாவி சுப்ரமண்ய பாரதியைப் போற்றிய கரந்தை ஆசிரியருக்கு நன்றி!
பதிலளிநீக்குTha.ma.4
வணக்கம்,
பதிலளிநீக்குவழக்கம் போல் தங்கள் நடையில் பாரதி கட்டுரை.
பாரதி எழுதியக்கடிதம் பார்த்து பரவசமானேன். நல்ல உழைப்பு.
தொடரட்டும்.....
அன்புடன்,
இரா. சரவணன்
நன்றி நண்பரே
நீக்குபாரதியின் நினைவு நாளில் அவர் துணைவியார் அவரைப் பற்றி ஆற்றிய வானொலி உரை பற்றி கருத்துகள் குறித்த இவனின் பதிவை காண வேண்டுகிறேன்
பதிலளிநீக்குஇணைப்பு இதோ
http://kankaatchi.blogspot.in/2014/05/blog-post_15.html
நன்றி ஐயா
நீக்குஇதோ தங்களின் பதிவினைக் காண வருகிறேன்
அம் மகாகவியின் மனைவியின் பேச்சு கண்களைக் கலங்கச் செய்துவிட்டது ஐயா
நீக்குவரலாற்றுப் பெட்டகத்தைப் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஐயா
வருகைக்கு நன்றி KJ
நீக்குஉங்கள் நண்பர்களையும் படிக்க வேண்டவும்.
நாட்டைப் பற்றி நினைப்பவனுக்கு வீட்டைப் பற்றிய
சிந்தனை வராது. அதன் உருவகம்தான் பாரதி.
கப்பலோட்டிய தமிழனும் நாட்டிற்காக அனைத்தையும் இழந்தார்
நன்றி கெட்ட மாந்தரடா நான் அறிந்த பாடமடா என்று பாடுவோர் இரக்கம் உள்ளோர்
மற்றவர்கள் எல்லாவற்றையும் வசதியாக் மறந்துவிட்டு தங்கள் வசதிகளை தேட சென்று விடுவார்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் நடக்கும் வாடிக்கையான சராசரி மனிதர்களின் குணம்
அவசியம் நண்பர்களைப் படிக்கச் சொல்லுகின்றேன் ஐயா
நீக்குதங்கள் பதிவினை தரவிறக்கம் செய்தும் சேமித்து வைத்துக் கொண்டேன்
நன்றி ஐயா
படித்துவந்தேன்..மனைவியின் பார்வையில் பாரதி பற்றி அறிந்துகொண்டேன், நன்றி
நீக்குஅமரகவி பாரதி வாழ்க...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதமிழிருக்கும்வரை பார''தீ'' என்ற சொல் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி நண்பரே....
பாரதி என்றுமே தீ தான்
நீக்குநன்றி நண்பரே
கண்கள் கலங்கின. மனம் குமுறும் படியான பதிவு.
பதிலளிநீக்குபாரதி வாழ்க அவர் புகழ் மேலும் ஓங்குக ..! என் வாழ்த்துகிறேன் ....!
அருமையான பதிவு .
என் பக்கம் புதிய கவிதை உள்ளது முடிந்தால் பாருங்கள் சகோ .
தங்களின் கவி மனதைக் கனக்கச் செய்கிறது சகோதரியாரே
நீக்குவேதனைகள் விட்டகலும் நாள்
தொலைவில் இல்லை
நன்று நடக்கும் விரைவினிலே
பாரதியை நினைவு கூர்ந்து பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபல செய்திகள்! பலரும் அறியாதன! மிக்க நன்றி!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குபாரதியை நினைவுகூறும் நன்நாள் இது.போறுவோம் பாரதியாரின் நினைவுகளை,படிப்போம் அவரது எழுதுக்களை/
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
பாரதியை நினைவு படுத்தி பதிவாக பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா. அறியாத தகவல்கள் தங்களின் பதிவுவழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம 7வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யாம் அறிந்த புலவரிலே ...
பதிலளிநீக்குஅருமையான பதிவு...நன்றி.. நன்றி... நன்றி...
அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் ஐயா.
பாரதி புகழ் வாழ்க! வாழ்க!
நன்றி சகோதரியாரே
நீக்குகண்டிப்பாக இன்று பாரதியைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்..சரியென்று கண்டேன்! அருமை சகோதரரே! படங்கள் அருமை!
பதிலளிநீக்கு"வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்று கேட்ட பாரதியார் நம் மன இருக்கைகளில் இருந்து வீழவே மாட்டார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்று பாடிய பாரதியைப் பல்லாயிரமாய் போற்றுவோம்!
த.ம.10
பாரதியைப் போற்றுவோம் சகோதரியாரே
நீக்குநன்றி
பாட்டுப் புலவன் பாரதி நினைவு
பதிலளிநீக்குசிறந்த இலக்கியப் பகிர்வு
தொடருங்கள்
நன்றி நண்பரே
நீக்குநானும் கிரேஸ் போல நினைத்தபடியே நீங்க எழுதிருக்கீங்க அண்ணா! அருமையான நினைவேந்தல்:)
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குபாரதி போல் உணர்வுள்ள கவிஞனைக்காண்பதரிது..எத்தனை வீரம் .நினைத்தை கூறியவன்....நல்ல பதிவு வாழ்த்துகள் சகோ...
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு! பாரதியை மறக்க முடியுமோ? தன் சுய மரியாதையை சிறிதளவு கூட விட்டுக் கொடுக்காத அந்த உணர்வு பூர்வமான தொலை நோக்குப் பார்வை கொண்ட மகா கவியாகிய பாரதியை நினைவு கூர்ந்து அருமையான பதிவு இட்டமைக்கு வாழ்த்துக்கள் நன்றி! நண்பரே!
பதிலளிநீக்குஎதிர்கால சந்ததியினரும் பாரதியை அறியவேண்டும் என்பதே அவா. ஏனென்றால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் கற்க அனுமதிப்பதில்லையே!
இன்றைய பெற்றோர்கள், பிள்ளைகளைக் கூட வணிக ரீதியாகவே வளர்க்க விரும்புகின்றனர்.
நீக்குபடிப்பதே சம்பாதிப்பதற்குதான் என்று மாறிவிட்டது
வருத்தத்திற்குரிய மாற்றம்தான் நண்பரே
நன்றி நண்பரே
அய்யா வணக்கம். தங்கள் தளத்திற்குப் பலநாள் கழித்து வருவதற்கு மன்னியுங்கள். மிக அருமையாக, பாரதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தஉங்கள் காலப்பெட்டகப் பதிவுக்கு என் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு“பாரதி சின்னப் பயல்“என்று ஈற்றடி தந்து “இதற்கொரு வெண்பா எழுத முடியுமா?“ என்று காந்திமதிநாதர் கேட்க, அடுத்த நிமிடமே,
“காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பாாரதி சின்னப் பயல்“ (பார் அதி சின்னப்பயல்)
என்று வெண்பாவில் கொடுத் அடிதான் அவ்வடி! செவ்வடி! வாழ்த்துகள் அய்யா.
பல நாள் கழித்து வந்தால் என்ன ஐயா
நீக்குதங்களின் அயராப் பணியினை அறியாதவனா நான்
புத்தக வெளியீட்டு விழாவில் தங்களைச் சந்திக்க ஆவலாய்
காத்திருக்கிறேன் ஐயா
நன்றி
மிக்க அற்புதமான விரிவான ஆக்கம்.நினைவுநாளில் மிகப்பெரிய அர்ப்பணம் இந்த பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் அய்யா.
பதிலளிநீக்குபாரதத்தின் மகாகவியாம் பாரதியைப்பற்றி தாங்கள் வழங்கியுள்ள கவிதை படங்கள் காலம் போற்றும் பொக்கிஷம். பாரதியின் நினைவுநாளை போற்றி மகிழ்வோம்.வாழ்க பாரதி வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு.மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா !! அரிதான புகைப்படங்களுக்கும் நினைவேந்தலுக்கும் மிக்க நன்றி ஐயா ! காந்தியைச் சந்தித்தது போன்ற அறியாத தகவல்களுக்கும் நன்றி .....
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமகாகவிக்கு அருமையானதொரு கட்டுரையை தொடுத்துள்ளீர்கள் ஐயா...
பதிலளிநீக்கு.அற்புதமான சிறப்புப்பதிவு
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
புகைப்படங்கள் தகவல்களுடன்
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை
நன்றி ஐயா
நீக்குசிறப்பான தகவல்கள்....
பதிலளிநீக்குபாரதியின் நினைவு எப்போதும் இருக்கும்.
நன்றி ஐயா
நீக்குபல நாட்களாக வலைப்பக்கம் வராமையால் எத்தனை எத்தனை அருமையான பகிர்வுகளை தவறவிட்டிருக்கிறேன். பாட்டுக்கொரு பாரதி பகிர்வில் வந்ததில் மகிழ்வே.
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குதமிழர்கள் நாம் அனைவரும் பெருமைப் படத்தக்க மகாகவி பாரதியார் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவு இன்றைய இளைஞர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. அவருடைய பிறந்த நாள் [டிசம்பர் 12] இந்த வணிக உலகில் ஒரு நடிகருடைய பிறந்த நாள் புயலில் ஒரு சிலரால் மட்டுமே நினைவுக்கூரப்படுகிறது என்பதும் மனதிற்கு நெருடலாக உள்ளது. மனம் தளராமல் மகாகவி அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.