24 மே 2016

இளமையில் வறுமை



கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என வறுமையின் கொடுமையினைப் பாடுவார் ஔவையார்.

வறுமையான வாழ்வில் திக்கித் திணறியபோதும்,
தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய, மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்
என உரைத்து, தமிழுக்கே தன் வாழ்வு முழுமையையும் ஈந்தத் தமிழறிஞர் இவர்.


எனக்கு வறுமையும் உண்டு
மனைவி மக்களும் உண்டு
அவற்றோடு மானமும் உண்டு
என முழுங்கியவர்.

நச்சினார்க் கினிய நம்பி
சிலுவை வென்ற செல்வராயன்
அருங்கலை வல்லான் அடியார்க்கு நல்லான்
பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்
மடந்தவிர்த்த மங்கைர்க்கரசி
மணிமன்ற வாணன்
இவையெல்லாம், இத்தமிழறிஞர் தன் குழந்தைகளுக்குச் சூட்டிய தனித் தமிழ்ப் பெயர்கள்.

   தன் குழந்தைகளுக்கு மட்டுமா தமிழ்ப் பெயர் சூட்டினார்.

   தன் மகள், மடந் தவிர்த்த மங்கையர்க்கரசி வளர்ந்து, இராபின்சன் என்பாரை மணந்தபோது, தன் மருமகனின் பெயரையும் அறவாணன் என்று மாற்றியப் பெருந்தகை இவர்.

   நினைக்கவே நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா

நானும் என் மனைவியும் ஓருயிரும்
ஈருடலுமாக இருந்தோம்
என, எழுதி எழுதி மகிழ்ந்த இவர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூட பணமில்லாமல், தன் மனைவியை, தன் ஆருயிர் மனைவியை பறிகொடுத்ததுதான் கொடுமையிலும் கொடுமை.

என் மனைவியார் அகுத்தோபர் 27 ஆம் பக்கல் இறந்தார். அன்று மருத்துவச் சாலைக்கு, வாடகை இயங்கியில் அனுப்ப என்னிடம் 10 உரூபா இல்லாதிருந்தது. அனுப்பியிருந்தால் பிழைத்திருப்பார்.

     நண்பர்களே, படிக்கும்போதோ மனம் பதறுகிறது அல்லவா.

     ஒரு மாபெரும் தமிழறிஞர் 10 ரூபாய் இல்லாமையல், தன் அருமை மனைவியை இழந்திருக்கிறார்.

    தன் மனைவி இறந்தபிறகும், தான் உயிரோடு இருப்பதற்கானக் காரணத்தையும், அவரே கூறுகிறார் கேளுங்கள்.

என் மனைவியார் இறந்த அன்றே, என் உலக வாழ்க்கை முடிந்தது.
ஆயினும் முக்கடமைகளை நிறைவேற்றவே இன்று உயிரோடிருக்கிறேன்.
அவற்றுள் ஒன்று வட மொழியினின்று தமிழை மீட்டல்.

மனைவியின் மறைவிற்குப் பிறகும்,
தமிழுக்காகவே
வாழ்ந்த,
இந்தத் தமிழறிஞர் யார் தெரியுமா?

மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டமே
அவன் பேசிய மொழி தமிழே
தமிழே உலக முதன் மொழி
தமிழே திரவிடத்திற்குத் தாய்
தமிழே ஆரியத்திற்கு  மூலம்
என ஆய்ந்து ஆய்ந்து எழுதி நிரூபித்ததவர்.

இவர்தான்,
பாவாணர் பாவலர், நற்றமிழ் நாவலர்
இலக்கியச் செல்வர், இலக்கண வித்தகர்
உரை வேந்தர், கட்டுரை வன்மையர்
நுண்மான் நுழைபுல எழிலர், நுணங்கிய கேள்வியர்
எனப் பலவாறு போற்றப்பெற்ற


தேவநேயப் பாவாணர்.


தேவநேயப் பாவாணரின்
நினைவினைப் போற்றுவோம்



40 கருத்துகள்:

  1. என்ன ஒரு தமிழ் ஆர்வம்...
    பாவாணர் புகழ்...எழுதிய ஆசிரியரே நீவீர் வாழ்க

    பதிலளிநீக்கு
  2. மனம் நெகிழ்கின்றது...

    மாமனிதர் தேவநேயப் பாவாணர்
    தம் நினைவினைப் போற்றுவோம்!..

    பதிலளிநீக்கு
  3. தமிழ் படிக்க ஆர்வம் தூண்டும் பதிவு.

    தேவநேயப் பாவாணர் போற்றப்பட வேண்டியவரே....

    பதிலளிநீக்கு
  4. நெகிழ வைத்த பதிவு...

    பதிலளிநீக்கு
  5. தமிழுக்காகவே வாழ்ந்த சான்றோர்கள் பிறந்த நாட்டில் தான் தமிழ் வெறுக்கப்படும் நிலை அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. தேவநேயப் பாவாணருக்கு வீரவணக்கம்!

    பதிலளிநீக்கு
  7. அவர்தம் நினைவைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  8. வேதனையாக இருக்கு சகோ, எப்பேர்பட்ட மனிதர்,,, பகிர்வுக்கு நன்றி சகோ,,

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள கரந்தையாரே!

    தமிழ் வளர்த்த பெருமகனார் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் வறுமையிலும் தமிழைச் செம்மொழியாக்க பாடுபட்ட அவரின் தொண்டை என்றும் போற்றி வாழ்வோம்.

    த.ம. 2

    பதிலளிநீக்கு
  10. தேவநேயப் பாவாணரின்
    நினைவினைப் போற்றுவோம்

    அருமையான பதிவு.நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தேவநேயப்பாவாணர் பற்றிய செய்திகள் அனைத்தும் சிறப்பு! பத்து ரூபாய் கூட இல்லாமல் மனைவியை இழந்த அவர்தம் வறுமை நிலையிலும் தமிழை வளர்த்தமை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. இள வயதில் வறுமை உணரப்படுவதில்லை வயது வந்து அது பற்றி சிந்திக்கும் போதுதான் வறுமை என்று தெரிகிறது இப்போது தமிழைப் பல மொழிகளிலிருந்து மீட்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  13. தேவநேயப் பாவாணர் அவர்களுக்கு எமது வீரவணக்கம் நண்பரே நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  14. அருமையான நினைவுப் பகிர்வு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சங்கு சுட்டாலும் வெண்மை தரும். வறுமை தேவ'நேயப் பாவாணரின் தமிழ்த் தாகத்தை நீர்த்துவிடச் செய்யவில்லை. இன்றைக்கு நாம் இருக்கும் வாழ்க்கைக்கு (தமிழகத்துக்கு) இவர் போன்று பல பெரியவர்களின் உழைப்பு இருக்கிறது. இத்தகைய பெரியவர்களை அவ்வப்போது நினைவுகூறுமாறு நீங்கள் எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தோழர் ஜீவா, பெரியவர் ம.பொ.சி, மற்றும் பல பல பெரியவர்களால்தான் தமிழ்'நாடு இன்றுள்ள நிலையில் இருக்கிறது. அவர்தம் பெருமையும் புகழும் ஓங்குக.

    பதிலளிநீக்கு
  16. தேவநேயப் பாவணரின் தமிழ் நேயப் பற்றினைப் போற்றி வணங்கிடுவோம் !

    பதிலளிநீக்கு
  17. I am sorry to post in English. I joined Annamalai Univ.library when i was 19 years in 1960. Tamil dept. had 3 branches:1. Tamil Arts 2. Tamil Oriental 3. Tamil research. old Tamil scholars were posted in Research Dept. Sivaprakasadesigar, Devaneyar were there. Devaneyar did not gain a name when he was there. He left and took up his own Thanith tamil service. He is a great Etymologist. Collected all costly dictionaries. Oxford English Dictionary was the costliest set of 32 volumes costing Rs. 1.5 lakhs. When I became the Library Director of Tamil University C.M. M.G.R. provided Rs. 1 crore for the first year to purchase all important books. All the books of eminent publishers were purchased. But I was unable to get OED dictionary for 1.5 lakhs and kept them pending for payment. side by side i purchased the collections of eminent tamil scholars. I was able to get the collections of Devaneya Paavaanar from his son Mathivaanan. I was shocked WHAT OED DICTIONARY I COULD NOT PAY WAS IN THE COLLECTION OF DEVANEYAR. NOW ALL FRIENDS TELL ME DEVANEYAR WAS A RICH PERSON THAN TAMIL UNIV. LIBRARY. HE SACRIFICED ALL HIS DOMESTIC EXPENSES AND WAS ABLE TO GET OED DICTIONARY WHEN WITH A CRORE OF BUDGET I WAS POOR AND KEPT OED DICTIONARY FOR WANT OF MONEY. THINK A MAN WHO DID NOT HAVE RS. 10 TO SEND HIS WIFE TO HOSPITAL IN TIME WAS ABLE TO SPEND RS. 1 LAKH. WHAT IS IMPORTANT? PERSONAL LIFE? OR A LIFE FOR TAMIL? DEVANEYAR WAS THE RICHEST PERSON IN HIS LOVE FOR TAMIL. IN SPITE OF HURDLES TAMIL EXISTS. LET US DO OUR POSSIBLE EFFORTS FOR TAMIL Prof., Dr.T. Padmanaban, Librarian from 1960.

    பதிலளிநீக்கு
  18. அரிய புதிய செய்திகளை அறிந்தேன். அவருடைய மொழி ஈடுபாட்டிற்கு இணையேது? நன்றி.

    பதிலளிநீக்கு
  19. உருக்கமான செய்தி. பாவாணரின் தமிழ்ப் பணியை இந்த தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் வருத்தமான ஒன்று.

    பதிலளிநீக்கு
  20. There is a saying: IF YOU ARE GOOD......YOU CANNOT BE GOOD.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவநேயப் பாவாணர் பற்றிய தகவல்களுக்கு நன்றி

      நீக்கு
  21. உபயோகமானது. தேவநேயப் பாவாணர் பற்றிய தகவல்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. நெகிழ்ச்சியான நினைவுகள்.பெரும்பாலும் இளமையில் இப்படித்தான் கடந்து போகவேண்டியுள்ளது

    பதிலளிநீக்கு
  23. அவரை நினைந்து போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
  24. அவரை நினைந்து போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
  25. அன்னாரை நினைவுகூறுவோம் ...தகவலுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி அய்யா
    தங்களது இலட்சியப் பணிக்காக, கொள்கைக்காக, பரந்துபட்ட மக்கள் நலனுக்காக, பண்பாட்டு வெளிச்சத்திற்காக இப்படி தியாகப் பெருந்தகைகள் பலர் பெரிதும் பேசப்படாத காலத்தில் நாம் வாழ்கிறோம்... ஸோ வாட் என்று கேட்கும் புதிய தாராளமய சந்தைப் பொருளாதார உலகில் நீங்கள் இந்த வரலாற்றுப் பதிவை இடுகை செய்திருப்பது பாராட்டுக்குரியது.

    எஸ் வி வேணுகோபாலன். சென்னை 24
    94452 59691

    பதிலளிநீக்கு
  27. https://www.mediafire.com/folder/hb26psvksqygr/devaneya_pavanar என்ற இணையத்தில் அவரது நூல்களை நீண்ட முயற்சிக்கு பிறகு தொகுத்து வைத்துள்ளேன். பயன்பெறுக. இப்பொழுது பிற இணையபக்கங்களிலும் கிடைக்கலாம். இந்த உயரிய ஆய்வுகளை மேலும் மேம்படுத்த எண்ணியுள்ளோம். இதன் பதிப்புரிமை குறித்த யாரேனும் கூற இயலுமா? tha.uzhavan AT ஜிமெயில் டாட் கொம்.

    பதிலளிநீக்கு
  28. தேவநேயப் பாவாணரின்
    நினைவினைப் போற்றுவோம்//
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  29. தேவநேயப் பாவாணர் எனும்மாமனிதரை போற்றுதல் நம் கடமை

    பதிலளிநீக்கு
  30. good tribute. Dear Sir Now I am working as Camp Officer At Vinayaga mission Dental college.(deemed university at salem)(It is 60km away from home)So; I am using very short time only with internet. so dont mistake me If anything I missed your post and comment.

    பதிலளிநீக்கு
  31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தாய் மொழியின் சிறப்பினை எடுத்துக்காட்டிய பெருந்தகை தேவநேயப் பாவாணர் பற்றிய தங்களின் பதிவு ஆங்கில மோகம் கொண்டோரை கண்டிப்பாக அசைத்து விடும். நல்ல மனிதர்களையும் அவர்தம் நற்செயல்களையும் வெளிப்படுத்தும் பதிவுகளை தொடர்ச்சியாக தாங்கள் பதிவிட்டு வருவது நம் சமூகத்திற்கு செய்யும் அற்புதமான தொண்டு ஆகும். தொண்டினைத் தொடர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. தேவனேயபாவாணர் குறித்த தங்கள் பதிவு அருமை நண்பரே. அறியாத தகவல்கள் பல அறிய முடிகின்றது. மனம் கலங்கச் செய்கிறது அவரது வாழ்வின் நிகழ்வுகள். மாபெரும் மனிதரைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் !

    மறைந்துபோன மாமனிதர்களை நினைவூட்டியமைக்கு நன்றிகள் இவரைப்போல் எல்லோரும் வேண்டாம் ஒருசிலர் வாழ்ந்தாலே போதும் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும் வாழ்ந்து கொண்டே இருக்கும் நாமும் முடிந்தவரை தமிழ் வளர்ப்போம் நன்றி !

    தம +1

    பதிலளிநீக்கு
  34. தேவநேய பாவணரின் நினைவைப்போற்றுவோம்,,,/

    பதிலளிநீக்கு
  35. இன்றைய இளைய தலைமுறைக்கு பாவாணர் போன்றோரை உரிய முறையில் அறிமுகம் செய்யத் தவறி விட்டோம். அதை நீங்கள் சரியாகச் செய்துள்ளீர்கள். வாழ்க நும் தமிழ்ப்பணி.

    பதிலளிநீக்கு
  36. தேவநேயப் பாவாணர் ...ஒரு தெய்வப்பிறவி...வாழ்த்திப்பாராட்டுவோம்..உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு