31 மே 2016

திரை வள்ளல்


    

ஆண்டு 1957,

     சென்னை.

     அது ஒரு மருத்துவமனை.

     மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

       இம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.


     நூற்றுக் கணக்கில் தினம், தினம் பொது மக்கள், ரசிகர்கள், உதவி நாடி வருபவர்கள், திரை உலக பிரபலங்கள் என மருத்துவ மனைக்கு, இவரை நலம் விசாரிக்க வருபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

      இவர் ஓர் சிரிப்பு நடிகர் .சிரிப்பு நடிகர் மட்டுமல்ல வள்ளல், தத்துவவாதி, ஆசிரியர், கலைத் துறையில் எல்லாமுமாகி நிற்பவர்.

     கலைஞன் என்பவன், மனிதர்களிலே ஒருவன், அவன் ஒதுக்கப் படவும் கூடாது, ஒதுங்கி வாழவும் கூடாது. இதை அழுத்தமாகக் கூறியதோடு, செயல்படுத்தியும் வாழ்ந்து வருபவர்.

     பேரன் காலத்து விஞ்ஞானத்தை, பாட்டன் காலத்திலேயே எழுதி, பாட்டாய் பாடியவர்.

    புகழையும், பொருளையும் திகட்டத் திகட்டச் சம்பாதித்தவர்.

   புகழை மட்டும் வைத்துக் கொண்டு, பொருளை எல்லாம், வாரி வாரி வழங்கிய வள்ளல்.

        இல்லை என்று இவரிடம் சென்றால், இல்லை என்று கூறாமல், இருப்பதை எல்லாம், போதும் போதும் என்று கூறும் வரை எடுத்துக் கொடுப்பவர்.

      பணம் இருந்தால் பணம் கொடுப்பார்.

      பணம் இல்லையேல், வீட்டில் இருக்கும் வெள்ளிப் பாத்திரங்களைக் கூட, கொஞ்சமும் தயங்காமல் எடுத்துக் கொடுப்பார்.

     பல திரைப் படங்களை சொந்தமாய் தயாரித்து, இலட்சக் கணக்கில் பொருள் ஈட்டியவர்தான்.

    ஆனாலும், ஓர் படம், ஒரே ஒரு படம், இவர் மொத்தச் செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டது.

    அப் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

    ப ண ம்.

   ஆம் நண்பர்களே, பணம் என்னும் பெயரில் ஓர் படம் எடுத்து, இருந்த பணத்தை எல்லாம் இழந்தார்.

   பணம் போனாலும், குணம் மட்டும் மாறவில்லை.

   கொடுத்துக் கொண்டே இருந்தார்.

   கொடுத்துக் கொண்டே இருந்தவருக்குத்தான், திடீரென்று மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கம்.

   கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்த நிலையில், இதோ மருத்துவ மனையில் படுத்திருக்கிறார்.

    ஆனாலும் முகத்தில் கவலை இல்லை, இல்லையே என்னும் ஏக்கமும் இல்லை.


ஒரு நாள் இவரைப் பார்ப்பதற்கு எம்.ஜி.ஆர் வந்தார்.

     எம்.ஜி.ஆர் மூச்சு விடக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்த காலம் அது.

     இருந்தபோதிலும், பட பிடிப்பையே ரத்து செய்து விட்டு இவரைப் பார்ப்பதற்காக மருத்துவ மனைக்கு ஓடோடி வந்தார்.

     சிறிது நேரம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், புறப்படும் பொழுது, தன் ஜிப்பாவில் இருந்த, இரண்டு பணக் கட்டுக்களை எடுத்து, படுக்கையில் கீழே சொருகி வைத்துவிட்டுப் புறப்பட்டார்.

     எம்.,ஜி.ஆர் அவர்களை வழியனுப்பும் பொருட்டு, படுக்கையில் புரண்டு படுத்தவர், படுக்கையின் கீழ் ,பணக்கட்டுகள் இருப்பதை உணர்ந்து, விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கூப்பிட்டார்.

    ராமச்சந்திரா

   எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்த்தார்.

   ராமச்சந்திரா, ஏன் பணத்தை இப்படி, கட்டு கட்டா வச்சிட்டுப் போறே. சில்லறையா மாத்தி வச்சிட்டுப் போ. வருகிறவர்களுக்குக் கொடுக்க வசதியாக இருக்கும்.

   நம்ப முடிகிறதா நண்பர்களே,

   இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா.

   இந்த நடிகர்
   இந்தச் சிரிப்பு மருத்துவர்

   இந்த மனிதர்
   இந்த மாமனிதர்
   யார் தெரியுமா?

எங்கே தேடுவேன் – பணத்தை
எங்கே தேடுவேன்
திருப்பதி உண்டியலில்
மாட்டிக் கொண்டாயோ?
திருவண்ணாமலை
குகை புகுந்தாயோ
எனப் பாடி விழிப்புணர்வு ஊட்டியர்.

நாட்டுக்குச் சேவை செய்ய
நாகரீக கோமாளி வந்தானைய்யா
என்று பாடியவர்


இவர்தான்
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்.


கலைவாணரின் நினைவினைப் போற்றுவோம்.




     

30 கருத்துகள்:

  1. திரை வள்ளலைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். சிறந்த கலைஞன் மட்டுமல்ல மிகச் சிறந்த மனிதன்.

    பதிலளிநீக்கு
  2. தனது தனித்துவமான குண நலன்களினால்
    என்றும் நினைவில் இருப்பவர் - கலைவாணர் அவர்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு மனிதரைப் பற்றிய அருமையான தகவல்களுடன் கூடிய ஒரு பதிவு...

    கீதா: எங்கள் ஊர் திரை வள்ளல், சிறந்த கலைஞனைப் பற்றி அருமையான தகவல்களுடன் சிறந்த பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி வணக்கங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  4. தங்களது நடை அற்புதம். கணினியை பார்த்து, பார்த்து வறண்ட என் கண்களுக்கு நீரும் கொடுத்து நெகிழ வைத்தார். அவ்வள்ளல்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனிதரைப் பற்றிய ஒரு நல்ல பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  6. இந்தச் செய்தியை ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் உங்கள் நடையிலும் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நானும் இந்தச் சம்பவம் பற்றிப் படித்திருக்கிறேன். தம கணினிக்கு வந்த பிறகுதான் வாக்களிக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  8. வள்ளல் பற்றி அருமையான நினைவுப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இதுவரை அவர் மஞ்சள் காமாலையில் இறந்தது தெரியாது .தெரியாத விஷயத்தை தங்கள் அழகு பாணியில் விவரித்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  10. கலைவாணரைப் பற்றி அறிய அறிய வியப்புதான் மேலோங்குகிறது. வள்ளல் தன்மைக்கு சிறந்த உதாரணமாய் வாழ்ந்துகாட்டியவர். அற்புதமானதொரு நினைவுப்பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு


  11. When we report a biography, it will be complete, only if we tell the rise and decline of the person and also the supporters of the person. When u say N.S.K. people will add T.A.Mathuram. Her sister was married to a lecturer Mr. Rajagopalan. both N.S.K. and T.A. M. will be sitting in the open corridor in front of the house in Chidambaram opposite to Pachaiyappa's high school when i was a student in 1950s. The social status then was in such a way that nobody will go to their house to meet them as the cinema stars were treated as immoral persons. youngsters should know from persons like me crossed 75 years and how social conditions have changed. In 1945 the marriage of Kalaignar M. Karunanidhi with Padmavathi was held in Chidambaram Vilangiyamman koil street, on the street when i was a 4 year old boy to catch the fingers of my pet sister Padmavathi Akka who used to comb my hair style as Kalaignar and i remained so till S.S.L.C. I recollect this to tell u the fact that nobody in the street or town attended the marriage. they considered sunaa. maanaa. kaaran kittavae pogaakkodaathu. all participants were in black shirts. MY POST HAS RELEVANCE TO N.S.K. IN THIS WAY THAT ACTORS WERE DISRESPECTED IN THOSE DAYS. It is only the language TAMIL which served as a weapon to uplift the Tamils to the present status because of the shame and tolerance faced by our Tamil Actors and politicians which should not be forgotten. TAMIL IS OUR SWORD AND TAMIL IS OUR SHIELD. LET US HONOUR OUR SENIORS AND PAY HOMAGE BY ARTICLES OF JAYAKUMAR. LET HIS JOURNEY CONTINUE. PLEASE COLLECT INFORMATION OF THANJAVUR R. RAJAKUMARI OR T.R. RAJAKUMARI WHOSE HOUSE PROPERTIES ARE STILL BEHIND OLD RANI HOTEL. WE BREATHE TAMIL.

    பதிலளிநீக்கு
  12. கலைவாணரின் கொடை உள்ளம் அளப்பரியது! அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. என் எஸ் கே ஒரு வள்ளல் மட்டுமல்ல . தீர்க்க சிந்தனையாளர் அன்றே கிந்தனார் சரித்திரக் காலட்சேபத்தில் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பாடியிருக்கிறார் எல்லோரையும் சமமாக நினைக்கும் ரயில் பாட்டு என்னை கவர்ந்த ஒன்று” கரகரவெனச் சக்கரம் சுழல கனவேகத்தில் ஓடிடும் ரயிலே”

    பதிலளிநீக்கு
  14. கலைவாணர் நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய அறியாத செய்தி அறிந்தேன் நண்பரே நன்றி நேற்றுதான் 30.05.2016 அவரது நினைவுநாள் இது எனக்கும் மறக்க முடியாத நாளாகும்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  15. மலரும் நினைவுகள் !மலர வைத்தீர் கரந்தை நன்றி!

    பதிலளிநீக்கு
  16. கலைவாணர் பற்றிய அருமையான பதிவு. நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  17. அரிய தகவல்கள்,நல்ல பதிவு,

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான மனிதர் பற்றிய பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. வாசித்துக் கொண்டுபோகும் போதே கலைவாணர் என்று புரிந்து கொண்டேன். இருவரும் இரக்க குணம் படைத்தவர்கள்

    பதிலளிநீக்கு
  20. வாசித்துக் கொண்டுபோகும் போதே கலைவாணர் என்று புரிந்து கொண்டேன். இருவரும் இரக்க குணம் படைத்தவர்கள்

    பதிலளிநீக்கு
  21. பல நல்லவர்கள் வாழ்ந்த தேசம் இது. உங்கள் பணி தொடர்க!!!

    பதிலளிநீக்கு
  22. நடிகராய் இருந்த ஒரு நல்ல மனிதரை வெளிச்சமிட்டு இருக்கின்றீர்கள்....அவரின் சிரிப்பை பார்த்திருக்கின்றீர்களா...அப்படி ஒரு கள்ளம் கபடமில்லாத சிரிப்பு...

    அதனால் தான் இன்றும் வாழ்கிறார்..

    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  23. திரை வள்ளல் அவர்களைப் பற்றி அருமையான கட்டுரை.

    சினிமா முதல் தேதியில் அவர் பாடல் அருமையாக இருக்கும்.
    பணம் படம் வரதட்சணையால் பெண் படும் பாடு, பணம்படுத்தும் பாடுகளை அழகாய் சொன்ன படம்.
    தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரே படத்தில் நிறைய நல்ல விஷயங்களை சொன்னார் ஏன் ஓடவில்லை? அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  24. அவர் நடிகர் சந்திரபாபு ஆக இருக்கக்கூடும் என்று நினைத்தேன் !

    பதிலளிநீக்கு
  25. நல்ல மனிதரைப் பற்றிய பகிர்வு,,, தொடருங்கள் சகோ

    பதிலளிநீக்கு
  26. சிறந்த கலைஞன் மட்டுமல்ல மிகச் சிறந்த மனிதன்.
    மிக்க நன்றி...
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  27. அவரை பற்றி படித்திருக்கிறேன் ... நீங்கள் சொன்ன செய்தி புதிய தகவல் எனக்கு ... நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  28. படிக்கும்போதே கலைவாணர் என்பது தெரிந்துவிட்டது. இயல்பான வள்ளல் தன்மை கொண்டவர் அவர். எம்ஜியாரும் அவ்வாறுதான். கலைவாணரின் மனைவியாரும் அவருக்கு ஏற்றவர்களாக வாழ்ந்தார்கள். காலத்தின் கோலம்.. அவரின் கடைசி காலத்தில் இருவரும் துன்புற நேர்ந்தது. இது அவர்களின், (அல்லது கலைவாணரின்) திராவிடச் சிந்தனைகளின் (உண்மையான சுயமரியாதை) காரணமாகவும் இருக்கலாம். அவர் யாருக்கும் கொடுக்காமல், பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால், தகுதியில்லாத வாரிசுகள் அனுபவித்திருக்கலாம். ஆனால், தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்குமாறு வாழ்ந்திருக்கிறார்.

    நீங்கள், நினைவு கூறத்தக்கவர்களை அவ்வப்பொழுது எழுதுவது நிறைவாக இருக்கிறது. வரலாற்றின் பக்கத்தில் இவர்கள் எல்லோரும் மறக்கடிக்கப்படக் கூடாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  29. ராமச்சந்திரா, ஏன் பணத்தை இப்படி, கட்டு கட்டா வச்சிட்டுப் போறே. சில்லறையா மாத்தி வச்சிட்டுப் போ. வருகிறவர்களுக்குக் கொடுக்க வசதியாக இருக்கும்.

    நம்ப முடிகிறதா நண்பர்களே,

    இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா.
    கண்களில் நீரை வரவழைத்த வரிகள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. பிறருக்காகவே பிறந்த பிறவிக் கலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன்..அவரைப் பற்றிய உங்கள் எழுத்தும் மிக நன்றாக இருக்கிறது..நன்றியும் பாராட்டுக்களும்...உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு