என்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
என்றுபணி யாற்றும் இனியநல் ஜெயக்குமாரா
பண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்
உன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகிறேன்
என்று
என்னை மனமார வாழ்த்திய நல் இதயம், தன் துடிப்பினை நிறுத்தி,
விறகுஇடை மூடி அழல்கொடு போட
வெந்து
விழுந்துமு றிந்து நிணங்கள்
உருகி எழும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும்இ லாத உடம்பை
என்னும்
பட்டினத்தாரின் வாக்கிற்கேற்ப, அணலில் கரைந்து, காற்றில் கலந்த காட்சியைக் காணும் துர்பாக்கிய
நிலை.
தமிழை மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட
பெரிய விழாவாக இருந்தாலும், விழாவினை ஏற்பாடு செய்தல், தக்கவரை அழைத்தல், அழைப்பிதழ்
தயார் செய்தல், மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிரலினை வடிவமைத்தல் என ஒவ்வொன்றையும் எனக்குக்
கற்றுக் கொடுத்த ஆசான்.
எனக்கு வழி காட்டியவர்
என்னை நெறிபடுத்தியவர்
இன்று இல்லை. நெஞ்சம் கலங்குகிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் முப்பதாண்டுகள்
புற்றுநோயுடன் தளராது போராட்டம் நடத்தியவர்.
சில மாதங்கள் மட்டுமே இனி தங்கள் வாழ்வு நீடிக்கும்,
என்று ஆங்கில மருத்துவர்கள் கைவிட்ட பிறகும், சித்த மருத்துவத்தை நாடி, முழுதாய் முப்பதாண்டுகள்,
புன்னகையோடு வாழ்ந்து காட்டிய மறவர்.
செய்தியறிந்து காணச் சென்ற, எனது கரம் பற்றி,
அவரருகிலேயே அமரச் செய்து, முழுதாய் ஒரு மணி நேரம் சளைக்காமல் பேசினார்.
கடந்த கால நினைவலைகளில் மூழ்கி, தன் உடல் வலியினையும்
மீறி மகிழ்வோடு பேசினார்.
அடடா
கடலாடி வெள்ளைக் கோழி
கிழடல்ல
மலடல்லவோ
இவ்வரிகளை
தவறின்றி, சரியாக மீண்டும் மீண்டும் கூறி, பயிற்சி மேற்கொண்டால், தமிழ் உச்சரிப்பு
மேம்படும் என்று மீண்டும் மீண்டும் கூறி மகிழ்ந்தார்.
மரணப் படுக்கையில் படுத்தபடி, விழியோரம் கண்ணீர்
கசிய கசிய, உதட்டிலோ புன்னகை வழிய, வழிய, என்
ஆசான் பேசிய பேச்சுக்கள், என் நெஞ்சில் எந்நாளும் நிலைத்திருக்கும்.
புலவர்
சிவ.திருஞானசம்பந்தம்
நேற்று 11.1.2017, புதன் கிழமை காலை 7.00 மணியளவில் விழி மூடி, மீளாத் துயிலில்
ஆழ்ந்தார்.
மாலை 6.30 மணி.
கும்பகோணத்திற்கு அருகில், சாக்கோட்டை என்று
அழைக்கப்படும் சாகாஜிக் கோட்டையில், நாச்சியார் கோயில் சாலையில், நானும், நண்பரும்
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், முதுகலை
ஆசிரியரான திரு மு.பத்மநாபன் அவர்களும் நிற்கிறோம்.
விறகுப் படுக்கையில், ராட்டிகளை உடல் முழுதும்
போர்வையாய் போர்த்தியபடி, இதோ
எங்கள் ஆசான்
எங்கள் வழிகாட்டி
எங்கள் நெறிகாட்டி
எங்கள் நண்பர்
எங்கள் தோழர்.
சாலையை ஒட்டியவாரே மயானம்.
என் ஆசானின் பொன்னுடலுக்கு, அவரது மருமகனார்
தீ மூட்ட, மெல்ல மெல்ல, ஆசானின் உடலினை ஆரத் தழுவி, மெதுவாய், மிகமெதுவாய் மேலெழுகிறது செந்தணல்.
இதோ என் ஆசான், எங்களின் ஆசான் நெருப்போடு நெருப்பாய்,
காற்றோடு காற்றாய் கலந்து கொண்டிருக்கிறார்.
சாலையோரம் நின்றிருந்த மூவருமே, எங்களையும்
அறியாமல் பெருமூச்சு விடுகிறோம்.
காற்றோடு காற்றாய் கலந்த எங்கள் ஆசான், எங்கள்
சுவாசக் காற்றோடு காற்றாய் கலந்து, உள் நுழைந்து, உடலெங்கும் பரவுவதைப் போன்ற உணர்வு.
உடல் சிலிர்க்கிறது.
புறக் கண்களால் இனி எங்கள் ஆசானைக் காண இயலாது.
ஆனாலும், எங்கள் அகத்தோடு அகமாய் இணைந்துவிட்ட,
ஒன்றெனக் கலந்துவிட்ட, எங்கள் ஆசான் உணர்வுகளால் என்றென்றும், எங்கள் உடன் இருப்பார்,
எங்களை வழி நடத்துவார்.
ஆசானுக்கு
எங்கள்
அன்பு வணக்கங்கள்.
தங்களின் துயரத்தில் பங்கெடுக்கிறோம்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்..
பதிலளிநீக்குவருத்தமாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாக இருக்கிறது...
பதிலளிநீக்குஎன் ஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குதங்கள் வருத்தத்தோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்
பதிலளிநீக்குபுறக் கண்களால் - இனி
பதிலளிநீக்குதங்கள் ஆசானைக் காண இயலாது - ஆயினும்
தங்கள் அறிவூட்டல் செயலில் என்றும்
தங்களுக்கு வழிகாட்டி நிற்பார் அவர்!
தங்கள் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்
May GOD bless his soul!
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்
பதிலளிநீக்குமரணம் அனைவர்க்கும் உரியதே, எனினும், நம் மனதிற்குகந்தவர்களின் மரணத்தை நேரில் பார்க்கும் துர்ப்பாக்கியம் சொல்லொணாத் துயரை உண்டாக்குவதை எழுத்தில் வடிக்கவல்லவர்கள் உங்களைப் போன்ற சிலரே. உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குபெருமை மிகு மனிதர், பேறு பெற்றீர்பவருடன் பழக. ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார் ஆன்மா சாந்தி அடைக.
பதிலளிநீக்குஎனது கண்ணீர் அஞ்சலி. இவரைப் பற்றியும், ரொம்ப நாட்கள் கழித்து இவரைச் சந்தித்தது பற்றியும் நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக நினைவு.
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாக இருக்கிறது..
பதிலளிநீக்குஐயா அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..
வருந்துகிறேன் தோழரே. வாசிக்கும் போதே கண்களில் நீர் வழிகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக கொள்கிறேன்
பதிலளிநீக்குவருந்துகிறேன் தோழரே. வாசிக்கும் போதே கண்களில் நீர் வழிகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக கொள்கிறேன்
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குஎன் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குநம்முடைய ஆசான் திரு.சிவ.திருஞானசம்பந்தம் அவர்களின் மறைவு நம் பள்ளி ஆசிரியர், ஆசிரியை பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. என்னிடம் பலரும் தங்களது துக்கத்தினை பகிர்ந்து கொண்டனர். பள்ளியில் முறையாக அவருக்கு புகழஞ்சலி செலுத்தியும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியும் இறுதி மரியாதை செலுத்தினோம். மாணவர்களுக்கும் அவருடைய நல் உள்ளத்தையும் நல் செயல்களையும் தெரிவித்தோம். அவருடைய இல்லத்தரசிக்கு என்றும் தேவைப்படும் உதவி செய்வோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்! தங்கள் ஆசிரியர் போற்றுலதலுக்குரியவர்!.
பதிலளிநீக்குநெருநல் உள்னொருவன் இன்றில்லை என்னும்
பதிலளிநீக்குபெருமை உடைத்து இவ் வுலகு
தந்தை மகற்காற்றும் உதவி இவன் தந்தை
பதிலளிநீக்குஎன்னோற்றான் கொள் எனும் சொல்
எனும் வள்ளுவ வாக்கிற்கு ஏற்ப. உங்களைப் போன்ற மக்களை உருவாக்கிய பெருமையோடு இன்முகம் காட்டி வந்தாரை உபசரிக்கும் பெருமானார் துயிலட்டும் இறையடியில் என்றும் போல் இன்முகத்தோடு.
தந்தை மகற்காற்றும் உதவி இவன் தந்தை
பதிலளிநீக்குஎன்னோற்றான் கொள் எனும் சொல்
எனும் வள்ளுவ வாக்கிற்கு ஏற்ப. உங்களைப் போன்ற மக்களை உருவாக்கிய பெருமையோடு இன்முகம் காட்டி வந்தாரை உபசரிக்கும் பெருமானார் துயிலட்டும் இறையடியில் என்றும் போல் இன்முகத்தோடு.
தந்தை மகற்காற்றும் உதவி இவன் தந்தை
பதிலளிநீக்குஎன்னோற்றான் கொள் எனும் சொல்
எனும் வள்ளுவ வாக்கிற்கு ஏற்ப. உங்களைப் போன்ற மக்களை உருவாக்கிய பெருமையோடு இன்முகம் காட்டி வந்தாரை உபசரிக்கும் பெருமானார் துயிலட்டும் இறையடியில் என்றும் போல் இன்முகத்தோடு.
Nature and Time are competes and compatitors
பதிலளிநீக்குஐயாவுடன் பேசிய நாட்கள் பசுமை ஆனது.மறக்க முடியாத ஆசான்.
பதிலளிநீக்குஐயாவுடன் பேசிய நாட்கள் பசுமை ஆனது.மறக்க முடியாத ஆசான்.
பதிலளிநீக்குசுதாகர் ப
ஆழ்ந்த இரங்கல்கள்...
பதிலளிநீக்குஅவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா...
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள். உங்களது தவிப்பையும் ஏக்கத்தையும் எங்களால் உணர முடிகிறது.
பதிலளிநீக்குபழகியவர்களுக்குத்தான் அந்த பிரிவுத் துயரம் தெரியும்..ஆழ்ந்த இரங்கல்கள்.. அய்யா...
பதிலளிநீக்குஅன்புள்ள ஜெயக்குமார்..
பதிலளிநீக்குவணக்கம். உங்களின் துணையோடு அவரைக் கடைசியாகப் பேட்டி கண்டோம். அவரின் மரணச் செய்தியைத் தாங்கள் கூறிய சூழலில் என்னால் வரவியலாத சங்கடம். ஒப்புக்கொண்ட வாழ்வின் பணி. உயிருடன் இருக்கும்போது எத்தனை மகிழ்ச்சி அவரின் மாணவன் நான் உங்களை பற்றிய என் நூலில் எழுதப்போகிறேன் என்றதும். மனசு நெகிழ்கிறது. அவரை உயிருடன் சந்தித்த அந்த நினைவுகளுடனே இருக்கிறேன். என் நூலில் உயிர்த்திருப்பார்.
ஆழ்ந்த இரங்கல்
பதிலளிநீக்குஉடன் இருந்து பணியாற்றியவரின் இழப்பும் ஊக்குவுத்து உயர்வாக்கிய நல் மனதின் இழப்பும் துயரமும் சொல்லி மாளாததது/
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்..
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்..
பதிலளிநீக்குhttps://kovaikkavi.wordpress.com/
ஆன்மா சாந்தி அடைய இறைவனை
பதிலளிநீக்குஉடுவை