களிமண், சுட்ட பானை, ஓடு, கல்வெட்டு,
பனை ஓலை, துணிச்சீலை, காகிதம் என மாறி மாறி, புதிய பரிணாமம் பெற்று பயணித்த எழுத்துக்கள்,
இன்று வானூர்தி ஏறாமலேயே பறக்கக் கற்றுக் கொண்டுவிட்டன.
கப்பலில் ஏறாமலேயே, பலப் பெருங் கடல்களை, ஒரே
நொடியில் சுலபமாய்த் தாவ எளிதாய் கற்றுக் கொண்டுவிட்டன
கணினி முன் அமர்ந்து, விரல் நோகாமல், விசை தேயாமல்
ஒரே நாளில், கருத்தரித்து, அதே நாளில் பிரசவிக்கும், அதிசயம் அரங்கேறத் தொடங்கி, ஆண்டுகள்
பல ஆகிவிட்டன.
விரல்
நகத்தினும் சிறிதாய் தோன்றும், நினைவு அட்டைக்குள், பல்லாயிரக் கணக்கில் பெரு நூல்கள்,
பெட்டிப் பாம்பாய், அடங்கி ஒடுங்கி, ஒளிந்திருக்கும் பேரதிசயம், இன்று சிறு குழந்தையும்
அறிந்த ஒன்றாய் மாறித்தான் போய்விட்டது.
மணிக் கணக்கில் கடை கடையாய் ஏறி ஏறி, பார்த்துப்
பார்த்து, விலை கேட்டுக் கேட்டு, எடை போட்டுப் போட்டுப் பொருள்களை வாங்கிய காலமெல்லாம்
மறந்தே போய்விட்டது.
கணினி முன் அமர்ந்து, இணையத்துள் நுழைந்து, விசையைத்
தட்டத் தட்ட, கேட்டப் பொருள்கள் எல்லாம், வரிசை வரிசையாய் அஞ்சலில் விரைந்து வந்து,
வீட்டுக் கதவைத் தட்டும் காலம் வந்துவிட்டது.
திரைப்படமும், பாட்டும், நாட்டு நடப்பும் கையடக்க
அலைபேசியில் வரிசை கட்டி வரும்போது, புத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாய் புரட்டிப்
புரட்டிப் படிக்க, இன்றைய இளைஞர்களுக்குத்தான் நேரமேது.
மின்னூல்
காலத்தின் கட்டாயம்
இந்நூற்றாண்டின் புதிய அவதாரம்.
----
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள்முருகன் அவர்களின்
உள்ளத்தில் முகிழ்த்தெழுந்து,
கவிஞர் முத்து நிலவனார் அவர்களின்
அயரா உழைப்பால்,
நேசமிகு வார்த்தைகளால், பாசமிகு அரவணைப்பால்
உரு பெற்றிருக்கும்
புதுகை கணினித் தமிழ்ச் சங்கத்தின்
இலட்சியக் கனவு
இன்று நிறைவேறியிருக்கிறது.
மின்னூல்
முகாம்.
கடந்த 18.1.2017 புதன் கிழமை மாலை, புதுகையின்
மாரீஸ் விடுதியில், மின்னூல் முகாம் எழிலோடு அரங்கேறியது.
குளிரூட்டப் பட்ட சிறு அரங்கு.
கவிஞர்
தங்கம் மூர்த்தி, தயானந்த சந்திரசேகரன், மரு.ஜெயராமன், செம்பை மணவாளன், ஆர்.நீலா, பாவலர்
பொன்.கருப்பையா, வி.பே.கஸ்தூரிநாதன், எஸ்.இளங்கோ, சுவாதி, சு,மதியழகன், மூ.கீதா, சச்சின்
சிவா, முருகபாரதி, சோலச்சி, மீரா.செல்வக்குமார், முருகதாஸ், பேரா மு.பழனியப்பன், அ.செல்வராசு,
நெடுஞ்செழியன், செகந்நாதன், மதுரை செந்தில் குமார், அய்யாறு புகழேந்தி என எழுத்துச்
சிற்பிகளாலும், கவி அருவிகளாலும் ததும்பி வழிந்தது.
மின்னூல் முகாமில் நுழைந்ததுமே ஒரு பொன்னூல்.
மகிழ்வோடு, கவிஞர் அய்யாறு புகழேந்தி அவர்களுக்கு
அருகில் அமர்ந்தேன்.
கவிஞர்
முத்து நிலவன் ஐயா அவர்கள் வரவேற்புரை ஆற்றி, பெங்களூர் புஸ்தகா நிறுவனத்தாரை அறிமுகம்
செய்து வைத்தார்.
புஸ்த்தகா மின்னூல் நிறுவனத்தின் நிறுவுனர்கள் |
புஸ்தகா நிறுவனத்தின் நிறுவனர் திரு ஆர்.பத்மநாபன் அவர்களும், முனைவர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களும், மின்னூலாக்கச் செயற்பாடுகளை பாங்குற எடுத்துரைத்தனர்.
உலகெங்கும் வாழும், தமிழர்களின்,
இல்லங்களில் நுழைந்து, கணினியில் இறங்கி, அவர்தம் உள்ளங்களில் குடியேற இருக்கின்றன.
இணைய
உறவுகளே, நண்பர்களே, சகோதரிகளே, தங்களது எழுத்துக்களை, கவிதைகளை, சிறு கதைகளை, குறுந்
தொடர்களை, பயண அணுபவங்களை மின்னூலாக்க
புதுகை கணினித் தமிழ்ச் சங்கம்
அன்போடு காத்திருக்கிறது.
வருக வருக,
தங்களது படைப்புக்களைத்
தருக தருக
வாழ்த்துகள், பாராட்டுகள். தங்கள் பணி சிறக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅய்யா, வணக்கம். தங்கள் பாணியில் மின்னூலாக்க நிகழ்வை அருமையாக விவரித்திருக்கிறீர்கள் நன்றியும் வணக்கமும்
பதிலளிநீக்குவருகைக்கும் பதிவுக்கும்..
பதிலளிநீக்குவாழ்த்தும்..நன்றியும்
இனிய பதிவு.. மகிழ்ச்சி..
பதிலளிநீக்குஉங்களின் நூல்கள் எத்தனை மின் நூலாக இருக்கின்றன என்பதையும் சொல்லியிருக்கலாமே :)
பதிலளிநீக்குவருங்கால தொழிற்நுட்பத்திற்கு ஒரு அடித்தளம்... மேலும் சிறப்பாக கொண்டு செல்வோம் ஐயா...
பதிலளிநீக்குகாலத்தின் தேவை
பதிலளிநீக்குகாலத்தின் தேவை
பதிலளிநீக்குமின்னூல் - தமிழ் மொழி வரலாற்றில் இன்னொரு மைல்கல். வலைப்பதிவு நண்பர்களின் படைப்புகள் பல மின்னூல்களாய் வருவது மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.....
பதிலளிநீக்குஅருமையான பணித்திட்டத்தை
பதிலளிநீக்குஅழகுற வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்!
மின்நூல் வெளியிட்டோர்
எனது மின்நூல் களஞ்சியத்தில் வைப்பிலிட்டுப் பின் உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே!
https://seebooks4u.blogspot.com/
வாழ்த்துகள் அண்ணா
பதிலளிநீக்குகருத்தரங்கில் பங்கேற்க முடியாமல் போன எனக்குப் பயனுள்ள பதிவு இது.
பதிலளிநீக்குதொன்மை மறவேல் என்பார் ஒளவையார். எனவே மின்னூல் வந்தாலும் தொன்னூலும் தொடரட்டும்.
ரசிக்கத்தக்க விவரணை. நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே தங்களுக்கும்.... புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கத்திற்கும்...
பதிலளிநீக்குகலந்துகொள்ளாக் குறையை உங்களின் பதிவு சரிசெய்துவிட்டது. உங்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். நன்றாகவும் எழுதியிருக்கிறீர்கள். இதுவரை செய்யப்பட்ட மின்னூல்களின் பட்டியல் இருக்கிறதா?
பதிலளிநீக்குஇவர்களது புஸ்தகா.காம் இல் நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
நீக்குfreetamilebooks.com இலவசமாய் மின்னூல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் projectmadurai என்னும் தளத்தில் சங்க இலக்கியங்களில் இருந்து கல்கி, வரையிலான மின்நூல்களை இலவசமாய் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் நண்பரே
நானும் என்படைப்பு ஒன்றினை மின் நூலாக்கும் முயற்சியில் இருக்கிறேன் மின் நூலாக்குவதால் காப்பி ரைட்ஸ் என்று ஏதாவது உள்ளதா
பதிலளிநீக்குஐயா காப்பி ரைட்ஸ் என்பது எப்பொழுதும் எழுத்தாளரையேச் சாரும்.புஸ்தகா தளத்தினைப் பொறுத்தவரை மின்னூலுக்கு மட்டுமே, மற்றபடி தாங்கள் மறு பதிப்பு வெளியிடவிரும்பினால்,தங்கள் விருப்பம் போல் வெளியிடலாம்.அதற்குத் தடையொன்றுமில்லை.
நீக்குஅருமை அருமை நண்பரே!
பதிலளிநீக்குமிக அருமை.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்.
தமிழ்மணம் 8
https://kovaikkavi.wordpress.com/
மின்னூல் முகாம் பற்றிய செய்திகளை விரிவாகத் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி. உங்கள் ஆக்கங்களும் மின்னூல் ஆவதறிந்து மகிழ்ச்சியும், வாழ்த்தும். இன்னும் பல ஆக்கங்கள் மின்னூலாகவேண்டும் என வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குமிக அருமை! விரிவான விபரங்களுக்கு அன்பு நன்றி!!
பதிலளிநீக்குமின்னூல் முகாம் பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.. தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்தும்
பதிலளிநீக்குஉடுவை
மகிழ்ச்சி...
பதிலளிநீக்குமகிழ்ச்சி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! அருமையான அழகான தங்கள் இனிய மொழிநடையில் தொகுப்பு!!! விரிவான பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குநிகழ்வு குறித்தும் மிகப் சிறப்பான பதிவு தோழர்
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்கு