05 ஏப்ரல் 2025

இசையின் எதிரொலிகள்

 

     எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

29 மார்ச் 2025

படத்திறப்பு

 



     படத் திறப்பு,

     படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச் செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.

     நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும், செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.

     படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?

21 மார்ச் 2025

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு புதிய பார்வை

 

தமிழ்ப் புத்தாண்டு எது?

     என்று தொடங்குகிறது?

     தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

     சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

15 மார்ச் 2025

ஐந்திணைப் பெருவாழ்வு

 


     குரங்கு.

     மனிதக் குரங்கு.

     மனிதக் குரங்குகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் ஒருவர்.

03 மார்ச் 2025

பெரியாரும், உமாமகேசரும்

 


     தமிழின் இழந்த பெருமைகளை மீட்கவும், எப்பொழுதெல்லாம் தமிழர் மொழி, நாகரிகக் கலைகள் குலைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளைக் காப்பதற்காக,

28 பிப்ரவரி 2025

மூங்கில்

  


மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்.

மனச்சுமையை இறக்கிவைத்து

மாளாத கண்ணீரைக்

கொட்டி மனம் கழுவுவதற்கே

மடி வேண்டும் – ஒரு

மடி வேண்டும்

20 பிப்ரவரி 2025

ஈரச்சுவடு

     என்ன செய்யச் சொல்ற, ஒம் பேச்சுலயும், நீ பக்கத்துல ஒக்காந்து வர்ற சந்தோசத்துலயும், புத்திய பறிகொடுத்துட்டேன்.

     அது இந்த 61 ல எனக்கும், 58 ல ஒனக்கும் வாய்ச்சிருக்கு.

     ஊம், வாய்க்கும் வாய்க்கும், கொமட்டுல நாலு இடி இடிச்சா.

     துள்ளி விளையாடுதோ கெழம்?.

15 பிப்ரவரி 2025

விதைப் பொறுக்கு விழா

 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்

இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்

அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்

ஔடத மூலிகை பூண்டுபுல் யாவும்

எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ

06 பிப்ரவரி 2025

தமிழகமே வளர்த்த சங்கம்

 

     அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.

01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

 

     ஆண்டு 1948.

     பாபநாசம்.

     தஞ்சை மாவட்டம்.

     காலை 10.00 மணி.

     அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.

     பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.

24 ஜனவரி 2025

கரந்தை

 


     கரந்தையில் பிறந்தவன் நான்.

     கரந்தையில் வளர்ந்தவன் நான்.

     கரந்தையில் படித்தவன் நான்.

     கரந்தையில் பணியாற்றியவன் நான்.

19 ஜனவரி 2025

தமிழர் அறநெறிக் கழகம்

 


     பர்மா.

     பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு, தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.

      பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய காலமும் உண்டு.

      பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.

07 ஜனவரி 2025

இராசாளியார்

 


மாணவர் கழகம், மருந்தருள் சாலை,

பேணு மன்ன சத்திர மிவற்றை

புதுக்கிய புண்ணிய புனிதமா தவனா

நிலமதை யளந்த நெடுமுடி யண்ணறன்

மலர்ப்பத மறவா மாண்பமை மனத்தோய்