13 மே 2024

அம்மா

 


     அம்மா.

     அம்மா இவ்வுலக வாழ்வு துறந்து, நெருப்பில் கலந்து, சாம்பலாய் மேலெழுந்து காற்றில் கரைந்து, முழுமையாய் ஓர் ஆண்டு கடந்து விட்டது.

     என் அப்பா, படுக்கையில் வீழாமல், ஓரிரு நிமிடங்களில் அமைதியாய், கொஞ்சமும் சிரமப்படாமல் மூச்சைத் துறந்தவர்.

     தந்தையின் பிரிவிற்குப் பின், தாயின் முதுகு அதிகமாய் வளைந்து போனது.

     தந்தையின் பிரிவு தந்த அதிர்ச்சியில் நினைவு அகன்று போனது.

19 ஏப்ரல் 2024

வணங்குகிறேன் தாயே

 


     இந்நாள்.

     ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள்.

     என் நெஞ்சில் நிரந்தரமாய் நிலைத்துவிட்ட கருப்பு நாள்.

07 ஏப்ரல் 2024

ஆற்றோரம் வாரீர்

 


நீரின்றி அமையாது உலகென்று அதனை வகைப்படுத்த

ஆறின்றி இயலாது என உணர்ந்தனர்.

ஆறு கண்டார், அதனால் சோறு கண்டார் – எத்தனை

29 மார்ச் 2024

அ.ச.ஞா

 



     1925 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் நடைபெற்ற, சைவர்கள் மகாநாட்டில் மேடையேறி, மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசி, அனைவரையும் வியக்க வைத்தபோது, அச்சிறுவனின் வயது ஒன்பது.

23 மார்ச் 2024

26 பிப்ரவரி 2024

காந்தியின் நிழல்

     


 ஆண்டு 1942.

     ஆகாகான்அரண்மனை.

     மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், எரவாடா பகுதியில், 1892 ஆம் ஆண்டு, சுல்தான் முன்றாம் முகமது ஷா அவர்களால் கட்டப்பெற்ற அரண்மனை.

     மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர்.

     சுல்தான் தனக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையை, ஆங்கிலேய அரசு சிறைச்சாலையாக மாற்றி இருந்தது.

      மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.

     ஆங்கிலேய அரசு வெகுண்டு எழுந்தது.

     காந்தியைக் கைது செய்தது.

     ஆகாகான் அரண்மனையில் காவலில் வைத்தது.

     காந்தியை மட்டுமல்ல, காந்தியோடு, காந்திய இயக்கவாதிகள் பலரையும் கைது செய்து, இங்குதான் வைத்தது.

     1942 ஆகஸ்ட் 15.

     திடீரென்று அரண்மனை பரபரப்படைந்தது.

17 பிப்ரவரி 2024

பிஷ்னோய்

 


 

     ஈஸ்டர் தீவு.

     சிலி நாட்டின் தீவு.

     சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த தீவு.

     ஒரு காலத்தில் ஐம்பதாயிரம் மக்களால் நிரம்பித் ததும்பியத் தீவு.

     இத்தீவின் தலைவருக்குத் திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது.

01 பிப்ரவரி 2024

நான் இங்கே இருந்தேன்



      ஆண்டு 1879.

     அது ஒரு பெரும் குகை.

     ஒரு தந்தை, தன் மகளுடன் அக்குகையில் மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்.

     பன்னிரெண்டே வயதான அவரது மகள், திடீரெனக் கத்தினாள்.

     அப்பா, உங்களுக்குப் பின்னால், ஒரு காட்டெருமை நிற்கிறது.

18 ஜனவரி 2024

ஓர் உளி, எழுதுகோலான கதை

 


     ஆண்டு 1945.

     கரந்தை.

     வடவாற்றங்கரையின், தென் கரைக்கு அருகில் அமைந்துள்ள, பாலோபா நந்தவனம் கோயிலுக்கு முன்புறம், ஒரு பெரும் கல்லால், ஒரு நவக்கிரக மேடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     ஓர் இளைஞர், இடுப்பில் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு, கலைந்த தலை, வெற்றிலை போட்டுப் போட்டு கறை படிந்த பற்களுடன், பெரும் கல் ஒன்றினைக் கொத்தி சீரமைக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார்.

03 ஜனவரி 2024

கண்டேன் உறவை

     என் தாய், சகுந்தலா அம்மையார் மறைந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன.

     நான்கு மாதங்களில், முதலாமாண்டு நினைவு நாள் வருகிறது.