28 மே 2014

வலை உறவுகள்


கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

எனப் பாடுவார் புரட்சிக் கவி, பாவேந்தர் பாரதிதாசன். இத்தகைய உயிரணையத் தமிழை, உலகெலாம் பரப்ப, இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பேராயுதம்தான் இணையம்.

22 மே 2014

பஞ்சர் மாயா

     

நண்பர்களே, உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், பொருளீட்டித்தான் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் என்று உரைத்து, தொழிலைத் தெய்வத்திற்கு நிகரான நிலையில் வைத்தனர் நம் முன்னோர்.

     தொழிலில்தான் எத்தனை எத்தனை வகைகள், எத்தனை எத்தனை முறைகள். செய்யும் தொழிலைக்கூட சேவையாகச் செய்பவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மனிதரைக் கடந்த வாரம் சந்தித்தேன்.

14 மே 2014

நூற்றாண்டுத் தனிமை


ஆண்டு 1965. மாதம் ஜனவரி. ஓட்டு மொத்தக் குடும்பமும், விடுமுறையினைக் கழிக்க, அகாபுல்கோ என்னும் ஊருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் வாகனத்தை ஓட்டிச் செல்ல, அருகில் மனைவி, பின் இருக்கைகளில், அவர்களது இரு மகன்கள்.

    எத்தனை நாளாய் திட்டமிட்டப் பயணம். இன்றுதான் கைகூடியிருகிறது. மகன்கள் இருவரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தனர். தாயும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே வருகிறார். ஆனால் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்.

       கைகளும், கால்களும் அணிச்சை செயலாய் வாகனத்தை இயக்குகின்றன. இன்று நேற்றல்ல, இந்த சிந்தனை, அவஸ்த்தை, வேதனை எல்லாம். ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது ஆண்டுகாலமாய் அவஸ்த்தையும், வேதனையும், இருபத்து நான்கு மணி நேரமும் அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

08 மே 2014

பிள்ளைப் பிடிக்கப் போறீங்களா..

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
                           - மகாகவி பாரதி

     ஆசிரியர்களுக்கு என்ன குறைச்சல், கை நிறைய சம்பளம், காலாண்டு தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, அரையாண்டுத் தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, முழு ஆண்டுத் தேர்வு முடிந்தால் ஒன்றரை மாத விடுமுறை. கொடுத்து வைத்தவர்களய்யா.

01 மே 2014

ஹியூகோ சாவேஸ்

     

ஆண்டு 2002, ஏப்ரல் 11. நாடு முழுக்கக் கலவரம் பரவத் தொடங்கியது. அரசுக்கு ஆதரவுக் கூட்டம் ஒரு புறம், கலகக்காரர்கள் ஒரு புறம் என மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. கலகக்காரர்களுடன், இராணுவ ஜெனரல்கள் சிலரும் கை கோர்க்கவே, கலவரம் போர்க் களமாய் மாறியது.