27 ஏப்ரல் 2017

மேதையின் வகுப்பறையில்



     ஆண்டு 1904.

     காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.

     கரை புரண்டு ஓடும் காவிரி

     கல்லூரிக்குச் செல்வதற்கு ஒரே வழி தோணி.

     தோணியில் மிதந்து பயணித்தால்தான், கல்லூரி மண்ணில் கால் பதிக்கலாம்.

      காவிரியில் தண்ணீர் இல்லாத காலம் எனில், சுட்டுப் பொசுக்கும் மணலில், கால்கள் நோக நோக நடந்தாக வேண்டும்.

      மொத்தத்தில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்லூரியை அணுகவே, பெரு முயற்சி செய்தாக வேண்டும்.

23 ஏப்ரல் 2017

மீண்டும் வந்தியத்தேவன்




     ஆண்டு 1950.

     கும்பகோணம்.

      தங்கம்.

     அந்தச் சிறுவனின் பெயர் தங்கம்.

     முழுப் பெயர் தங்கமுத்து.

     ஆனால் அனைவரும் தங்கம், தங்கம் என்றே அந்தச் சிறுவனை அழைத்தனர்.

      பெயர்தான் தங்கம்.

      ஒரு குண்டுமணி தங்கம் கூட வீட்டில் இல்லை.

       தந்தையும் இல்லை.

       அன்பும், ஏழ்மையும் போட்டிப் போட்டு நிரம்பி வழியும் வீடு.

18 ஏப்ரல் 2017

வன நாயகன்




நான் சுதாவுக்காகப் பேசி, ஃபிரியா ரிட்டன் டிக்கெட்டும், ஒரு மாதச் சம்பளமும் தரச் சொல்லியிருக்கேன். ஊருக்குப் போற வரைக்கும், கெஸ்ட் ஹவுஸ்ல்லயே தங்கிக்கட்டும் பிரச்சினையில்ல.

     அவங்களுக்கு வேற பிரஷர்.

     நான் பேசாட்டி, அதுவும் குடுத்துருக்க மாட்டானுங்க.

14 ஏப்ரல் 2017

யாவருக்கும் மருத்துவக் கல்வி


     காளாஸ்திரி.

       பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதி.

     புதிதாய் ஒரு குடும்பம், ஒரு பணக்காரக் குடும்பம், அக்கால வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஒரு ஜமீன் குடும்பம், காளாஸ்திரியில், ஒரு பெரும் மாளிகையினையே விலைக்கு வாங்கிக், குடியேறியது.

     ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தின், பானகல்லு என்னும் கிராமத்தில் இருந்த, இந்த ஜமீன் குடும்பம், காளாஸ்திரியைத், தன் புது இருப்பிடமாக்கிக் கொண்டது.

07 ஏப்ரல் 2017

அலோக் சாகர்


     
   
      ஆண்டு 2016.
      மே மாதம்.

     மத்தியப் பிரதேசம்.

     கோரதாங்கரி மாவட்டம்.

     கோசமு கிராமம்.

     கோசமு கிராமம் மட்டுமல்ல, கோரதாங்கரி மாவட்டமே பரபரப்பின் பிடியில் இருந்தது.

01 ஏப்ரல் 2017

வேண்டாம் விருது



      ஆண்டு 1954.

      இயற்பியல் துறைப் பேராசிரியர் அவர்.

      பேராசிரியர் என்றால், சாதாரணப் பேராசிரியரல்ல.

      நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      1930 லேயே நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      தனது இருக்கையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்தக் கடிதங்களை எல்லாம், ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.

      நடுவண் அரசிடமிருந்து ஒரு கடிதம்.

      அரசிடமிருந்து தனக்குக் கடிதமா?

      யோசித்தவாரே, கடிதத்தை மெல்லப் பிரிக்கிறார்.