29 நவம்பர் 2016

வீர வணக்கம்


நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

23 நவம்பர் 2016

வைத்தீசுவர பிரபு





தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
     சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என வாழும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு இடையே, இவர் ஓர் உன்னத மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

    ஆசிரியர் பணி என்பது அறப் பணிதான். ஆனாலும் ஆசிரியர்கள் இன்று, சந்திக்கும் சவால்கள் ஏராளம் ஏராளம்.

20 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 15


            

   செந்தா என் அருகில் வந்தது எனக்குத் தெரியாது.

       என்னைக் கட்டிப் பிடித்ததும்தான், நிலைமையை உணர்ந்தேன்.

      திமிறிக் கொண்டு விலகினேன்.

13 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 14



ஃ பிலடெல்பியா விளையாட்டு மைதானத்தில், பார்வையாளர்கள் அமரக் கூடிய வரிசையில், எங்களுக்கான இருக்கைகளைக் கண்டு பிடித்து அமர்ந்தோம்.

      விளையாட்டுத் திடல், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

      போட்டி தொடங்க ஒரு சில நிமிடங்களே இருக்கும் நிலையில், விளையாட்டு அரங்கின் அதிகாரி ஒருவர், என்னிடம் வந்து ஒரு ஹெட் போனைக் கொடுத்தார்.

07 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 13



  உண்மையில் நடந்தது என்ன எனில், நான் கை வைத்திருந்த பெட்டி அசைந்தது, கதவு திறந்ததால் அல்ல, அந்த வண்டியானது, நடைமேடையில் இருந்து நகர்ந்ததால் ஏற்பட்ட அசைவு.

       அவசரத்தில் அதை சரியாக உணராததன் விளைவு, இதோ தண்டவாளத்தில் விழுந்து கிடக்கின்றேன்.