31 மார்ச் 2016

இந்தியாவின் மகள்


    

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, 24.60 கோடி இந்தியக் குடும்பங்களில், 67 சதவீத மக்கள் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர். மீதி 33 சதவீத மக்கள் மண்ணென்ணெய் விளக்கில்தான் இரவில் வெளிச்சம் பெறுகின்றனர்.

     இந்தியாவின் மின் சக்தியின் தேவை, நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

      நாம் என்ன செய்யப் போகிறோம்

      இதை எப்படி எதிர்கொள்வது?

      வருங்கால சந்ததிகளுக்கு, ஒளிமயமான எதிர்காலத்திற்கு என்ன வழி செய்யப் போகிறோம்?

25 மார்ச் 2016

மது விலக்கு நாயகர்




     ஆண்டு 1947, மார்ச் 23.

      தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் மகத்தான ஆதரவுடன், அம்மனிதர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்ற நாள். நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

     பதவி ஏற்றவுடன் கட்சிக்காரர்களை அழைத்தார். உத்தரவு போட்டார்.

    பாராட்டு விழாக்கள் கூடாது, கூடவே கூடாது.

18 மார்ச் 2016

பங்களா கொட்டா




     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

12 மார்ச் 2016

கடவுள் கைவிட்டார்


இருப்பதுபொய் போவதுமெய் என்றுஎண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினைஉன் னாதே – பருத்ததொந்தி
நம்மதுஎன்று நாம்இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதுஎன்று தாம் இருக்கும் தான்.

என்று பாடுவாரே ஒரு சித்தர் நினைவிருக்கிறதா. இச்சித்தர் இப்புவியில் இறுதியாய் நடமாடிய மண்ணில், கடற்கரை மணலில், கடந்த 4.3.2016 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 11.00 மணியளவில், நானும் கால் பதித்தேன்.

     சித்தர் இறுதியாய் சுவாசித்த, இக்கடற்கரைக் காற்றை நானும் மெல்ல மெல்ல சுவாசித்தேன்.

06 மார்ச் 2016

உள்ளம் கவர் பதிவர்கள்

    

புதுகைக் கவிஞர், கணினித் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடமிருந்து ஓர் உத்தரவு, ஓர் அன்புக் கட்டளை, இணைய வழி பறந்து வந்தது.

மனம் கவர் பதிவர்கள் பற்றி ஓர் பதிவு எழுதுக.

      மீற முடியுமா? கால அவகாசம் மட்டும் கொடுங்கள் ஐயா? என அனுமதி கேட்டிருந்தேன் .தேர்வுக் காலம் அல்லவா.

      இதோ, தங்களின் எழுத்துக்களாலும், சிந்தனைகளாலும், செயற்கரியச் செயல்களாலும், என் உள்ளம் கவர்ந்த பதிவர்ககளில், ஒரு சிலரை மட்டும் இப்பதிவில் சந்திக்கலாம், வாருங்கள்.