30 ஜூலை 2014

கல்பனா தத்

         

ஆண்டு 1940. தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. மீண்டும், மீண்டும் அக்கடிதத்தை வாசிக்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்து வந்திருக்கிறது இக்கடிதம். உடனே பதில் கடிதம் எழுதுகிறார்.

     உனது கடிதம் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீ விடுதலை பெற்றிருக்கிறாய். நாள்தோறும் அமைதியும், ஆக்கமும் பெற்று வளர்வாயாக. நமது நாட்டில் இன்னும் எத்தனையோ காரியங்கள் நடைபெற இருக்கின்றன. அவற்றிற்குக் கலவரம் அடையாமல்  இருக்க, ஒழுங்கிய பயின்ற திண்ணிய மனது தேவை. நீ பெற்ற துன்பமயமான அனுபவம், உனது வாழ்க்கைக்குப் பூரணப் பொலியை அளிக்கட்டும். எனது ஆசீர்வாதம் இதுவே.

22 ஜூலை 2014

மீட்பர்


ஆண்டு 1925. அந்தக் குடும்பமும், அக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களும், அந்தக் கோயிலில் கூடியிருந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், அந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. எனவே இறைவனை வேண்டிக் கொண்டனர். இறைவனே, எங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை அருளுங்கள். எங்கள் குலம் தழைக்கக் கருணை காட்டுங்கள். முதல் குழந்தை பிறந்து, அதுவும் பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தையை உனக்கே அர்ப்பணிக்கிறோம். இறைவா, எங்களுக்குக் குழந்தை கொடு.

15 ஜூலை 2014

படிக்காத மேதை





தங்கமே, தண்பொதிகைச் சாரலே, தண்ணிலவே
சிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
                                          - கண்ணதாசன்

     மகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.

     மகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர். வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.

14 ஜூலை 2014

நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்


நண்பர்களே, நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கணித மேதை சீனிவாச இராமானுஜன் மீது, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. எனது எம்.ஃ.பில்., படிப்பிற்காக, நான் எடுத்துக் கொண்ட தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.

     எம்.ஃ.பில்., படிப்பிற்காக, இராமானுஜன் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோதுதான், உண்மையிலேயே இராமானுஜன் யார் என்பது புரிந்தது. அதன்பின், இராமானுஜன் மீதிருந்த ஈடுபாடானது, காதலாகவே மாறியது.

10 ஜூலை 2014

அடுத்த பக்கத்தில் .....

     

ஒன்று, இரண்டு, மூன்று, ......... பத்தொன்பது, இருபது. பொறுமையாக எண்ணினான். மொத்தம் இருபது மாத்திரைகள். இருபதும் தூக்க மாத்திரைகள். இருபதையும் விழுங்கி விட்டால். தூக்கம்தான், நிரந்தரத் தூக்கம்தான். அருகிலேயே ஒரு விஸ்கி பாட்டில்.

03 ஜூலை 2014

விண்ணில் கரைந்தவர்

     

ஆண்டு 2003. சனவரி 16. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, கொலம்பியா விண்கலம் விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலத்தின் வேகம் மணிக்கு 17,000 மைல். வெறும் 90 நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றி வந்துவிடலாம்.

     அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, டென்மார்க் முதலிய பதினாறு நாடுகள், கரம் கோர்த்து, 2500 கோடி ரூபாய் செலவில், 1998 இல் வானில் அமைத்த தொங்கும் தோட்டம்தான், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்.

     மூன்று ரஷ்ய வீரர்கள், சோயூஸ் என்ற விண்கலத்தில் இருந்தபடியே, விண்ணில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான மையத்தில் இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

     இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளத்தான் கொலம்பியா விண்வெளி ஓடம், விண்ணில் சீறிப் பாய்ந்து செல்கிறது.