20 டிசம்பர் 2019

தமிழ் மரபுத் திருமணம்






     இன்றைக்கு முப்பது வருடங்களுக்கும் முன்.

     அவருடைய வயது 62.

     கண் மருத்துவரைப் பார்க்கச் சென்றார்.

     இவரது கண்களை நன்கு பரிசோதித்த மருத்துவரின் முகத்தில் கவலையின் ரேகைகள் பரவத் தொடங்கின.

13 டிசம்பர் 2019

நோய் நாடி நோய் முதல் நாடி



     ஹோமோ சப்பியன்ஸ்

     இன்று உலகில் வாழும், ஒரே மனித இனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அறிவியல் பெயர்.

    ஹோமோ பேரினத்திற்குள் இருந்தப் பல இனங்கள், இன்று இல்லாமலேயே போய்விட்டன.

    ஹோமோ பேரினத்தில், இன்று வரை தப்பிப் பிழைத்திருக்கும் ஒரே இனம் ஹோமோ சப்பியன்ஸ்.

08 டிசம்பர் 2019

கழுதை அழுத கதை





     ஆண்டு 1968

     அவர் ஒரு கவிஞர்

     சாதாரணக் கவிஞரல்ல, பாவலர்

     அன்று காலை உணவை உட்கொண்டபின், ஆற்றங்கரையோரம், மெல்லிய தென்றல் காற்றை அனுபவித்தபடி நடந்து செல்கிறார்.

     ஆற்றின் ஒரு கரையில், துணிகளை வெளுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்ட சிலர், துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

     துணிகளைச் சுமந்து வந்தக் கழுதைகள், ஆற்றங்கரைதனில், வரிசையாய் வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன.

     திடீரென்று ஒரு கழுதையும், அதன் குட்டியும் பெருங்குரலெடுத்துக் கூச்சலிடத் தொடங்குகின்றது.

01 டிசம்பர் 2019

13 ஆம் உலகம்




     ஏய், என்ன பண்ணப் போறே? என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.

     இங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.

     ஒரு நொடி திகைத்துப் போனான் மதி

     உனக்கென்ன வெறி புடிச்சுருக்கா? இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா? என்று கேட்டதும்

     பத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.

22 நவம்பர் 2019

ஆறாவது முதலாளி




     குமார் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயல்பாடுகளும், அவரின் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தன. ஆனால் அவரின் முறையற்ற காமம், படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தில் உள்ள சின்னஞ் சிறுசுகள் வரைக்கும் பதம் பார்த்தது.

     பலப் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.

17 நவம்பர் 2019

இதழ் அறம்




காரிருள் அகத்தில் நல்ல
    கதிரொளி நீதான் இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
    பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினைக் காட்ட இந்த
     உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்நில்
     பிறந்தபத் திரிக்கைப் பெண்ணே
என்று பத்திரிகையை, ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வார் பாவேந்தர் பாரதிதாசன்.

     பத்திரிகை

     தமிழர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருபவைப் பத்திரிகைகளாகும்.

03 நவம்பர் 2019

குரு பக்தி




     ஆண்டு 1975

     சென்னை

     மயிலாப்பூர்

     மயிலாப்பூர் மட்டுமல்ல, இசை உலகே சோகக் கடலில் மூழ்கி இருந்தது.

     காரணம், ஓர் இசைக் கலைஞரின் மறைவு

23 அக்டோபர் 2019

ரோசெட்டோ




    

நாமெல்லாம் இறைவனை, மலர் கொண்டு, தீப ஆராதனை செய்து வழிபாடு செய்து வருகிறோம் அல்லவா,

     அவர்களும் இப்படித்தான் இறைவனை வணங்கியிருக்கிறார்கள்.

07 செப்டம்பர் 2019

குளம் தொட்டுக் கோடு பதித்து




மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய் தினார்.

     இம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும், கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத் தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.

24 ஆகஸ்ட் 2019

இதுதான் காதலா?




     ஆண்டு 1904

     ஜுலை 15

     கட்டிலில் அம்மனிதர் கண் மூடிப் படுத்திருக்கிறார்.

     அருகினில் அவர் மனைவி

     காதல் மனைவி

     நாள்தோறும் இவரைப் பார்ப்பதற்காக, பூங்கொத்துடன் வரும் ஒரு சிறுவன், இதோ இன்றும் வருகிறான்.

     இன்று மட்டும அந்தப் பூங்கொத்தை, நீயே அவரது தலைமாட்டில் வைத்துவிடு.

     இன்று அவர் தானேஎழுந்து, வழக்கம்போல், வாங்கும் நிலையில் இல்லை

15 ஆகஸ்ட் 2019

பிரிவினை




     பா கி ஸ் தா ன்

     பிரிவினை என்றாலே நம் மனதில் நிழலாடும் பெயர், பாகிஸ்தான்.

     பா கி ஸ் தா ன்

     இந்தப் பெயர் எப்படி உருவாக்கப் பட்டது தெரியுமா?

28 ஜூலை 2019

அஸ்தி




     நான் இந்த நாட்டின் குடிமகன்

     அரசுக்கு மற்றவர்களைப் போலவே வரி செலுத்துகிறேன்

     இந்திய அரசின் அமைப்பியல் சட்டத்தின் 51(அ) பிரிவு, குடி மக்களின் உரிமைகளைக் கூறிக் கடமைகளை வலியுறுத்துகிறது.

21 ஜூலை 2019

ஜோதி





நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இல்லைநீ
வழித்துப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே.

     முட்டை

     கோழி முட்டை

     கோழி, முட்டையிட்டு, 21 நாள் அடைகாக்க, குஞ்சு வெளிவருகிறது

     குஞ்சு வெளிவருவதற்கும் முன், நன்கு வளர்வதற்கு முன் உள்ள நிலையைப் பார்த்தால், குழ, குழ என்று இருக்கும்

     பின் மெல்ல வளரும், உரு பெறும்

05 ஜூலை 2019

மழை பிணித்து ஆண்ட மன்னன்




     கோடையிலோ தண்ணீர் பஞ்சம்

     மழைக் காலத்திலோ, ஊரெங்கும் வெள்ளம்

     இதுதான் இன்று நம் நிலை.

     ஆனால் அன்று…

28 ஜூன் 2019

அப்பா





     எந்தை எம்மை விட்டுப் பிரிந்து, ஓராண்டு ஓடிவிட்டது.

     ஓராண்டு முடிவதற்குள், ஒரு நினைவு மலர் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும், என் மனைவிக்கும்.

13 ஜூன் 2019

ஜகதிப்படை




நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு
நாங் குடுத்தநவும், அக்கன் குடுத்தநவும், நம் பெண்டுகள் குடுத்தநவும்
மற்றும் குடுத்தான் குடுத்தநவும்.
---
     ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.

     புத்தம் புது கோயில்

     கோயில் முழுவதும் ஒரே பரபரப்பு

02 ஜூன் 2019

இப்படியும் ஒரு ராஜதந்திரம்




     ராஜதந்திரம்

     Diplomacy

     விந்தணு ராஜதந்திரம்

     Sperm Diplomacy

     பனாமா நகரில் வசிக்கும் அட்ரியானாவிற்குத் தன் கணவர் மீது, தீராத காதல்.

     இவருக்கு ஓர் ஆசை

     குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்

     தன் கணவர் மூலம். குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

     பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே?

     எப்படி முடியும்?

     மனைவி இருப்பது பனாமாவில்

     இவரது, கியூபாவைச் சேர்ந்தக் காதல் கணவர் இருப்பதோ, அமெரிக்காவின் கலிபோர்னியச் சிறையில்.

     அதுவும் கடந்த 12 வருடங்களாய்.

     1996 ஆம் ஆண்டில், அமெரிக்கர்களைச் ஏற்றிச் சென்ற, இரு விமானங்களைச் சுட்டு வீழ்த்திய கியூபாவின் வீரர்களுடன் இணைந்து சதி செய்ததாகக் குற்றச்சாட்டு.

     இரட்டை ஆயுள் தண்டனை

     2001 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கச் சிறையில்.

     இதோ ஆண்டு 2014 பிறந்து விட்டது

     கடந்த 13 வருடங்களாய், சிறையில் வாடும், தன் கணவரின் குழந்தையைத் தன் கருவில் சுமந்தே தீர வேண்டும் என்னும் அடங்கா ஆசை.

     இரு நாடுகளும் பேசின.

     ஜெரார்டோ ஹெர்னான்டஸ்

     கலிபோர்னியச் சிறையில் வாடும், காதல் கணவனிடமிருந்து, விந்தணுவை எடுத்து அனுப்ப, அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

     அமெரிக்காவில் இருந்து விந்தணு 2455 கி,மீ பறந்து வந்தது

     செயற்கைக் கருவூட்டல்

     அட்ரியானா கருவுற்றார்.

     ஆனாலும், குழந்தை பிறக்கும் முன்னரே, ஹெர்னான்டஸ் பனாமாவிற்கு விடுதலையாகி வந்ததுதான் சிறப்பு.

    

இரு நாட்டுக் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹெர்னான்டஸ்  விடுவிக்கப்பட்டு, காதலியின் உள்ளத்தில் மட்டுமல்ல, இல்லத்திலும் குடியேறினார்.

     Sperm Diplomacy

     குளிரூட்டப்பட்ட, விழா அரங்கில், பொழிவினைச் செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூட மறந்துதான் அமர்ந்திருந்தேன்.

     விந்தணு ராஜதந்திரம்

     இச்செய்தியினை, தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு, இவர் அனுப்பியபோது, விந்தணு ராஜதந்திரம் என்றே தலைப்பிட்டு அனுப்பியிருக்கிறார்.

     சற்று யோசித்த, நாளிதழ் என்ன தலைப்பிட்டது தெரியுமா?

     இப்படியும் ஒரு ராஜதந்திரம்.

     ராஜதந்திரத்தில் பல வகைகள் உள்ளன

     Mango Diplomacy

     Cricket Diplomacy

     Bus Diplomacy

     Train Diplomacy

     Tea Diplomacy

     Dress Diplomacy

     Selfie Diplomacy

     Dog Diplomacy

 என இம்மனிதர் அடுக்கிக்கொண்டே போகப் போக, அரங்கே உறைந்துதான் போனது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்லைக் கழக
உதவிப் பதிவாளர் (ஓய்வு)


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
என்னும் தலைப்பில்

தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தில்
உரையாற்றிய போது,
தனது பல்வேறு மொழிபெயர்ப்பு அனுபவங்களைச் சுவைபட எடுத்துரைத்தார்.

     கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி என இன்றையக் கல்லூரி மாணவர்கள், சர்வசாதாரணமாகப் பேசுவதை கேட்கிறோம்.

     ஆனால் முப்பது வருடங்களுக்கும் முன்பே, நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி பற்றிய செய்தியில், இந்த கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை மொழிபெயர்த்ததாகக் கூறினார்.

Chemistry of Genimi Ganesan and Savithri is always at helm,
On the Screen and Off the Screen

     People என்ற வார்த்தை பன்மையைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம்.

     ஆனால் முன்னாள் பாரதப் பிரதமர், டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டு மக்களைக் குறிக்க Peoples  என்று குறிப்பிட்டதை, மொழிபெயர்த்த பாங்கை நினைவு கூர்ந்தார்.

Our Peoples should live in Peace

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும், தீர்வுகளும்

      தன் உரையில் முததாய்ப்பாக, மொழி பெயர்ப்புப் பணியில், தனது முப்பது ஆண்டுகால அனுபவத்தை முன் வைத்துப், பல கருத்துரைகளைத் தோழமையோடு வழங்கினார்.

     மொழி பெயர்ப்பவர், இரு மொழிகளிலும் அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

     இரு மொழிகளின் பண்பாடு, சமூகம் போன்ற சூழல்களை தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்

     சொல்லுக்கு சொல் மொழி பெயர்க்கக் கூடாது, பொருளைப் புரிந்து கொண்டு மொழி பெயர்க்க வேண்டும்.

     சிறிய சிறியச் சொற்றொடர்களாக மொழிபெயர்க்க வேண்டும்

     பொருத்தமான எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும்

     கடினமானச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கிப் பொழிவிற்கு மெருகூட்டினார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்
தனது முப்பதாண்டுகால
மொழி பெயர்ப்பு அனுபவங்களை
முத்தானத் தமிழில, எளிய நடையில்
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
தெளிந்த நீரோடைபோல் எடுத்து வைத்தார்.

மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்

கடந்த 30,5,2019 வியாழன் பிற்பகல்,
சரசுவதி மகால் நூலக, தமிழ்த துறையினரால்,
மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வு
என்னும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்தவர்களை


சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர்
ஏடகம் திரு மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.

சரசுவதி மகர்ல் நூலக நிருவாக அலுவலரும்,
தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான
திருமதி பெ.சாந்தா அவர்கள்
முன்னிலையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு,
சரசுவதி மகால் நூலக, நூலகர்
முனைவர் எஸ்.சுதர்சன் அவர்கள்
தலைமை தாங்கினார்.

சரசுவதி மகால் நூலக வடமொழிப் பண்டிதர்
முனைவர் வீரராகவன் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

மொழி பெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வுகளும்
பயனுள்ள பொழிவு.

இப்பொழிவிற்கு ஏற்பாடு செய்து
திறம்பட நடத்திய
சரசுவதி மகால் தமிழ்ப் பண்டிதர்


ஏடகம் திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது

போற்றுவோம், வாழ்த்துவோம்.





25 மே 2019

தாசனின் தாசன்





     ராஜகோபாலன்

     அந்த இளைஞரின் பெயர் ராஜகோபாலன்

     கவிதைகளின் மீது அளவிலா ஆர்வம்

     பாரதிதாசன் பாடல்களின் மீதோ, தீராத காதல்

     பாரதிதாசனின் பாடல்களைப் படிக்கப் படிக்க, அந்த இளைஞனின் உள்ளத்தில் ஒர் ஆசை, அவரையும் அறியாமல் குடியேறியது

16 மே 2019

மகாமகோபாத்யாய




     ஆனந்த ஆண்டு

     இன்றைக்கு 164 ஆண்டுகளுக்கும் முன்

     1855

     ஆனந்த ஆண்டு

     ஒரு நாள், அந்த ஊருக்கு வந்த, சோதிடக்காரன் கூறினான்,

     இந்த ஆனந்த ஆண்டில் அதிசயங்கள் பல நடக்கும்.