28 செப்டம்பர் 2015

துர்கா தேவி


    

ஆண்டு 1928, டிசம்பர் 17. நேரம் காலை 10.00 மணி. லாகூர்.

     காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார், அந்த ஆங்கிலேய அதிகாரி.

     காவல் நிலையத்திற்கு அருகில் நின்று, நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல் நிலையத்தை நெருங்குகிறார்கள்

     மொட்டை அடித்து மீசையினையும் மழித்து, அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.

24 செப்டம்பர் 2015

இச்சி மரம் சொன்ன கதை



வணக்கம் நண்பரே. இறந்து இரண்டு தினங்களாகிப்போன, தங்களுடன் பேசலாமா, கூடாதா எனத் தெரியவில்லை.ஆனாலும் பேசிப் பார்க்கலாம் அல்லது இப்படியுமாய் எழுதியும், வணக்கம் சொல்லியும் மகிழலாம் என்றிருந்த, நீண்டு போன, பொழுதுகளின் மதியம் ஒன்றில், தோன்றி மறைந்த யோசனையின் படியாய், தங்களுக்கு எழுதுகிறேன் அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

20 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 10


தாய் மண்ணே வணக்கம்


பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.

       சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.

     காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.

17 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 9


மறு ஜென்மம்



காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.

       ஓர் மனித உடல்.

       பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.

14 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 8


பனிப் புயலின் கோரப் பிடியில்

    

பிற்பகல் 3.00 மணி அளவில், ஆய்வகத்தில் அமர்ந்திருந்த சுதாகர் ராவ், காற்றின் வேகம், திடீர் திடீரென திசை மாறுவதை கவனித்தார்.

      காற்றின் வேகத்தையும், திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.

      வெளியில் உள்ள கருவியில் இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது.

13 செப்டம்பர் 2015

விசையினிலே தமிழ் விரைவில் வேண்டும்




கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரையில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
                              மகாகவி பாரதி

    கல்தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளொடு முன் தோன்றிய மூத்த குடி, தமிழ்க் குடி என்பர் நம் முன்னோர்.

       இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, இலத்தீன், சமஸ்கிருத மொழிகள் இன்று வழக்கில் இல்லை. ஆயினும் அதற்கும் முன்னரே, இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் மொழி, நம் தமிழ் மொழி, நம் செம்மொழி இன்றும் பேச்சில், எழுத்தில், அச்சில் நிலைத்து நிற்கின்றது.

09 செப்டம்பர் 2015

புதுகை அழைக்கின்றது




தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி

சமுத்திரம் போல் அமைந்த மைதானம்
அங்கே கூடினர் அத்தனை பேரும்.

வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்
உரக்கக் கேட்டான், உயிரோ நம்தமிழ்?
அகிலம் கிழிய ஆம் ஆம் என்றனர்.

உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரை சேர்த்தமைத் தார்கள்,

உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி தொடங்கினர், பறந்தது தொழும்பு

கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றி லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
                            பாவேந்தர் பாரதிதாசன்.


வலைப் பூ.

    இந்த நான்கு எழுத்து வார்த்தையின் வல்லமையினையும், இவ்வார்த்தையில் ததும்பிக் கொண்டிருக்கும், உடன் பிறவா உறவுகளின் எல்லையற்ற அன்பினையும் எண்ணிப் பார்க்கின்றேன்.

     ஒரு கணித ஆசிரியராய், சூத்திரங்களும், கரும் பலகையுமே வாழ்வென்று எண்ணி, வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தவன் நான்.

       ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு கணினி வாங்கி, இரண்டாண்டுகள் அதனை ஒரு அலங்காரப் பொருளாகவே பத்திரமாய் பாதுகாத்து வந்தேன்.

     பின் மெல்ல, ஒரு வலைப் பூவினைத் தொடங்கி, இணையக் காட்டுக்குள் நுழைந்து, திக்கு திசை தெரியாமல், ஓர் ஆண்டினைச் செலவிட்டிருக்கிறேன்.

07 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 7


பனியில் புதைந்தவர்



  நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே நேர்க்கோட்டில் அமையாது. சற்றே இடது புறமோ அல்லது வலது புறமோ நகர்ந்திருப்போம்.

      சாலைகளோ, அறிவிப்புப் பலகைகளோ இல்லாத, அண்டார்டிகாவில் நடக்கும் பொழுது, சிறிது வழி மாறினாலும், நம் கதி அதோ கதிதான்.

03 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 6


பனிப் பிளவு




கர்னல் அவர்களுக்கு சில நொடிகள் ஒன்றும் விளங்கவில்லை. பின்னால் வந்து கொண்டிருந்த வண்டிக்கு என்னவாயிற்று. எங்கே போனது?

       சற்றுமுன் கேட்ட சத்தம் என்ன என்றும் முதலில் புரியவில்லை.

       கர்னல் அவர்களும், அவருடன் பயணித்த இருவரும், வண்டியில் இருந்து கீழே இறங்கினர்.

       பனிக் காற்று அவர்களின் காட்சியை மறைத்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பனிக் காற்று மெல்ல மெல்ல விலகிய பொழுது, தொலைவில், இரண்டாவது வண்டியின் ஒரு சிறு பகுதி மட்டும், பனித் தரைக்கு மேலே தெரிந்தது. மீதிப் பகுதியைக் காணவில்லை.