28 மார்ச் 2017

குறள் கொடுத்தவர்


  

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றி, இன்றும் பொய்யா மொழி என்றும், தமிழ் மறை என்றும், உலகப் பொது மறை என்றும் பலப்பலவாகப் போற்றப்படும் நூல் திருக்குறள்.

   பைபிளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான உலக மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பெற்ற பெருமைமிகு நூலும் திருக்குறளே.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.

     கற்க வேண்டிய நூல்களை, கசடின்றி, முழுமையாய் கற்று, அதன் வழி நட என நமக்கு நல் வழிகாட்டும் திருக்குறளை, பள்ளி மாணவ, மாணவியர் உள்ளத்தில் பசுமரத்ததாணி போல் பதிய வைக்க வேண்டுமல்லவா?

18 மார்ச் 2017

குதிர்




     இலை, தழைகளை மட்டுமே உடையாய் உடுத்தி, கிடைத்த காய் கனிகளையும், வேட்டையாடிய விலங்குகளையும் உணவாய் உட்கொண்டு, நாடோடிகளாய் காலம் கழித்த, நம் முன்னோர், மெல்ல மெல்ல ஆற்றங்கரைகளில் குடியேறத் தொடங்கியபோது, முதன் முதலாய் உழவுத் தொழிலில் இறங்கினர்.

     தானியங்களும், நெற்கதிர்களும் வளர்ந்து முற்றிய நிலையில், அறுவடை செய்து பார்த்தபோது, தங்களது தேவைக்கும் அதிகமாய், மிக மிக அதிகமாய், உணவுப் பொருட்கள் ஏராளமாய், மலை, மலையாய் குவிந்து கிடந்த காட்சியைக் கண்டு மலைத்துத்தான் போனார்கள்.

11 மார்ச் 2017

தமனா




     அன்பும் கருணையும், பெரும் மலைகளையே புரட்டிப்போட வல்லவை. குறுக்கே நிற்கும் தடைக் கற்களை உடைத்துத் தவிடுபொடி ஆக்குங்கள். அங்கு ஓர் அழகான பூங்காவை அமையுங்கள். அங்கு அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்.

    

         சியாமா சோனா.

     ராஜஸ்தான் மாநிலத்தில், மிகவும் செல்வச் செழிப்பானக் குடும்பத்தில் பிறந்தவர். 

      நன்கு படித்தவர்.

     புதுதில்லியில், ஒரு பள்ளியில் ஆசிரியர்.

     ஏராளமானக் கனவுகளோடும், எதிர்கால இலட்சியங்களோடும், ஒரு இராணுவ அதிகாரியைக் கரம் பற்றினார்.

     வாழ்வும் இனிமையாகவே நகர்ந்தது.

     சியாமா கருவுற்றார்.

     குழந்தை வயிற்றில் வளர வளர, சியாமாவின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே சென்றன.

05 மார்ச் 2017

உத்தமதானபுரம்



   சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசருக்கு ஒரு ஆசை.

    முடிந்த அளவிற்கு நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

     பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

     இயற்கைக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டு ரசித்தார்.

     புனிதத் தலங்களை எல்லாம் தரிசித்தார்.

     மனதில் மகிழ்வுடனும், தெய்வங்களை வழிபட்ட மன  நிறைவுடனும், தஞ்சைக்குத் திரும்பும் வழியில், சிறிது ஓய்வெடுக்க, ஓரிடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்.

     மரங்கள் அடர்ந்த சூழல். குளிர் தென்றல் காற்று வீசும் காலம்.