25 மே 2020

சாதனையாளரை வாழ்த்துவோம்




     2014 ஆம் ஆண்டு மே திங்களில், கவிஞர் முத்துநிலவன் அவர்களால், கணினி தமிழ்ச் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடத்தப்பெற்ற, இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில், மாணவராய், பங்கேற்பாளராய் கலந்து கொண்டவர் இவர்.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும், அதே கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய, அதே பயிற்சிப் பட்டறையில், ஆசிரியராய் பாடம் நடத்தியவர் இவர்.

19 மே 2020

அக்காள் மடம், தங்கச்சி மடம்



     பதினாறாம் நூற்றாண்டு.

     இராமேசுவரம்.

     நான்கு பேர் அந்தப் பல்லக்கினைச் சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

     பல்லக்கிற்கு முன்னும் பின்னும் சில வீரர்கள் காவலுக்குச் செல்கிறார்கள்.

    பல்லக்கில் சிவகாமி நாச்சியார்.

13 மே 2020

கண்ணீர்த் தமிழ்




     பயணம்.

     மனித வாழ்க்கையே ஒரு பயணம்தான்.

     நாகரிகம் என்பதே நதிக்கரைகளைத் நோக்கியப் பயணத்தில்தான் தொடங்கியது.

     நிலத்தில பயணிப்பதற்கும், கடலில் பயணிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

04 மே 2020

செந்தமிழ் அரிமா





கெடல் எங்கே தமிழின் நலம்? – அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்குத், தன் வாழ் நாள் முழுவதும் உயிர் கொடுத்தவர் இவர்.

     தமிழுக்குத் தீங்கு எனில், நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம் உணர்வாகக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்தவர் இவர்.