23 பிப்ரவரி 2023

கலைஞரைக் காணப் புறப்பட்டவர்

 


     ஆண்டு 2023.

     பிப்ரவரி 19 ஆம் தேதி.

     ஞாயிற்றுக் கிழமை.

     காலை 9.00 மணி.

     இவருக்கு வயது 81.

     மனைவியை இழந்தவர்.

     வாழவேண்டிய வயதுள்ள மகனையும் இழந்தவர்.

     ஒரு மகள்.

     பிரிவுத் துயர் வாட்டியபோதும், தமிழால் வாடாமல் வாழ்ந்து வருபவர்.

     இன்னும் சற்று நேரத்தில், இவரது தங்கையின் பெயரனுக்குத் திருமணம்.

09 பிப்ரவரி 2023

குந்தவையின் சபதம்



புரியும்படி சொல்கிறேன், அருமை மன்னா, கேள்.

     உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும்.