28 அக்டோபர் 2017

பெருந்தன்மை



      ஆண்டு 1952.

      உயர் அதிகாரி அவர்.

      அன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.

21 அக்டோபர் 2017

ஃபீனிக்ஸ்




      அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      கரவொலியால் அரங்கு அதிர்ந்து கொண்டிருக்கிறது.

      ஆண்டு 2014, மார்ச் 4

      அமெரிக்காவின் முதல் பெண்மணி திருமதி ஒபாமா அவர்கள், விருதுடன் மேடையில் காத்திருக்க, விருது பெற இருப்பவர், மெல்லப் படியேறி மேடைக்கு வருகிறார்.

       விருது பெற மேடைக்குப் படியேறி வருபரைக் கண்டு, ஒரு நிமிடம், அரங்கே திடுக்கிடுகிறது.

18 அக்டோபர் 2017

இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

இளங்கோ அடிகள் புகழும் காவேரிநாடு

டாக்டர் நா. கணேசன், ஹ்யூஸ்டன், அமெரிக்கா


காவேரி பாயும் கொங்குநாடும், சோழநாடும்:

காவேரி ஆறு பற்றிய சிறப்பை இளங்கோ அடிகள் விரிவாகவும் மிக அழகாகவும் பாடியவர். காவேரி கொங்குநாட்டில் தோன்றிப் பாய்ந்து  சோழநாட்டிலே வளம் பெருக்குகிறது. நீண்ட காலமாக ஒரு சொலவடை வழக்கத்தில் உண்டு. கொங்குநாட்டில் மலைகள் சூழ்வது அகல்விளக்கின் விளிம்பு போல உள்ளது, அந்த அகல்விளக்கில் மூன்று இழைகள் கொண்ட திரி என்பர். நொய்யல், அமராவதி, பவானி சேர்ந்து அகண்ட காவிரி ஆகிக் கொங்கிலிருந்து சோழநாட்டை வளமாக்கச் செல்கிறாள் பொன்னிப்பாவை. இதனால் அகல்நாடு என்று கொங்குநாட்டைக் கூறுவர். அகல் விளக்குத் திரியின் முகம் வழியாய் பெரிய காவேரி திருச்சி-தண்செய் சமவெளிக்கு விரிந்து பாய்ந்து ஒளிமயமான வாழ்க்கையைத் தமிழர்களுக்கு காவிரி  ஆறு அளிக்கிறது.

14 அக்டோபர் 2017

லகூன்



     ஏப்ரல் 23 ஆம் நாள்

     ஞாயிற்றுக் கிழமை

     பகல் 1.30 மணி

     பசி வயிற்றைக் கிள்ள, உணவுப் பொட்டலங்களைப் பிரித்து, உண்ணத் தொடங்கினோம்.

     நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர் திரு கா.பால்ராஜ், திருவையாறு, அரசர் கல்லூரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் நண்பர் திரு கே.ரமேஷ், நண்பரும் மகிழ்வுந்து ஓட்டுநருமான திரு ரகுபதி ஆகியோருடன் இணைந்து நானும், மதிய உணவினைச் சாப்பிடத் தொடங்கினேன்.

      நாள்தோறும் சாப்பிட்டுக் கொண்டுதானே இருக்கிறோம், இதிலென்ன செய்தி இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

      சாப்பிடுவது புதிதல்ல.

      சாப்பிடும் இடம் புதிது.

     நாங்கள் சாப்பிடும் இடம், மெல்ல மெல்ல இடதும் வலதுமாய் அசைந்து, அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.

13 அக்டோபர் 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்




     யாழ்

     தமிழிசையின் அடையாளம்.

     நமது தேசிய இசைச் சின்னம்

     நான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.

07 அக்டோபர் 2017

கோவிந்தன்




     ஆண்டு 1942.

     சென்னை

     அது ஒரு அலுவலகம்

     வாரப் பத்திரிக்கை ஒன்றின் அலுவலகம்

     ஒரு பக்கம் அச்சுப் பணி

     ஒரு பக்கம் அச்சிடுவதற்காக எழுத்துக்களைக் கோர்க்கும் பணி

     எழுத்துக்களைக் கோர்ப்பதற்கு என்று ஒரு தனி அறை

     ஒரு நீண்ட மேசைமீது, சரிவாய் சாய்ந்த நிலையில், புறாக் கூண்டுகளைப் போல், சின்னஞ்சிறு கூண்டுகள், வரிசை வரிசையாய்.

     ஒவ்வொரு கூண்டிலும் ஈயத்தால் ஆன எழுத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன