31 மே 2016

திரை வள்ளல்


    

ஆண்டு 1957,

     சென்னை.

     அது ஒரு மருத்துவமனை.

     மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

       இம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.

24 மே 2016

இளமையில் வறுமை



கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
என வறுமையின் கொடுமையினைப் பாடுவார் ஔவையார்.

வறுமையான வாழ்வில் திக்கித் திணறியபோதும்,
தமிழ் திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையை உலகமறிய, மேலையறிஞர் ஒப்ப நாட்டவே இறைவன் என்னைப் படைத்திருக்கின்றான்
என உரைத்து, தமிழுக்கே தன் வாழ்வு முழுமையையும் ஈந்தத் தமிழறிஞர் இவர்.

18 மே 2016

இராணுவம் அழைக்கிறது




     இராணுவம்.

     இராணுவம் என்றாலே, போர்க் களக் காட்சிகளும், வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி சிதறி வீர மரணம் எய்தும் வீரர்களின் காட்சிதான், நம் கண் முன்னே தோன்றுகிறது.

    இராணுவம் என்றாலே போர் முனை மட்டும்தானா?

    இல்லை, இல்லை இல்லவே இல்லை.

11 மே 2016

இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம்


   
ஆண்டு 1780,

    ஐப்பசி மாதம்.

    விஜயதசமி, இரவு நேரம்.

    அந்தக் கோயில் முழுக்க முழுக்கப் பெண்களால் ததும்பி வழிகிறது.

   அர்ச்சகர்கள் மற்றும் ஒரு சில கோயில் பணியாளர்களைத் தவிர ஆண்கள் யாருமே இல்லை.

06 மே 2016

வைகறை





பிறந்த சிசு பயணிக்கும்
ஆட்டோவிற்கும்
ப்ரீசர் பாக்ஸ் கொண்டு செல்லும்
டாட்டா ஏசுக்கும்
நடுவே
சென்று கொண்டிருக்கிறது
எனது வாகனம் …..

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வை இத்துனை எளிமையாய், இத்துனை வலிமையாய் காட்சிப் படுத்தி, கவிதை வரிகளில் அடக்கிய, அந்த இளம் கவிக்கு, அப்பொழுது தெரிந்திருக்கவில்லை, இன்னும் சில நாட்களில், தனக்கும் ஒரு ப்ரீசர் பாக்ஸ் தேவைப்படப் போகிறது, என்பது தெரிந்திருக்கவில்லை.