25 டிசம்பர் 2016

வெட்டிக்காடு கீதா கஃபே




நான் சிறுவனாக இருந்த காலத்தில், எங்கள் வீட்டில், கறவை எருமை மாடுகள், பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் 10லிருந்து 15 மாடுகள் இருக்கும்.

     எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை எனக்கும், உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்குத் தீவனம் வைப்பது போன்ற வேலைகள் அண்ணனுக்கும் வழங்கப் பட்டது.

     தினமும் பள்ளி விட்டு வந்தவுடன், மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, மாடுகளை மேய்த்து வர வேண்டும்.

18 டிசம்பர் 2016

வாழும் மகாகவி



இவர் – என்றும்
கனன்று கொண்டிருக்கும்
கவிதை நெருப்பு – இவரின்
காவியப் பொழுதுகளும் வாழ்வும்
கவிதைச் சிறகுகொண்டு எந்நாளும்
வானம்பாடியாய்ப் பறக்கட்டும்
                      -விழிகள் தி.நடராசன்

      ஆண்டு 2011.

      ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், வகுப்பறையில் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த வேலையில், என் அலைபேசி உயிர்பெற்று மௌனமாய் துடித்தது.

     அலைபேசியில் அழைப்பவரின் பெயரினைப் பார்த்த, அந்த நொடியில், இதயம் ஒரு முறை நின்று, பின் வெகு வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

     மனம் நம்ப மறுத்தது.

     மாமனிதரிடமிருந்து, இந்த எளியேனுக்கு அழைப்பா ?

13 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 17


    

என் தங்கை திருமணம் செயது கொண்டார். யாருக்கும் தெரியாமல்.

     எம் மனம் உடைந்து சுக்கு நூறானது.

  என் அன்புத் தங்கையே, ஏன் இப்படிச் செய்தாய்? நிம்மதியிழந்து தவித்தேன்.

10 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 16



தங்களைப் பணியில் சேர்க்க இயலாத நிலையில் இருக்கிறோம்.

    பல நாட்கள், இதே வார்த்தைகள், என் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன. பல இரவுகள் உறங்கா இரவுகளாகவே கழிந்தன.

    உடற்குறைபாடு உடையவன் என்ற ஒரே காரணத்திற்காக, எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.

07 டிசம்பர் 2016

புத்தகக் கோட்டை



     புதுக்கோட்டை.

     புதுக்கோட்டை, இனி புதுக் கோட்டையல்ல

     புத்தகக் கோட்டை

    ஆம் புதுக்கோட்டையினை, இனி புத்தகக் கோட்டை என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

     கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், திசம்பர் 4 ஆம் தேதி வரை, ஒன்பது நாட்கள், நடந்த நிகழ்வால் புதுக்கோட்டையே, புதுப்பொலிவு பெற்று, மெருகு கூடி, புத்துணர்வு பெற்றிருக்கிறது.

06 டிசம்பர் 2016

ஆழ்ந்த இரங்கல்கள்


தஞ்சைத் தரணியில்
பன்னெடுங்காலமாகத் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
மாணவர் இல்லம்,
தமிழ் பயிலும் மாணவியர் விடுதி, கூடுதல் நூலகக் கட்டிடம் முதலியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கென,
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறேன்
என்று மனமகிழ்ந்து அறிவித்து,
அறிவித்த வண்ணம், மனமுவந்து வழங்கியும் மகிழ்ந்தவர்
தமிழக முதல்வர்
மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின்
மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

29 நவம்பர் 2016

வீர வணக்கம்


நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.

23 நவம்பர் 2016

வைத்தீசுவர பிரபு





தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
     சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என வாழும் எண்ணிலடங்கா மனிதர்களுக்கு இடையே, இவர் ஓர் உன்னத மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

    ஆசிரியர் பணி என்பது அறப் பணிதான். ஆனாலும் ஆசிரியர்கள் இன்று, சந்திக்கும் சவால்கள் ஏராளம் ஏராளம்.

20 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 15


            

   செந்தா என் அருகில் வந்தது எனக்குத் தெரியாது.

       என்னைக் கட்டிப் பிடித்ததும்தான், நிலைமையை உணர்ந்தேன்.

      திமிறிக் கொண்டு விலகினேன்.

13 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 14



ஃ பிலடெல்பியா விளையாட்டு மைதானத்தில், பார்வையாளர்கள் அமரக் கூடிய வரிசையில், எங்களுக்கான இருக்கைகளைக் கண்டு பிடித்து அமர்ந்தோம்.

      விளையாட்டுத் திடல், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

      போட்டி தொடங்க ஒரு சில நிமிடங்களே இருக்கும் நிலையில், விளையாட்டு அரங்கின் அதிகாரி ஒருவர், என்னிடம் வந்து ஒரு ஹெட் போனைக் கொடுத்தார்.

07 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 13



  உண்மையில் நடந்தது என்ன எனில், நான் கை வைத்திருந்த பெட்டி அசைந்தது, கதவு திறந்ததால் அல்ல, அந்த வண்டியானது, நடைமேடையில் இருந்து நகர்ந்ததால் ஏற்பட்ட அசைவு.

       அவசரத்தில் அதை சரியாக உணராததன் விளைவு, இதோ தண்டவாளத்தில் விழுந்து கிடக்கின்றேன்.

31 அக்டோபர் 2016

வடவாறு


       முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்.

       தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச் சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

      சற்றே தலை குனிந்து பார்க்கின்றேன். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடி தயங்கினேன், ஒரே ஒரு நொடிதான், அடுத்த நொடி, ஆற்றிற்குள் பாய்ந்தேன்.

24 அக்டோபர் 2016

விபுலாநந்தரின் அடிச்சுவடுகளில் ஓர் பயணம்



தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என, ஊதியம் எப்பொழுது கிடைக்கும், ஊதியக்குழு எப்பொழுது அமையும், அகவிலைப் படி எப்பொழுது உயரும், வீடு வாங்குவது எப்பொழுது, அருமையாய் ஓர் மகிழ்வுந்து வாங்குவது எப்பொழுது என, சுய நலன் ஒன்றினையே, பெரிதும் போற்றி வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு ஆலமரமாய் பரந்து, விரிந்து, உயர்ந்து, தனித்து நிற்கிறார்.

18 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 12



எனது கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு அழைக்கிறேன். வருகிறீர்களா?

     என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. படிக்கும் காலத்திலேயே ஆசிரியர் பணியா? அதுவும் எனக்கா?

11 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 11


           

 நண்பர்களே, அமெரிக்காவின், நியூயார்க் நகரில் கால் பதித்து, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. முதற் பருவம் நிறைவடைந்து விட்டது.

     இரண்டாம் பருவ வகுப்புகள் மகிழ்ச்சியாகவும், விறுவிறுப்பாகவும் விரைந்து சென்று கொண்டிருந்தன, இவ்விடத்தில் அமெரிக்கக் கல்வி முறை குறித்து சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.

04 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 10




நியூயார்க் மெட்ரோ தொடர் வண்டி  நிலையம்.

  அமெரிக்கத் தொடர் வண்டி நிலையங்களில் ஆங்காங்கே, தானியங்கி பயணச் சீட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.

      அந்த இயந்திரத்தில் ஒரு தொடு திரையும், தொடுதிரையின் கீழ், தொலை பேசிக் கருவியைப் போன்ற வடிவமுடைய, விசைப் பலகையும் இருக்கும். அதற்கும் கீழே, ஸ்பீக்கர் பின் சொருகக் கூடிய வகையில், ஒரு துளை இருக்கும்.

    அதில் நமது ஹெட்போன் பின்னைச் சொருகி, விசைப் பலகையின் ஸ்டார் பட்டனை அழுத்த வேண்டும். அடுத்த நொடி, கணினித் திரையானது நம்முடன் பேசத் தொடங்கும்.

27 செப்டம்பர் 2016

புதிய கல்விக் கொள்கை - சில கருத்துக்கள்




கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான். இன்றைய பள்ளிக் கல்வி முறையானது, மதிப்பெண்களை மட்டுமே மையப் படுத்திய கல்வி முறையாக மாறிவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

   படிப்பு என்பதே வேலை வாய்ப்பிற்காகத்தான் என்று எண்ணி, மதிப்பெண்களை மட்டுமே நாடிச் செல்லும் மாணவர்கள், தங்கள் வாழ்வியலை, வாழ்வின் மேன்மையை உணராதவர்களாகவே மாறிப் போகிறார்கள்.

21 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 9



           

 பல்கலைக் கழகத்தின் சார்பில் குடிக்கும் கூட்டமா என நீங்கள் வியப்பது புரிகிறது.

     குடிப் பழக்கம் தொடர்பாக, நமக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள, ஒரு சில வேறுபாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ளவது அவசியம்.

     குடிக்கும் கூட்டங்களில் குடிப்பவர்கள், குடிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே கலந்து கொள்கிறார்கள்.

14 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 8

           

 எனது தாத்தா குடும்பத்தினர், சிறு வயது முதலே என் நலனில், அதிக அக்கறை கொண்டு உதவி வருபவர்கள். அவர்கள் மட்டும் என்னைக் கைத் தூக்கி விடாமல் இருந்திருப்பார்களேயானால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

09 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 7



பல்கலைக் கழக நிர்வாகமானது, பல்கலைக் கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே உதவியாளரை வழங்கி உதவும்

    படித்தவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. நான் தங்கியிருந்த விடுதியின் உதவியாளர், என்னைப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் செல்வது, அருகிலுள்ள தெருக்களைச் சுற்றிக் காட்டுவது போன்ற செயல்களில் எனக்கு உதவியாக இருந்ததார். அது பல்கலைக் கழக நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது.

05 செப்டம்பர் 2016

தியாகத் திருநாள்


    

ஆண்டு 1936, நவம்பர் மாதம் 18 ஆம் நாள்.

     இரவு மணி 11.15

     தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகம்.

     இரவு நேரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

      அலுவலகத்தின் மைய அறையில் அம் மனிதர் ஓர் கட்டிலில் கண்மூடிப் படுத்திருக்கிறார். கட்டிலைச் சுற்றிலும் கவலை தோய்ந்த முகங்கள்.

     அம் மனிதர் உறுதியாகக் கூறிவிட்டார். என்னால் வீட்டில் படுத்திருக்க முடியாது. என் இறுதி மூச்சு, காங்கிரஸ் அலுவலகத்தில்தான் பிரிய வேண்டும். தூக்கிச் செல்லுங்கள் என்னை அலுவலகத்திற்கு. உறுதியாகக் கூறிவிட்டார்.

31 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 6





     பல்கலைக் கழகத்தில் இருந்து வர வேண்டிய உதவியாளர் வரவில்லை.

     சற்று நேரம் காத்திருந்தேன்.

    பிறகு விமான நிலைய அதிகாரி ஒருவரைச் சந்தித்து, அவரது உதவியுடன், வாடகை ஊர்தியைப் பிடித்தேன்.

       பல்கலைக் கழக விடுதியை நோக்கிப் பயணித்தேன்.

       நான் சேர இருக்கும் நியூ ஸ்கூல் பல்கலைக் கழகத்தில் பல விடுதிகள் உள்ளன. அவற்றுள் குறைவான வாடகை உடைய, மால்டன் விடுதியைத் தேர்ந்தெடுத்தேன்.

        மால்டன் விடுதியைச் சென்றடைந்தபோது, மதியம் மணி 3.00

25 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 5



    

நான் சென்னையில், எனது உடைகள், உடமைகள் திருப்பத்தூர் வீதியில்.
                                         
     மனதில் அதுவரை இருந்த மகிழ்ச்சி மறைந்து, ஒரு விதப் பதட்டம் தொற்றிக் கொண்டது.

16 ஆகஸ்ட் 2016

உமாமகேசுவரம்



தன்னலங் கருதாப் பொதுநலத் தொண்டர்
     தமிழ்ப்புல வோர்கள் தம்பெருந் தோழர்
எண்ணில் சிறார்க்கு கண்ணருள் அன்னை
     உடல்பொருள் உயிரெல்லாம் உரிமையாக்கித்
தமிழ்த்தொண் டாற்றிய சங்கத் தலைவர்

செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் திருப்பெயர் தாங்கி நிற்கும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், மாணவர்களாய் பயின்று, இன்று ஆசிரியர்களாய் பணியாற்றும் ஓர் அற்புத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

08 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 4


ஃபோர்டு நிறுவனத்தின் கல்வி உதவித் தொகையினைப் பெறத், தாங்கள் தகுதி படைத்தவராகத் தேர்வு செய்யப் பெற்றுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முனைவர் படிப்பிற்கான அனைத்துவித செலவினங்களையும்  ஃபோர்டு நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.

      பிறந்த நாள் முதல், ஊன்று கோலின் உதவியுடன் நடந்த நான், முதன் முறையாய் வின்னில் பறப்பது போல் உணர்ந்தேன்.

02 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 3



முனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

      ஒவ்வொரு கடிதத்தின்போதும், என் இதயம் சற்று நின்று, தட்டுத் தடுமாறிப் பின்னர்தான் துடிக்கத் தொடங்கியது.

     இதயம் மட்டுமா துடித்தது, நானும்தான் துடியாய்த் துடித்தேன்.

26 ஜூலை 2016

நூலும் விருதும்




வாழி தமிழ்த்தாய் வளர்க தமிழ்க் கலைகள்
வாழி கரந்தைத் தமிழ்ச் சங்கம்- வாழி புகழ்
பாரோங்கு வண்தமிழ வேள் உமாம கேசுவரன்
சீரோங்கு தொண்டாற் செழித்து

தண்டமிழ் காத்த தொண்டர், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் திருப் பெயர் தாங்கி நிற்கும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியும்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியும்
தோற்றம் பெற்று ஆண்டுகள் 75 நிறைவடைந்திருக்கின்றன.

15 ஜூலை 2016

கர்மவீரர்


எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்?  எல்லோரும் வாழ. எப்படி வாழனும்? ஆடு, மாடுகள் மாதிரி உயிரோடு இருந்தால் போதுமா? மனிதர்களாக வாழனும். அதற்குப் படிப்பு வேணும். பட்டினியாக இருந்தால் படிப்பு வருமா? வராது. ஏழைகளுக்கெல்லாம் பள்ளிக் கூடங்களிலேயே சாப்பாடு போடனும். அப்பதான் படிப்பு ஏறும். இதுவே முதல் வேலை. முக்கியமான வேலையும் கூட.

05 ஜூலை 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.

     விழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.

     தமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.

    விழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.

29 ஜூன் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்




          1976 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள். இந்நாள் என் வாழ்வில் மறக்க இயலாத நாள்.

        தாயின் கருவறையில் குடியிருந்த நான், அந்த அன்புத் தாயின் கரங்களில் முதன் முதலாய் தவழ்ந்த நாள்,  இந்நாள். ஆம் நண்பர்களே, நான் பிறந்த பொன்னாள் இது.

        தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தின் கோட்டப் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவன் நான்.

     அழகிய கிராம்ம். அன்பு நிறைந்த பெற்றோர். வேறு என்ன வேண்டும் எனக்கு.

21 ஜூன் 2016

முதல் மனித வெடிகுண்டு

   
     ஆண்டு 1780.

     விஜயதசமி. இரவு நேரம்.

     சிவகங்கை..

    தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன் கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

     பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.

     அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப் பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.

     சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச் சுமந்த உதடுகள்.

    உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள், ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

    சாதாரணப் பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.

10 ஜூன் 2016

புதிய மரபுகள்



ஆண்டு 1976.

    அரசர் கல்லூரி, திருவையாறு.

    கல்லூரி மாணவர்களால் அந்தச் சாலையே நிரம்பி வழிகிறது.

    மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூடிய மாணவர்களின் ஊர்வலம்.

     ஊர்வலத்தில் நடுநாயகமாக, ஒரு மாணவரைப் பல மாணவர்கள், தங்களின் தோளில் சுமந்தபடி, வெற்றி முழக்கங்களை முழங்கியபடி செல்கின்றனர்.

    காரணம் என்ன தெரியுமா?

06 ஜூன் 2016

அசல் மனிதர்



சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளைப் புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். மனசாட்சிக்கு எது சரியோ அதை மட்டும் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்.

எம்.எல்ஏ., தலையிட்டார், மந்திரி சொன்னார், அதற்காகத்தான் இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது.

31 மே 2016

திரை வள்ளல்


    

ஆண்டு 1957,

     சென்னை.

     அது ஒரு மருத்துவமனை.

     மஞ்சள் காமாலை மற்றும் குடல் வீக்கத்தால் பாதிக்கப் பட்ட, அம் மனிதர், இம் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டுள்ளார்.

       இம்மனிதர் மருத்துவமனையில் சேர்ந்த நாளில் இருந்தே, மருத்துவமனை வளாகம் எங்கும், எப்பொழுதும் ஓரே கூட்டம்.