Book Review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Book Review லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 மார்ச் 2021

கூடு திரும்புதல்


அடிக்கடி

செயின்

கழன்றுவிடும்.

பெடலுடைந்த

சைக்கிளில்

என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு

தேநீர் கடைக்கு வேலைக்குப் போவார்

என் அண்ணன்.

07 பிப்ரவரி 2021

எழுத்துக்காரக் குடும்பம்


     பல தடைகளைக் கடந்து, திருமணமான மகிழ்ச்சியில், புகுந்த வீட்டிற்குள்  காலடி எடுத்து வைக்கிறார், அந்த மருமகள்.

     அடுத்த நொடி, மாமியார் மயங்கி விழுகிறார்.

     சகுனமே சரியில்லை.

     ஜாதகத்துல தோஷம்

     ஆளுக்கு ஆள், மனம் போன போக்கில், குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போக, யாரோ ஒருவர், தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க, மாமியார், கண் விழிக்கிறார்.

    

15 ஆகஸ்ட் 2020

இரண்டு நான்கானது


 நாளும் உடற்பயிற்சி நன்று, தமிழ்மொழியில்

நாலும் இரண்டும் நனிநன்று, நம்மதுரை

பொற்றா மரைக்குளம் நன்று, பொறுப்புடன்

நற்றமிழ் கற்றிடல் நன்று

     இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.

     இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.

    

25 மே 2020

சாதனையாளரை வாழ்த்துவோம்




     2014 ஆம் ஆண்டு மே திங்களில், கவிஞர் முத்துநிலவன் அவர்களால், கணினி தமிழ்ச் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடத்தப்பெற்ற, இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில், மாணவராய், பங்கேற்பாளராய் கலந்து கொண்டவர் இவர்.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும், அதே கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய, அதே பயிற்சிப் பட்டறையில், ஆசிரியராய் பாடம் நடத்தியவர் இவர்.

26 அக்டோபர் 2018

வெற்றிலை



      பூதம்

     அது ஒரு பூதம்

     அகத்தி, செம்பை, முருங்கை மரங்கள் நிறைந்த நிலத்தினுள் புகுந்து மெல்ல நடக்கிறது.

     பூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.

     பூதம் விவசாயியின் தோளைத் தொட்டது.

23 ஜூன் 2018

மனம் சுடும் தோட்டாக்கள்




பள்ளியில் பதற்றத்தில்
அருவருப்பின் உச்சத்தில் செல்ல ….

பணியிடத்தில் வழியின்றி
மறைவிடங்கள் நாடி….

பயணத்திலோ
பரிதவித்து அடக்கிக் கொண்டே …

நகரங்கள் கிராமங்கள்
ஒரே நிலைதான்.

07 ஏப்ரல் 2018

பொய்யெனப் பெய்யும் மழை




சிரிக்க வேண்டியவர்கள்
செத்துப் போனதும்
எரிக்க வேண்டியவர்கள்
உயிரோடிருப்பதும்

கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் எரிந்து சாம்பலாகிய கொடுமையினைக் கண்டபிறகு, மனம் வெந்து, மழை கூடப் பொய்யெனத்தானே பெய்யும்.

06 ஜனவரி 2018

உதிரிலைகள்



என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப் பட்டது……..

23 செப்டம்பர் 2017

ஒத்திகை





     நான் என் குடும்பத்தை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தாலும், மனது சஞ்சனாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் குடும்பத்திடம், நான் எதையுமே மறைத்ததில்லை.

     முதல் முறையாக எனக்கு மனைவியாய் வரப் போகிறவளைச் சந்தித்ததை மறைத்திருக்கிறேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

     அதைச் சொல்லத் தயக்கமாய் இருந்தது.

     சொல்லாமல் இருப்பதிலும ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது.

11 செப்டம்பர் 2017

சில விவாதங்கள்




     மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.

     மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.

04 ஜூன் 2017

காதலின் பொன் வீதியில் …..


     அந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.

என் சாமிக்கு பிலோமினா எழுதியது,

     நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.

19 பிப்ரவரி 2017

தங்கக் கவிஞர்




அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகளின் வருகைக்காக.

இப்படித்தான், இக்கவிஞர் தன் கவிதையை நிறைவு செய்கிறார்.

     இதிலென்ன இருக்கிறது, நாம் அனைவருமே, நம் பிள்ளைகளின் வருகைக்காக, அது பள்ளியோ, கல்லூரியோ, அல்லது அலுவலகமோ, தினசரி காத்துக் கிடப்பவர்கள்தானே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.

10 ஜூன் 2016

புதிய மரபுகள்



ஆண்டு 1976.

    அரசர் கல்லூரி, திருவையாறு.

    கல்லூரி மாணவர்களால் அந்தச் சாலையே நிரம்பி வழிகிறது.

    மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூடிய மாணவர்களின் ஊர்வலம்.

     ஊர்வலத்தில் நடுநாயகமாக, ஒரு மாணவரைப் பல மாணவர்கள், தங்களின் தோளில் சுமந்தபடி, வெற்றி முழக்கங்களை முழங்கியபடி செல்கின்றனர்.

    காரணம் என்ன தெரியுமா?

18 மே 2016

இராணுவம் அழைக்கிறது




     இராணுவம்.

     இராணுவம் என்றாலே, போர்க் களக் காட்சிகளும், வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி சிதறி வீர மரணம் எய்தும் வீரர்களின் காட்சிதான், நம் கண் முன்னே தோன்றுகிறது.

    இராணுவம் என்றாலே போர் முனை மட்டும்தானா?

    இல்லை, இல்லை இல்லவே இல்லை.

31 மார்ச் 2016

இந்தியாவின் மகள்


    

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, 24.60 கோடி இந்தியக் குடும்பங்களில், 67 சதவீத மக்கள் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர். மீதி 33 சதவீத மக்கள் மண்ணென்ணெய் விளக்கில்தான் இரவில் வெளிச்சம் பெறுகின்றனர்.

     இந்தியாவின் மின் சக்தியின் தேவை, நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

      நாம் என்ன செய்யப் போகிறோம்

      இதை எப்படி எதிர்கொள்வது?

      வருங்கால சந்ததிகளுக்கு, ஒளிமயமான எதிர்காலத்திற்கு என்ன வழி செய்யப் போகிறோம்?

18 மார்ச் 2016

பங்களா கொட்டா




     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

08 பிப்ரவரி 2016

வலைக்காடு

  



 திரைப்படம் தொடங்கி பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது.

     உங்கள் திரையரங்கில் ஒரு வெடிகுண்டு வைத்திருக்கிறோம். முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

       தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

      இதோ இப்படீங்கறதுக்குள்ளாக மொத்த அரங்கமும் காலியாகிறது. தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்குக் காலதாமதமாகும் சூழல்.

      உள்ளே புகுந்து தேடலாம் என்று யோசனை வருகிறது. ஆனால் அதைச் செய்யும் தைரியம் மட்டும் யாருக்கும் இல்லை.

     டேய் டைசன், இங்கே வா, உள்ளப் போயி எங்கயாச்சும் குண்டு இருக்கான்னு பாரு.

18 ஜனவரி 2016

சிங்கை நேசன்




காரிருள் அகத்தில் நல்ல
  கதிரொளி நீதான், இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
  பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்ட இந்த
   உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்பிறந்த
   பத்திரிக்கைப் பெண்ணே

என இதழ்களின் பெருமையினைப் பாடுவார் புரட்சிக் கவி பாரதிதாசன்.

      இருளில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு ஒளியினை ஏற்றிவைக்கும் தன்மை வாய்ந்தவை இதழ்களாகும்.

      மக்களின் உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக பொது மக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.

10 நவம்பர் 2015

தாகூரில் தோய்ந்தவர்




     கடவுள் எங்கே? என நான் கேட்ட பொழுது, எங்கும் என பதிலுரைத்தது அறிவு. ஆனால் அன்போ இங்கே எனத் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டது.

     அன்பென்னும் நேரான பரந்த, செழிப்பான பாதை தன் முன்னே விரிந்திருக்க, மதங்களென்னும் குறுகிய, ஒற்றடிப் பாதைகள் வழியே சென்றவாறு, உன்னைக் காண, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மதங்கள் வழிகளாயினும், அவைகள் மட்டுமே வழிகளென்பதல்ல.