25 ஜனவரி 2016

உயிர் பெற்ற ஓவியம்


  

நாமக்கல். சிம்சன், ஆங்கிலேயப் பொறியாளர் பல நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ளார்.

   ஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் நகர மண்டபத்திற்குள் நுழைந்தார். மெதுவாக, மிகவும் பொறுமையாக, நகர மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தார்.

    சுவற்றில் பல ஓவியங்கள் வரிசையாய், மண்டபத்திற்கே மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தவாறு நகர்ந்தவர், ஓர் ஓவியத்த்தின் அருகில் வந்தவுடன், அசையாமல் நின்றுவிட்டார்.

      ஓவியத்தின் கருனை மிகுந்த கண்களும், அறிவுச் சுடர் வீசும் முகமும் அவரை அசையாமல் நிறுத்திவிட்டது.

18 ஜனவரி 2016

சிங்கை நேசன்




காரிருள் அகத்தில் நல்ல
  கதிரொளி நீதான், இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
  பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்ட இந்த
   உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்பிறந்த
   பத்திரிக்கைப் பெண்ணே

என இதழ்களின் பெருமையினைப் பாடுவார் புரட்சிக் கவி பாரதிதாசன்.

      இருளில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு ஒளியினை ஏற்றிவைக்கும் தன்மை வாய்ந்தவை இதழ்களாகும்.

      மக்களின் உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக பொது மக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.

12 ஜனவரி 2016

பயணங்கள்



நணபர்களே, வணக்கம். நலம்தானே,

    பயணம் பற்றிய தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார், புதுகைச் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள். புதுகையின் ஆணையினைப் புறந் தள்ள இயலாது அல்லவா?

  

 பயணம்.

    பலருடைய துணிச்சலான பயணம்தான், உலகின் புதிய புதிய கண்டங்களை, அறியாப் பகுதிகளை, அறியாத மக்களைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது.

06 ஜனவரி 2016

இப்படிக்கு... கண்ணம்மா




ஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.

    கரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்கும், மீனாட்சி அம்மனை வழிபட்டு, வேனின் நான்கு சக்கரங்களுக்குக் கீழேயும், எழும்பிச்சைப் பழங்களை வைத்து, வேனுக்குச் சூடம் ஏற்றி, தீப ஆராதனை செய்து, ஒரு சிதற் தேங்காயினையும் உடைத்து விட்டு, அனைவரும் வேனில் ஏறிப் புறப்பட்டனர்.

     மொத்தம் 12 பேர். அனைவருமே இருபது அல்லது இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞர்கள்.

01 ஜனவரி 2016

பிச்சாவரம்




  கடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 2.30மணி. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எதிரே உள்ள கடை வீதியில், பூட்டப் பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நானும், என் மனைவியும் அமர்ந்திருக்கிறோம்.

   அன்று காலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டுக் கருத்தரங்கம். 350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.

     காலை நிகழ்ச்சி நிறைவுற்றதும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்டோம். என் மனைவி சிதம்பரம் நடராசரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். உத்தரவினை மீற இயலாதல்லவா. இதோ கோயிலின் வாசலில்.