28 மே 2015

கசப்பு


ஆண்டு 1887. செப்டம்பர் 12 ஆம் நாள், இரவு மணி 8.00. அந்த இளைஞனின் வயது 19. பத்தொன்பது வயதிலேயே, வாழ்ந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அந்த இளைஞன்.

வாழ்வு முழுவதும் துன்பம், துன்பம், துன்பம். ஒரு நாள் கூட மகிழ்வினைச் சந்தித்திராத, வாழ்வாக அல்லவா, என் வாழ்வு அமைந்து விட்டது.

     பத்து வயதிலேயே தாய், தந்தையின் மறைவு. உறவென்று மீதமிருந்தவர் பாட்டி மட்டுமே. அரை வயிற்றுச் சாப்பாட்டிற்குக் கூட வழியில்லை.

21 மே 2015

ஒளி பிறக்கட்டும்


சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.

பொறாமை இல்லை, மனிதரிடம் நம்பிக்கை இழப்பதில்லை
எப்போதும் சிறப்பாக செயல்படுவான்.
தன்னைவிடக் கீழானவர்களைக் கண்டு அவன் புலம்புவதில்லை.
புன்னகையுடன், நம்பிக்கையான வார்த்தைகளுடன்
போராடும் ஒவ்வொருவனுக்கும் உற்சாகமூட்டுவான்.

அவன் உன்னதமானவன்
உன்னதமான வாழ்வினால் விதியை வென்றவன்.
-          சாரா கே.போல்டன்


சார், நல்லா இருக்கீங்களா. நாளை நித்யாவிற்கு வளைகாப்பு.

     கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், ஓர் நாள், அலைபேசி அழைத்த போது, வகுப்பில் இருந்தேன்.

     வகுப்பறைக்கு வெளியே வந்து, அலைபேசியின் திரையினை வருடி, காதருகே கொண்டு சென்ற பொழுது, வெளிப்பட்ட வார்த்தைகளில் மகிழ்ச்சியும், நட்பும், குழைந்து இணைந்து இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     நண்பர்களே, அழைத்தவர் யார் தெரியுமா?

13 மே 2015

உலகப் பாறை ஓவியங்கள்

   

 பத்து வருடங்களுக்கு முன்னால், அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து வருவதற்காக, ஆயனர் என்னை அனுப்பினார். நானும் அப்படியே செய்வதாக வாக்களித்து கிளம்பினேன். அஜந்தா வர்ணத்தின் ரகசியம், உமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
   
இதோ இந்தச் சுரங்க விஹாரத்தின் சுவர்களிலே கூட, வர்ணச் சித்திரங்களைக் காண்கிறோம். உமக்குக் கட்டாம் இந்த ரகசியம் தெரிந்துதான் இருக்க வேணடும்.

 அதை உடனே சொன்னீரானால், உம்மை உயிரோடு விடுகிறேன், இல்லாவிட்டால், உமது இஷ்ட தெய்வத்தை, உம்மைப் போன்ற கிராதகனுக்குத், தெய்வம் என்று ஒன்று இருந்தால், அந்தத் தெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளும்.

06 மே 2015

நீதியின் குரல்


ஆண்டு 2005. மே மாதத்தில் ஓர் நாள். நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இன்றைய தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும்,  உதவித் தலைமையாசிரியர் நண்பர்  திரு அ.சதாசிவம் அவர்களும் அதிகாலையில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக, திண்டுக்கல்லைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க, மகிழ்வுந்து ஓட்டுநரும், நண்பருமான திரு ரமேஷ், ஒரே சீரான வேகத்தில், மகிழ்வுந்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயக்குமார், நாளை காலை 9.00 மணிக்கு, கொடைரோடு ஜங்ஷனில் உங்களுக்காகக் காத்திருப்பேன், வாருங்கள்

     நேற்று கேட்ட வார்த்தைகள், காதுகளில், ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மணியைப் பார்த்தேன். மணி 8.30

     ரமேஷ், சரியான பாதையில்தான் செல்கிறோமா? யாரிடமாவது, கொடை ரோடு ஜங்ஷனுக்குப் போகிற வழியைக் கேளேன் என்கிறேன்.

கவலைப் படாதீர்கள், எனக்குப் பாதை தெரியும்.

வந்துவிட்டீர்களா?

      அலைபேசி வழி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.

இதோ, வந்து விட்டோம் சார். இன்னும் பத்தே நிமிடத்தில் அங்கிருப்போம்.

      ஒவ்வொரு முறையும் இதே பதிலைக் கூறுகிறேன்.

      சரியான பாதையில்தான் செல்கிறோமா? வண்டியை நிறுத்தி, யாரிடமாவது கேளேன்?

கவலைப் படாதீர்கள். சரியான பாதையில்தான் செல்கிறோம்.

       ஒவ்வொரு முறையும், எனக்கும் இதே பதில்தான் கிடைக்கிறது.