30 ஆகஸ்ட் 2015
27 ஆகஸ்ட் 2015
24 ஆகஸ்ட் 2015
உறை பனி உலகில் 3
அண்டார்டிகா
உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40
டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை
அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.
அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா
சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற்
பகுதி ஆகும்.
தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
ஆனாலும் அனைவரின் முயற்சியும்
தோல்வியில்தான் முடிந்தது.
கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட
பிரான்சிஸ் ட்ரேக் (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த
சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.
உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று
எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக்
அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.
எனவே இப்பகுதி இன்றும் ட்ரேக் பாதை (
Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.
22 ஆகஸ்ட் 2015
உறை பனி உலகில் 2
கொந்தளிக்கும் கடலில்
சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை
உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின்
ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக்
காத்திருக்கின்றன.
18 ஆகஸ்ட் 2015
உறை பனி உலகில்
நண்பர்களே, வணக்கம். நலம்தானே.
நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை
மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச்
சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.
நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது.
காலமும் குறுகியது.
ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து,
உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச்
செலவிட்டிருக்கிறார்.
நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர
சிலிர்க்கின்றன அல்லவா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



