15 ஏப்ரல் 2022

தீ இனிது



இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே

இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?

என்று பாடியவர், கங்கை ஆற்று நீரை, நறு நீர் கங்கை, நல்ல தூய்மையான நீரை உடைய கங்கை என்று புகழ்கிறார்.

     ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆறுதானே?.

    

08 ஏப்ரல் 2022

இறுதி அழைப்பு

     பிப்ரவரி 28.

     திங்கள் கிழமை.

     உடல்நிலை நலிவுற்று படுக்கையில் முடங்கிக் கிடந்த நான், உடல் நலம் தேறி, 18 நாட்களுக்குப் பின், அன்றுதான் பள்ளிக்குச் சென்றேன்.

     சக ஆசிரியர்களையும், மாணவ, மாணவிகளையும் நேரில் பார்த்த பிறகு, உடலிலும்,  மனதிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.

     காலை மணி 11.00

     ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த பொழுது, என் அலைபேசி ஒலித்தது.

     ஹலோ என்றேன்.

     நீங்கள் யார்?

    

17 மார்ச் 2022

விண்ணில் மறைந்தவர்

 


     நீ எங்கே அமர்ந்தாலும், அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் அமர்கிறாய். இடத்தை துடைப்பதற்கான துணி கிடைக்காவிட்டாலும், வாயால் ஊதியாவது, அவ்விடத்தை சுத்தம் செய்த பிறகுதான் அமர்கிறாய்.

     நீ அமரும் இடம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது, உன் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    

06 மார்ச் 2022

ஓய்வெடுங்கள் ஐயா

 

     முதன் முதலில் என்னை, ஏடெடுத்து எழுதச் சொன்னவர் இன்று இல்லை.

     எங்கோ ஒரு மூலையில், ஒரு மெட்ரிக் பள்ளியில், மிக மிகக் குறைந்த ஊதியத்தில் உழன்று கொண்டிருந்த எனக்கு, அரசு ஊதியத்தில், ஆசிரியர் பணி வழங்கி, என் வாழ்வை வளப்படுத்தியவர் இன்று இல்லை.

    

26 பிப்ரவரி 2022

அல்லு பகல் நினைவெல்லாம்

     கரிவலம் வந்த நல்லூர்.

     பால் வண்ண நாதர் ஆலயம்.

     ஒரு பெரியவர், கோயில் அலுவலகத்துள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம், சில தகவல்களைக் கேட்கிறார்.

பெரியவர்:  வரகுண பாண்டியர் வைத்திருந்த, ஏட்டுச் சுவடிகள் எல்லாம், ஆலயத்தில் இருக்கின்றனவாமே?

பணியாளர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு, எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

பெரியவர்: அப்படியா, அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திறகு அழைத்துப் போவீர்களா?

பணியாளர்:  அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுண பாண்டியர் இறந்தபிறகு, அவர் சொத்தெல்லாம், கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம், அப்போதுதான் கோயிலுக்கு வந்ததாம்.

பெரியவர் :  அது தெரியும்.  இப்போது அவை எங்கே இருக்கின்றன?

பணியாளர்: குப்பை கூளமாக கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்த காலத்துக் கணக்குச் சுருணைகளோ.

பெரியவர் : வேறே ஏடுகள் இல்லையா?

பணியாளர் : எல்லாம் கலந்துதான் கிடந்தன.

     பணியாளர் பேசப் பேச, பெரியவருக்கு மெல்ல மெல்லக் கோபம் ஏறுகிறது.