28 செப்டம்பர் 2015

துர்கா தேவி


    

ஆண்டு 1928, டிசம்பர் 17. நேரம் காலை 10.00 மணி. லாகூர்.

     காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார், அந்த ஆங்கிலேய அதிகாரி.

     காவல் நிலையத்திற்கு அருகில் நின்று, நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல் நிலையத்தை நெருங்குகிறார்கள்

     மொட்டை அடித்து மீசையினையும் மழித்து, அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.

24 செப்டம்பர் 2015

இச்சி மரம் சொன்ன கதை



வணக்கம் நண்பரே. இறந்து இரண்டு தினங்களாகிப்போன, தங்களுடன் பேசலாமா, கூடாதா எனத் தெரியவில்லை.ஆனாலும் பேசிப் பார்க்கலாம் அல்லது இப்படியுமாய் எழுதியும், வணக்கம் சொல்லியும் மகிழலாம் என்றிருந்த, நீண்டு போன, பொழுதுகளின் மதியம் ஒன்றில், தோன்றி மறைந்த யோசனையின் படியாய், தங்களுக்கு எழுதுகிறேன் அல்லது எழுத்து மூலமாய் பேசுகிறேன்.

20 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 10


தாய் மண்ணே வணக்கம்


பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.

       சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.

     காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.

17 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 9


மறு ஜென்மம்



காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.

       ஓர் மனித உடல்.

       பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல்.

14 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 8


பனிப் புயலின் கோரப் பிடியில்

    

பிற்பகல் 3.00 மணி அளவில், ஆய்வகத்தில் அமர்ந்திருந்த சுதாகர் ராவ், காற்றின் வேகம், திடீர் திடீரென திசை மாறுவதை கவனித்தார்.

      காற்றின் வேகத்தையும், திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.

      வெளியில் உள்ள கருவியில் இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது.