காவல் நிலையத்தை விட்டு வெளியே வருகிறார்,
அந்த ஆங்கிலேய அதிகாரி.
காவல் நிலையத்திற்கு அருகில் நின்று,
நோட்டம் விட்டுக் கொண்டிருந்த, ஒரு இளைஞர், சைகை காட்டுகிறார். அவர் சைகை காட்டிய
திசையில் இருந்து மூன்று இளைஞர்கள், மெதுவாக, மிக மெதுவாக, இயல்பாக நடந்து, காவல்
நிலையத்தை நெருங்குகிறார்கள்
மொட்டை அடித்து மீசையினையும் மழித்து,
அடையாளம் தெரியாமல் உருமாறியிருந்த, அந்த இளைஞன், தனது உடையில் மறைத்து
வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுகிறார்.




