17 டிசம்பர் 2022

சிங்கத் தமிழ்

மூவேந்தர் முத்தமிழ் முனைகூடக் குறையாது

பாவேந்தி இதழ்சிரிக்கும் நாடு – இது

நான்வாழ வகைசெய்து என்போலப் பலபேரை

மேலோங்கச் செய்தநன் னாடு.

                                                        கவிஞர் ப.திருநாவுக்கரசு

 

     ஆண்டு 1819.

     சுல்தான் ஹுசைன் ஷா.

     மலேசியாவின் தென்கோடியில் உள்ள, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான்.

     சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்.

     ஓர் ஆங்கிலேயர்.

04 டிசம்பர் 2022

தஞ்சாவூர் பைத்யம்

 


     நீங்கள் துணிச்சல் மிகுந்த கலைஞரா?

     உங்கள் படைப்புகளைப் பத்திரிக்கைகள், புத்தக நிலையங்கள், பண்டித, புலவ, வித்வசிரோன்மணிகள் மறுக்கின்றனரா?

     இதோ குயுக்தம் வெளியிடக் காத்திருக்கிறது.

     எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.

23 நவம்பர் 2022

துபாய் புத்தர்

 


தேடிச் சோறுநிதந் தின்று – பல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

     வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல – நான்

     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

     இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும்.

15 நவம்பர் 2022

10 நவம்பர் 2022

தமிழால் மருத்துவக் கல்வி

      எல்லா வளர்ந்த நாடுகளுமே, கல்வியைத் தங்களோட தாய்மொழியில்தான் கொடுக்குது.

     ஜெர்மன்ல உயர் மருத்துவப் படிப்பு வரைக்கும் ஜெர்மன் மொழியிலதான் படிக்கிறாங்க.

     ஜப்பான்ல அவங்க மொழியிலதான் எல்லா உயர் படிப்புகளும் இருக்கு.

இஸ்ரேல்ல அழிந்த மொழின்னு சொல்லப்படுற, அவங்க தாய் மொழியான ஹீப்ரூவை மீட்டெடுத்து, பி.எச்டி., வரைக்கும் படிக்கிறாங்க.

     மூத்த மொழி, செம்மொழின்னு சொல்ற தமிழ்ல மட்டும் ஏன் அது சாத்தியமாகலே.

     பின்னனியில் பெரிய அரசியல் இருக்கு.