1902 ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியா. சிட்னி. தன்
பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமதி இஸபெல், அம்
மனிதரைத் தற்செயலாகத்தான் பார்த்தார்.
அழுக்கேறிய கிழிந்த உடைகளுடன், முகத்தில்
நீண்டு வளர்ந்திருந்த தாடி, மீசையுடன், மதுவின் வாடையுடன் அவர் மெதுவாகத்
தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.
மன நிலை பிறழ்ந்தவராய், மது அருந்துவதையே,
தன் வாழ் நாள் கடமையாக கடைப்பிடிப்பவர் போல், மெதுவாக ஆடி, ஆடி வந்து
கொண்டிருந்தார்.
எதிரிலே தள்ளாடியபடி வந்த அந்த மனிதர்,
தன்மீது மோதிவிடுவாரோ என்று எண்ணி, விலகியபோதுதான், அம்மனிதரது முகத்தைப்
பார்த்தார்.