09 பிப்ரவரி 2023

குந்தவையின் சபதம்



புரியும்படி சொல்கிறேன், அருமை மன்னா, கேள்.

     உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும்.

31 ஜனவரி 2023

தமிழ்ப் பரிதி

 


 தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி

மூவர் தமிழ் ஓதி, நாலாயிரம் சொல்லி

தாள் வடங்களாக முச்சங்கத் தமிழ் அணிந்து

தீவினை நீக்கும் திருமந்திரம் சொல்லி

காவிய மாமணி கம்ப முடி கவித்து

ஆவி உருக்கும் அருட்பாவால் அர்ச்சித்து

கூவித் திருப்புகழைக் கூத்தாடிக் கும்பிட்டு

தேவாதி தேவனடி

சேர்ந்திடுவோம் எம்பாவாய்.

---

24 ஜனவரி 2023

அறியாதபுரம்



தொண்ணூறு வயது முதியவர் மடியில்

முன்னூறு நிமிடத்திற்கு முன்

பிறந்த குழந்தை ஒன்று

சிரித்துப் பார்த்து சிறுநீர் கழிக்கிறது

முதுமை அதையும் பேறாய் மகிழ்ந்து

மெச்சிப் பேசி, உச்சி முகர்ந்து

இறையை நிறைய துதிக்கிறது.

21 ஜனவரி 2023

ஓடுகளால் ஒரு மேடு

     பொ.ஆ.பி.12 ஆம் நுற்றாண்டு.

     கவிஞர்.

     இக்கவிஞருக்கு ஒரு வித்தியாசமானப் பழக்கம்.

     விசித்திரமானப் பழக்கம்.

13 ஜனவரி 2023

சங்கறுத்தவர்

 


அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி

பங்கம் படவிரண்டு கால்பரப்பி – சங்கதனைக்

கீர் கீர் என அறுக்கும் நக்கீரனோ என் கவியை

ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?