12 ஜூலை 2021

ஆலவாய்

 


மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்

ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

     பழமையான நகரம்.

     வளமான நகரம்.

     ஓங்கிய மாட மாளிகைகள்.

     ஆறு போன்ற அகன்ற தெருக்கள்.

     சங்க காலத்திற்கும் முன்பே, சமுதாய இயக்கம் பெற்ற நகரம்.

    

07 ஜூலை 2021

ஆறாவது விரல்

 


     வாணியம்பாடி முத்தமிழ் மன்ற விழா.

     முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு விருதும், பரிசாய் ஒரு தொகையும் வழங்கப் பெற்றது.

     விருதைப் பெற்றுக் கொண்டவர், தொகையை முத்தமிழ் மன்றத்திற்கே மீண்டும் வழங்கினார்.

     இதை காணிக்கை என்று சொல்ல மாட்டேன்.

     ஏனென்றால், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

     வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் இப்பகுதியில், இக்கவிஞர் அவர்களால், ஒரு அரசாட்சியே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

     எனவே, அதற்கு நான் கப்பம் கட்டிவிட்டுப் போகிறேன் என்றார்.

    

29 ஜூன் 2021

காந்தி கணக்கு



     காந்தி கணக்கு.

     இந்தச் சொல்லாடலை, நாம் அனைவருமே அறிந்திருப்போம்.

     காந்தி கணக்கு.

     இதன் உண்மைப் பொருளை, இச் சொல்லாடல் உருவான கதையை அறிந்திருப்போர் குறைந்த அளவிலேயே இருப்பர்.

     மகாத்மா காந்தி அவர்கள் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தபோது, பெரும்பாண்மையான வணிகர்கள், செல்வர்கள், இப்போராட்டத்தை ஆதரித்த போதிலும், இப்போராட்டத்தில் நேரடியாக பங்கெடுக்க விரும்பவில்லை.

     இருப்பினும், சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு உதவ விரும்பினர்.

     காற்று வெளியில், ஒரு செய்தியை ரகசியமாய் உலாவ விட்டனர்.

    

23 ஜூன் 2021

திசைக் கூடல்

 



     ஆண்டு 1928.

     திருச்சி.

     உடன் பிறப்புகள் மூவர்.

     மூவரில் இளையவர் காலமானார்.

     வழக்கறிஞராய் பணியாற்றி, பெரும் சொத்து சேர்த்தவர்.

     மனைவி இல்லை.

     பிள்ளைகள் இல்லை.

     உயிலும் இல்லை.

    

13 ஜூன் 2021

பரமேசுவர மங்கலம்


     1400 ஆண்டுகளுக்கும் முன்.

     அம்மன்னனின் உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.

     பெருகி வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனை மலர்ந்தது.