Yedagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Yedagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 ஜூன் 2021

பரமேசுவர மங்கலம்


     1400 ஆண்டுகளுக்கும் முன்.

     அம்மன்னனின் உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.

     பெருகி வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும் என்ற சிந்தனை மலர்ந்தது.

    

10 மே 2021

அஞ்சினான் புகலிடம்





     சமணம்.

     சமண சமயம் பண்டைக் காலத்தில், தமிழ் நாடு முழுவதும் பரவி உச்சம் பெற்றிருந்தது.

     சமணம், தமிழ் நாட்டில் ஆழங்கால் பதித்து, தழைத்து, வளர்ந்திருந்ததை, தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலான பிற்காலத்து நூல்களும், மணி மேகலை, சிலப்பதிகாரம் முதலான சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன.

     இலக்கியங்கள் மட்டுமல்ல, சாசனங்களும், அழிந்தும் அழியாமலும் காணப்படுகின்ற சமணக் கோயில்களும், காடுமேடுகள், மலைகள் என ஆங்காங்கே காணப்படுகினற சமண சமய தீர்த்தங்கர்களின் சிலைகளிலும் சான்றுகள் கிடைக்கின்றன.

    

21 மார்ச் 2021

கும்ப முனி

 


     ஆண்டு 1937.

     மார்ச் 27 ஆம் நாள்.

     சென்னை.

     பாரதீய சாகித்திய பரிஷத் மாநாடு.

     தலைமை.

     மகாத்மா காந்தி.

     மாநாடு தொடங்கியது.

   

17 பிப்ரவரி 2021

நண்டு செய்த தொண்டு

 

     திருமணம்.

     காதல் திருமணம்.

     திருமணத்திற்கு முன்பே, காதலன் காதலியிடம் உறுதியாய் கூறினார்.

     உடுத்திய உடையோடு, நீ மட்டுமே வரவேண்டும்.

     உன் வீட்டு, செல்வத்தின் நிழல் கூட உன்னோடு வரக் கூடாது.

14 அக்டோபர் 2020

காந்திய வேர்கள்



     ஆண்டு 1937.

     அக்டோபர் இரண்டு.

     மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.

     நியூயார்க்கில் இருந்து டர்பன் நோக்கி, கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு, திடீரென்று ஓர் எண்ணம் மனதில் மின்னலாய் வெட்டியது.

     காந்தியைப் பற்றி, ஒரு படம் எடுத்தால் என்ன?

     எண்ணத்தை வாய்விட்டு, வார்த்தையாய் வெளியில் சொன்னபோது, சுற்றிலும் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

     உன்னால் முடியுமா? என ஏளனப் பார்வை பார்த்தார்கள்.

   

14 செப்டம்பர் 2020

உலகெலாம்

  


     தாய், தந்தை.

     மகள், மகன்.

     அளவான குடும்பம்.

     மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.

     தாய் உடன் கட்டை ஏறுகிறாள்.

     மகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.

    

15 ஜூன் 2020

கொங்கு




கழுவா மணிக்கலசக் காஞ்சிசூழ் நாட்டில்
புழுவாய் பிறந்தாலும் போதாம், வழுவாமல்
சந்திரராய் சூரியராய் தானவராய் வானவராய்
இந்திரராய் வீற்றிருக்கலாம்.

     குறிஞ்சியும், முல்லையும், கொஞ்சம் மருதமும் சூழ்ந்த இந்நாட்டில் புழுவாய் பிறந்தாலும் பெருமையே.

17 நவம்பர் 2018

பேயும் நோயும்




     அது ஒரு காலம்.

     ஒரு பெண் கருத்தரிக்கிறார்.

     குடும்பமே மகிழ்கிறது

     அன்றிலிருந்து உணவு முறை மாறுகிறது

21 செப்டம்பர் 2018

உய்யகொண்டான்




    
       ஓராண்டு, ஈராண்டு அல்ல

       ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்

       மக்கள்

      கைகளில் ஆயுதங்களை ஏந்தி, மக்கள் பெருங்கூட்டமாய் புறப்படுகிறார்கள்,

14 செப்டம்பர் 2018

யான் வாழும் நாளும் ….



     இன்று, நேற்றல்ல

     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

     அரசன் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் குதிரையேறிப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

     காவிரிக் கரை வழி பயணம் தொடர்கிறது.

07 செப்டம்பர் 2018

மாமன்னன் இராஜராஜன் பள்ளிப்படை



     ஆண்டு 1989

     தஞ்சாவூர்

     சீனிவாசபுரம்

     இராஜராஜன் நகர்

     தஞ்சாவூர் பெரிய கோயிலை ஒட்டியுள்ளப் பகுதி சீனிவாசபுரம் ஆகும்.

     இந்த சீனிவாசபுரத்திற்கு அருகில், புத்தம் புதிதாய் தோன்றிய நகர் இராஜராஜன் நகர்.

     வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக் கொண்டிருந்த காலம்.

     இந்நகரில், புதிதாய் ஒரு வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டுவதற்கானப் பணிகள் தொடங்கியிருந்தன.

     அஸ்திவாரத்தின் ஆழம் பத்து அடியை நெருங்கியபோது, பெரும் கருங்கல் ஒன்று இடைமறித்துத் தடுத்தது.

     நீண்ட கல்லாகத் தெரியவே, கல்லின் திசையில் மண்ணை அகற்றியபோது, பணியாளர்கள் திடுக்கிட்டுத்தான் போனார்கள்.

17 ஜூன் 2018

தாகம் தீர்க்கும் வழிகள்




     உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்றன.

     எரி சக்திற்கு மாற்றாக, விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, மண்ணெண்ணை, நில ஆவி, புனல் மின்சாரம், அனல் மின்சாரம்,அணு மின்சாரம், சூரிய சக்தி, காற்று, அலை ஆகியவற்றில் இருந்து பெறும் மின்சாரம், சாண எரி வாயு, எனப் பல வழிகள் இருக்கவே இருக்கின்றன.

     ஆனால், தண்ணீருக்கு மாற்றாக என்ன இருக்கிறது?

31 மே 2018

மறக்கப்பட்ட புரட்சி





     இந்திய மக்களுக்குச் சுதந்திரம் அளித்தால், அதிகாரம் நாணயமற்றவர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் கைகளுக்குச் சென்றுவிடும்.

     ஜாதி, மதம், பதவி ஆகிய காரணங்களுக்காகவும் மற்றும் எந்த காரணமும் இல்லாமலும் கூட, தங்களுக்குள் அடித்து மோதிக் கொள்வார்கள்.

     இந்திய நாடே மலிவான அரசியல் சண்டை, சச்சரவுகளால் காணாமல் போகும் நிலை வரும்.

17 பிப்ரவரி 2018

சிரிப்போம் சிந்திப்போம்





ஓசிப் பொடி வாங்கி
நாசியிலே ஏற்றினால்
காசிக்குப் போனாலும் – உன்
கருமம் தொலையாது.

     பெரியவர் ஒருவர், தன் வேட்டி மடிப்பில் பத்திரமாய் வைத்திருந்த, பொடி மட்டையினைப் பிரித்துப் பார்க்கிறார். மட்டையினுள் பொடி இல்லை.

     உடனே பொடி போட்டாக வேண்டுமே.

     மூக்கு மட்டுமல்ல, மனமும் பரபரத்தது.

18 ஜனவரி 2018

இந்திர விழா



     பொங்கல்.

     பொங்கல் விழாவானது, இன்று தமிழர் திருநாளாகவும், திராவிடர் திருநாளாகவும் போற்றிப் புகழப் படுவதை நாம் அறிவோம்.

      ஆனால், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை பொங்கல் என்ற வார்த்தையே, தமிழில் பயன்பாட்டில் இல்லை என்பது நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும்.

16 டிசம்பர் 2017

காசு




    சிறு வயதில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா மற்றும் பத்து பைசா நாணயங்களைக் கொடுத்து, மிட்டாய் வாங்கித் தின்று மிகிழ்ந்திருக்கிறேன்.

    இன்று இந்தக் காசுகள் எல்லாம், இல்லாமலேயே போய்விட்டன. ஐம்பது பைசா காசைப் பார்த்தே நீண்ட நாட்களாகிவிட்டது.

    ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்கள் ஏதோ புழக்கத்தில் இருக்கின்றன.

     இபபொழுதெல்லாம், சாலையோரங்களில், உதவி செய்யுங்கள் எனக் கையேந்தி நிற்பவர்கள்மீது, இரக்கப்பட்டு, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் காசைக் கொடுத்தால், நம்மை மேலும் கீழும் பார்க்கிறார்கள்.