28 பிப்ரவரி 2020

வாசிப்பே வாழ்க்கையாய்




     காளமேகம்

     கவி காளமேகம்

     15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்

     தன் காதலுக்காக, அக்காலத்திலேயே, வைணவ சமயத்தில் இருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர்.

     சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும் பாடுவதில் வல்லவர்.

     இவரது நகைச்சுவைப் பாடல்களுக்கு, இந்தச் சிறுவன், தன் பள்ளிப் பருவத்திலேயே அடிமையாகித்தான் போனான்.

21 பிப்ரவரி 2020

மேக்னில் அண்ட்ரப்




     சென்னை, கிறித்துவக் கல்லூரி

     முதுகலைத் தமிழ் வகுப்பு

     பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்

     ஷேக்ஸ்பியர் பற்றியப் பாடம்

     மாணவர்கள் சிலர் சந்தேகங்களைக் கேட்கின்றனர்

     பேராசிரியர் விளக்கமளித்தார்

     ஒரு மாணவனுக்கு மட்டும், பேராசிரியரின் விளக்கம் முரண்பட்டதாகத் தோன்றியது.

15 பிப்ரவரி 2020

அத்தை நடத்தை




     நிறை மாத கர்ப்பிணி.

     மெல்ல மெல்ல வயிற்றில் வலி தோன்றியது.

     மெல்லத் தோன்றிய வலி, நொடிக்கு நொடி அதிகரிக்கத் தொடங்கியது.

06 பிப்ரவரி 2020

காற்றின் பேரோசை



செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உஙங்கட் கெல்லாம்?

வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றி தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட் டீரோ?
-    பாவேந்தர் பாரதிதாசன்