23 நவம்பர் 2022

துபாய் புத்தர்

 


தேடிச் சோறுநிதந் தின்று – பல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

     வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல – நான்

     வீழ்வே னென்றுநினைத் தாயோ?

     இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும்.

15 நவம்பர் 2022

10 நவம்பர் 2022

தமிழால் மருத்துவக் கல்வி

      எல்லா வளர்ந்த நாடுகளுமே, கல்வியைத் தங்களோட தாய்மொழியில்தான் கொடுக்குது.

     ஜெர்மன்ல உயர் மருத்துவப் படிப்பு வரைக்கும் ஜெர்மன் மொழியிலதான் படிக்கிறாங்க.

     ஜப்பான்ல அவங்க மொழியிலதான் எல்லா உயர் படிப்புகளும் இருக்கு.

இஸ்ரேல்ல அழிந்த மொழின்னு சொல்லப்படுற, அவங்க தாய் மொழியான ஹீப்ரூவை மீட்டெடுத்து, பி.எச்டி., வரைக்கும் படிக்கிறாங்க.

     மூத்த மொழி, செம்மொழின்னு சொல்ற தமிழ்ல மட்டும் ஏன் அது சாத்தியமாகலே.

     பின்னனியில் பெரிய அரசியல் இருக்கு.

01 நவம்பர் 2022

திண்ணை

 


     திண்ணை.

     யார் வேண்டுமானாலும் உறங்கி, ஓய்வெடுத்து, தண்ணீர் வாங்கிக் குடித்து தாகம் தனித்துச் செல்ல உதவியது திண்ணை.

     திண்ணை.

     இன்று நாம் இழந்துவிட்ட பண்பாட்டுத் தொட்டில்.

     திண்ணை.