26 அக்டோபர் 2018

வெற்றிலை



      பூதம்

     அது ஒரு பூதம்

     அகத்தி, செம்பை, முருங்கை மரங்கள் நிறைந்த நிலத்தினுள் புகுந்து மெல்ல நடக்கிறது.

     பூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.

     பூதம் விவசாயியின் தோளைத் தொட்டது.

19 அக்டோபர் 2018

கப்பலேறிய யானை




பிறவாமை வேண்டும் மீண்டும்
    பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
     வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
     அடியின்கீழ் இருக்க வேண்டும்

     காரைவனம் என்னும் மாநகரில் பிறந்தப் புனிதவதியார் பாடிய, தேவாரப் பாடல் இது.

     காரைவனம்

     இன்றைய காரைக்கால்

     புனிதவதியார்

     காரைக்கால் அம்மையார்

     மனித உரு நீங்கி, பேயுரு பெற்ற, காரைக்கால் அம்மையார், என்றென்றும் சிவனின் காலடியில் இருக்க விரும்பி, வரம் கேட்க, இறைவனும் அருளியதாக உரைக்கின்றன, நம் இலக்கியங்கள்.

12 அக்டோபர் 2018

முத்தன் பள்ளம்





     ஒரு திருப்பத்தில் நான்கு ஆண்கள், தலைக்கு மேலாகக் கட்டிலைத் தூக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். நான்கு பேரும், கட்டிலின் நான்கு கால்களைப் பிடித்திருந்தார்கள்.

      அவர்களுக்குப் பின்னே இரண்டு பெண்கள், தலைவிரி கோலமாக ஓடி வந்தார்கள். அவர்களின் தலைமயிர்கள் கலைந்து விரிந்து கிடந்தன. அவர்களின் அழுகுரல் அத்தனை தூரம் தாண்டியும் சன்னமாகக் கேட்டது.

05 அக்டோபர் 2018

பீரங்கி மேடு




     தஞ்சாவூர்

     நானூறு ஆண்டுகளுக்கும் முன்

     கி.பி 1618 அல்லது 1619

     தஞ்சையின் ஒரு பகுதி மக்கள், தங்கள் வீடுகளைத் துறந்து, கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.