24 செப்டம்பர் 2022

மாமனாரும், மருமகனும்



     ஆண்டு 1906.

     திருவல்லிக்கேணி.

     சுக்குராம செட்டித் தெருவில், தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த அம்மனிதர், ஒரு நாள் பட்டணம் நோக்கிச் சென்ற பொழுது, வழியில் ஒரு பெரிய வீட்டைப் பார்க்கிறார்.

     இந்தியா என்னும் வார இதழின் உரிமையாளர் திருமலாச்சாரியார் வீடு என்பதை அறிகிறார்.

      இதழின் உரிமையாளரைச் சந்திக்க எண்ணி, வீட்டிற்குள் நுழைகிறார்.

      அவர் மாடியில் இருக்கிறார் என்கிறார்கள்.

      மாடிக்குச் செல்கிறார்.

      உரிமையாளரைச் சந்திக்கிறார்.

      தனது ஊரையும், பெயரையும் கூறுகிறார்.

      மகிழ்ந்து போன உரிமையாளர், மாடியின் உள் பக்கம் நோக்கி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார், வந்து பாருங்கள் என யாரையோ அழைக்கிறார்.

     

15 செப்டம்பர் 2022

வெள்ளந்தி

 


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டானாம்

வெள்ளரிக்காய்.

காசுக்கு நாலாய்

விக்கச் சொல்லி

காயிதம் போட்டானாம்

வெள்ளைக்காரன்.