17 அக்டோபர் 2024

09 அக்டோபர் 2024

பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கின்றன

 


இந்த சமூகத்தில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள் அத்தனைப் பேரும் பிச்சைக்காரர்களா? அல்லது உழைக்காமலே வளத்துடன் வாழ்பவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் பிச்சைக்காரர்களா? எப்படி இதை சரி செய்வது? சரி செய்ய முடியுமா?

02 செப்டம்பர் 2024

ஆற்றுப்படை

 


     திருமுருகாற்றுப்படை.

     பொருநராற்றுப்படை.

     சிறுபாணாற்றுப்படை.

     பெரும்பாணாற்றுப்படை.

     கூத்தராற்றுப்படை.

     மன்னரைப் பாடி பரிசில்களைப் பெற்ற ஒரு புலவர், தன்னைப் போன்ற பிற புலவர்களிடம், அம்மன்னனின் சிறப்புகளையும், அம்மன்னனைக் காண்பதற்கான வழிகளையும் கூறி, அம்மன்னனைக் காணச் செல்லுங்கள், மன்னனைப் பாடி பரிசில்களைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள் என ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்.

23 ஆகஸ்ட் 2024

14 ஆகஸ்ட் 2024

புலமையும் வறுமையும்



      திருவிளையாடல்.

     திருவிளையாடல் படத்தினை, நாம் எல்லோருமே பார்த்திருப்போம்.

     அப்படத்தில் வரும்  அனைத்து காட்சிகளும், நம் மனம் கவர்ந்தவைதான்.

     அதிலும் குறிப்பாக தருமி.

03 ஆகஸ்ட் 2024

தாஜ்

 

     தாஜ் மகால்.

     ஆக்ராவில், தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்காக, ஷாஜகான் கட்டி எழுப்பிய, இன்று உலக அதிசயங்களுள் ஒன்றாய் திகழும் தாஜ்மகாலை நாம் அறிவோம்.

     ஆனால், மகாராஷ்டிராவிலும் ஒரு தாஜ்மகால் இருப்பதை அறிவீர்களா?

27 ஜூலை 2024

நிம்மதியாகத் தூங்குங்கள்

 


     காஷ்மீர்.

     இன்று காஷ்மீரில் வசிக்கக்கூடிய மக்களில் 80 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் இஸ்லாமியர்கள்.

     இஸ்லாம் படையெடுப்பின் மூலம் இந்தியாவிற்கு வந்தது என்பார்கள்.

     1500 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாம் தோற்றம் பெற்ற காலத்திலேயே, தமிழ் நாட்டிற்கு இஸ்லாம் மதம் வந்திருக்கிறது.

11 ஜூலை 2024

ஔரங்காபாத்தில் சில நாள்கள்

 


     நண்பர்களே, வணக்கம்.

     கடந்த மே மாதம், 26 ஆம் நாள், எங்கள் அன்பு மகளுக்குத் திருமணம் நடைபெற்றதைப் பலரும் அறிவீர்கள்.

     தமிழறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த காட்சிகள், இன்றும் என் மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.

03 ஜூலை 2024

எரிதழலும் இளங்காற்றும்

 

 

காலத்திற்கு ஒருநாள் முந்தி

முன்பணிக் காலம்

மின்னல் உறங்கும் பொழுது

இரவுப் பாடகன்

போகிற போக்கில்

சொல்ல வந்தது,

இவர்களோடும் இவற்றோடும்

அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

புன்னகை சிந்தும் பொழுது

கருவறையிலிருந்து ஒரு குரல்

என் அருமை ஈழமே

அன்னை மடியே

உன்னை மறவேன்

கதை முடியவில்லை

தோணி வருகிறது

தீவுகள் கரையேறுகின்றன

பரணி பாடலாம்.

13 மே 2024

அம்மா

 


     அம்மா.

     அம்மா இவ்வுலக வாழ்வு துறந்து, நெருப்பில் கலந்து, சாம்பலாய் மேலெழுந்து காற்றில் கரைந்து, முழுமையாய் ஓர் ஆண்டு கடந்து விட்டது.

     என் அப்பா, படுக்கையில் வீழாமல், ஓரிரு நிமிடங்களில் அமைதியாய், கொஞ்சமும் சிரமப்படாமல் மூச்சைத் துறந்தவர்.

     தந்தையின் பிரிவிற்குப் பின், தாயின் முதுகு அதிகமாய் வளைந்து போனது.

     தந்தையின் பிரிவு தந்த அதிர்ச்சியில் நினைவு அகன்று போனது.

19 ஏப்ரல் 2024

வணங்குகிறேன் தாயே

 


     இந்நாள்.

     ஏப்ரல் திங்கள் 19 ஆம் நாள்.

     என் நெஞ்சில் நிரந்தரமாய் நிலைத்துவிட்ட கருப்பு நாள்.

07 ஏப்ரல் 2024

ஆற்றோரம் வாரீர்

 


நீரின்றி அமையாது உலகென்று அதனை வகைப்படுத்த

ஆறின்றி இயலாது என உணர்ந்தனர்.

ஆறு கண்டார், அதனால் சோறு கண்டார் – எத்தனை

29 மார்ச் 2024

அ.ச.ஞா

 



     1925 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் நடைபெற்ற, சைவர்கள் மகாநாட்டில் மேடையேறி, மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசி, அனைவரையும் வியக்க வைத்தபோது, அச்சிறுவனின் வயது ஒன்பது.

23 மார்ச் 2024

26 பிப்ரவரி 2024

காந்தியின் நிழல்

     


 ஆண்டு 1942.

     ஆகாகான்அரண்மனை.

     மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், எரவாடா பகுதியில், 1892 ஆம் ஆண்டு, சுல்தான் முன்றாம் முகமது ஷா அவர்களால் கட்டப்பெற்ற அரண்மனை.

     மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர்.

     சுல்தான் தனக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய அரண்மனையை, ஆங்கிலேய அரசு சிறைச்சாலையாக மாற்றி இருந்தது.

      மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.

     ஆங்கிலேய அரசு வெகுண்டு எழுந்தது.

     காந்தியைக் கைது செய்தது.

     ஆகாகான் அரண்மனையில் காவலில் வைத்தது.

     காந்தியை மட்டுமல்ல, காந்தியோடு, காந்திய இயக்கவாதிகள் பலரையும் கைது செய்து, இங்குதான் வைத்தது.

     1942 ஆகஸ்ட் 15.

     திடீரென்று அரண்மனை பரபரப்படைந்தது.

17 பிப்ரவரி 2024

பிஷ்னோய்

 


 

     ஈஸ்டர் தீவு.

     சிலி நாட்டின் தீவு.

     சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த தீவு.

     ஒரு காலத்தில் ஐம்பதாயிரம் மக்களால் நிரம்பித் ததும்பியத் தீவு.

     இத்தீவின் தலைவருக்குத் திடீரென்று ஓர் எண்ணம் உதித்தது.

01 பிப்ரவரி 2024

நான் இங்கே இருந்தேன்



      ஆண்டு 1879.

     அது ஒரு பெரும் குகை.

     ஒரு தந்தை, தன் மகளுடன் அக்குகையில் மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்.

     பன்னிரெண்டே வயதான அவரது மகள், திடீரெனக் கத்தினாள்.

     அப்பா, உங்களுக்குப் பின்னால், ஒரு காட்டெருமை நிற்கிறது.

18 ஜனவரி 2024

ஓர் உளி, எழுதுகோலான கதை

 


     ஆண்டு 1945.

     கரந்தை.

     வடவாற்றங்கரையின், தென் கரைக்கு அருகில் அமைந்துள்ள, பாலோபா நந்தவனம் கோயிலுக்கு முன்புறம், ஒரு பெரும் கல்லால், ஒரு நவக்கிரக மேடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     ஓர் இளைஞர், இடுப்பில் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு, கலைந்த தலை, வெற்றிலை போட்டுப் போட்டு கறை படிந்த பற்களுடன், பெரும் கல் ஒன்றினைக் கொத்தி சீரமைக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார்.

03 ஜனவரி 2024

கண்டேன் உறவை

     என் தாய், சகுந்தலா அம்மையார் மறைந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன.

     நான்கு மாதங்களில், முதலாமாண்டு நினைவு நாள் வருகிறது.