31 டிசம்பர் 2021

கரந்தையின் கணிதக் கடவுள்

     இன்றைக்கு நாற்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறாம் வகுப்பு மாணவனாக, 1975 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், காலடி எடுத்து வைத்து நுழைந்தேன்.

    

23 டிசம்பர் 2021

ஓலையில் உறங்கும் தமிழ்

 



திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர்

அ.முத்துசாமி பிள்ளை

புதுவை நயனப்ப முதலியார்

முகவை இராமாநுசக் கவிராயர்

27 நவம்பர் 2021

அரசு கவிதைகள்

 


நீ …

எங்கள் வியப்புகளின்

குறியீடு.

மாதச் சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?

  

21 நவம்பர் 2021

தமிழறம்



     அறம்.

     தமிழ் மொழியைத் தங்கள் தாய்மொழியாய் பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

     இவர்கள் பள்ளியில், முதல் வகுப்பில் நுழைந்தவுடன், முதல் நாள், தங்கள் செவி குளிர கேட்கும் ஔவையின் அமுதமொழி, ஆத்திசூடி.

    

10 நவம்பர் 2021

திருநாவுக்கரசர்

 


 

     ஆண்டு 1975.

     கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன் கல்வி பயின்ற கல்லூரி.

     சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவுடன் இயங்கி வந்த காலம்.

     இளங்கலை மாணவர்களுக்கானத் தேர்வு முடிவுகள் வெளியிடப் பெற்ற நாள்.

     வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று முழக்கமிடுகின்றனர்.

     கல்லூரி வளாகம் முழுமையும் ஒரே பரபரப்புடன் காணப்படுகிறது.

     ஆனால் ஒரு மாணவர் மட்டும், முகத்தில் கவலையின் ரேகைகள் படர, மகிழ்வின்றி, ஆழ்ந்த யோசனையோடு திரும்பிச் செல்கிறார்.

    

06 நவம்பர் 2021

சொர்க்கம்

 

     சொர்க்கம் மதுவிலே,

     சொக்கும் அழகிலே.

     சொர்க்கம் மதுவிலே என்னும் கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, மெய்ப்பித்து வருகிறது இன்றைய தமிழகம்.

     ஊரெங்கும் மதுக் கடைகள்.

     மதுவே சொர்க்கமாகிப் போனது, பல இலட்சம் மனிதர்களுக்கு.

   

29 அக்டோபர் 2021

தஞ்சையார்

     ரோகிணி.

     ரோகிணி ஆறு.

     இரு நாடுகளுக்குப் பொதுவாய் ஒரே ஓர் ஆறு.

     இது போதாதா, பிரச்சினைகளை ஏற்படுத்த.

     ஆண்டுதோறும் பிரச்சினைதான்.

    

22 அக்டோபர் 2021

அடுத்து என்ன?


 


     மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, அவனைத் தொட்டுத் தொடருகிறது ஒரு கேள்வி.

     அடுத்து என்ன?

     பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து பள்ளிக்குப் போகிறோம்.

     அடுத்து என்ன?

     கல்லூரிப் படிப்பு, வேலை தேடுதல்.

     அடுத்து என்ன?

    

13 அக்டோபர் 2021

மண்ணியாற்று அதிசயம்

          


காவிரி.

     கர்நாடக மாநிலத்தின், குடகு மாவட்டத்தின், தலைக் காவிரியில் தோன்றி, தான் செல்லும் இடமெல்லாம் இருபுறமும், தன் கரங்களாய், பலநூறு கிளை ஆறுகளை விரித்துப் பரப்பி, நிலங்களை செழுமைப்படுத்தி, வயல் வெளிகளைப் பசுமையாக்கி மகிழ்கிறது காவிரி.

08 அக்டோபர் 2021

உயில்



     தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு, ஐந்து மாத வீட்டு வாடகை ரூ.135 தரவேண்டி இருக்கிறது.

     தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் கடையில், ஜவுளி வாங்கிய வகையில் ரூ.30  நிலுவை தரவேண்டும்.

     வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ரூ.30 தர வேண்டும்.

     சில்லறைக் கடன்கள் ரூ.60 மீதமிருக்கினறன.

     இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20

     சோமநாத்துக்கு ரூ.16

     வேதவல்லிக்கு ரூ.50 பாக்கி இருக்கிறது.

    

02 அக்டோபர் 2021

கரந்தைக்கு இரண்டு


 

     இவர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.

     ஒன்றல்ல, இரண்டு கல்லூரிகளைத் தூக்கி நிறுத்தியவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, தொடங்கப் பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரி, பிற்காலத்தில், தளர்வுற்றபோது, கல்லூரியின் முதல்வராய் பொறுப்பேற்று, புது இரத்தம் பாய்ச்சி, புத்துணர்வு கொடுத்து, புதுமெருகூட்டிக் காத்தவர், வளர்த்தவர்.

    

25 செப்டம்பர் 2021

கரந்தை நீர்த்தூம்பு




நிலன் நெறிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

     நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ, அங்கெல்லாம், நீர் நிலைகள் அமையும்படி கரை அமைக்கும் மன்னர்களே, இவ்வுலகில் என்றென்றும் அழியாதப் புகழ் பெற்று போற்றப்படுவார்கள் என்கிறார் ஒரு புறநானூற்றுப் புலவர்.

   நீரின் அருமையும், பெருமையும், உயிர்மையும் அறிந்த இனம், உணர்ந்த இனம் நம் இனம்.

    

17 செப்டம்பர் 2021

ஓப்பிலா செந்தமிழ்ச் செல்வன்

 

 

     அன்பார்ந்த ஐயா,

     நமஸ்காரம்.

     எனக்கும், என் குடும்பத்தாருக்கும், கடவுளையும், தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில், வேறு தஞ்சம், ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.

     நான் இனிமேல், அதிக காலம், ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை.

04 செப்டம்பர் 2021

மருந்தென வேண்டாம்



     மருந்து.

     வாழ்வு முழுவதும் மருந்து, மருந்து, மருந்து.

     உணவு உண்ண மறந்தாலும் மறப்போம், ஆனால் மருந்துண்ண மறக்க மாட்டோம்.

     நமது இன்றைய வாழ்வு, மருந்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வாகி விட்டது.

     மருந்தில் இருந்து, நமக்கு விடுதலையே கிடையாதா?

     உண்டு.

    

29 ஆகஸ்ட் 2021

ஒரே நலம்


 

     காங்கோ.

     மத்திய ஆப்பிரிக்காவின் நடுப் பகுதி.

     காங்கோ காட்டில், குரங்குகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

     ஒரு சில நாட்களிலேயே ஆய்வாளர்கள் அதிர்ந்தனர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல.

     ஒரு நூறு, இரு நூறு அல்ல.

     முழுதாய் ஐந்தாயிரம் சிம்பன்சிகளைக் காணவில்லை.

    

22 ஆகஸ்ட் 2021

எழுத்து

 



     உலக மொழிகளுக்கு, இரண்டு வடிவங்கள் உண்டு.

     ஒலி வடிவம்.

     வரி வடிவம்.

     ஒலி முன்னது.

     வரி பின்னது.

     ஒலிகூட ஒழுங்கு படுத்தப்படாத ஒலியாகத்தான், முதலில் இருந்திருக்கும்.

    

16 ஆகஸ்ட் 2021

பெயர்த்திக்காக

 



 

     கோடை காலம் தொடங்கியது.

     குளத்து நீர் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது.

     இருவருக்கும் கவலை வந்தது.

     குளத்தை நீரின்றி வற்றாமல் காப்பது எப்படி?

     யோசித்தனர்.

     ஓர் எண்ணம் தோன்றியது.

10 ஆகஸ்ட் 2021

ஈழத்துத் தமிழிசை


வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

-          சுவாமி விபுலாநந்தர்

 

     ஈழம்.

     இலங்கை, தென்மா விலங்கை, லங்கா, நாகதீபம், லங்கதுவீபம், தப்ரபேன், சேலான், சிலோன், தர்மதீபம், இரத்தின துவீபம்.

     இவையெல்லாம் ஈழத்தின் மறு பெயர்கள்.

    

01 ஆகஸ்ட் 2021

ஓய்வெடுங்கள் ஐயா

 


பரிதிமாற் கலைஞர்

மறைமலை அடிகளார்

தேவநேயப் பாவாணர்

இம்மூவரின், மறுஉருவாய் வாழ்ந்தவர்.

    

24 ஜூலை 2021

பரிபூரணம்

 


      நாற்பதிற்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்றுத் தேர்ந்து, சொல்லாராய்சி செய்த வித்தகர்.

1.      மாந்தன் பிறந்தகம், மறைந்த குமரிக் கண்டமே

2.      அவன் பேசிய மொழி தமிழே

3.      தமிழே உலக முதன் மொழி

4.      தமிழே திராவிடத்திற்குத் தாய்

5.      தமிழே ஆரியத்திற்கு மூலம்

எனத் தரவுகளோடு நிறுவுவதையே, தன் வாழ்வின் குறிக்கோளாய் கொண்டு, செயலாற்றி வென்றவர்.

   

17 ஜூலை 2021

அப்பா என்கிறவர்

 


     ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் உன்னை நினைத்துக் கொள்கிறேன். உடல்தான் வாழ்க்கை என்று நீ முடிவெடுத்துவிட்ட பின்னர், உள்ளம் குறித்து எத்தனை பேசினாலும் உனக்குப் புரியாது.

     நீர் வற்றி விடுவதுபோல், உடல் தாகம் வற்றும் போது, உனக்கு, உள்ளத்தின் தாகம் புரியும்.

     அதுவரை நான் காத்திருப்பேன்.

---

ஒரு தந்தையின் ஏக்கம் இது.

---

     எனக்கு ரொம்பப் பிடிச்ச நோய் ஹார்ட் அட்டாக்தாம்பா..

     அதுதான் படுக்கையில விழாம ...  நாலு பேருக்குத் தொந்தரவு இல்லாம...

     பீ மூத்திரம் நான் அள்ளிப் போட்டேன்னு, யாரும் சொல்லி சலிச்சிக்காம...

     பட்டுன்னு வந்து, சட்டுன்னு முடிச்சிடும் வாழ்க்கையை ...

     எனக்கு ரொம்ப பிடிச்ச நோய்..

     என்னோட பேவரைட்,,,

---

ஒரு தந்தையின் எதிர்பார்ப்பு இது.

---

அன்புள்ள மகன் கோபால கிருஷ்ணனுக்கு,

     அப்பா எழுதுவது. எப்படியும் இந்தக் கடிதத்தை நீ படிக்கப் போவதில்லை என்று தெரியும், ஒரு வேளை அப்படிப் படிக்கிற சந்தர்ப்பம் வாய்த்தது என்றால், அதைப் பார்க்க நானோ, உன் அம்மாவோ இருக்க மாட்டோம் என்ற உறுதியில்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

     எதுக்கு நீ படிக்காத ஒரு கடிதத்தை எழுதி, என்ன பண்ணப்போறேன்னு தோணும்.

     அரசாங்க வேலை பாத்தப்ப, பக்கம் பக்கமா எழுதுவேன்.

     எழுதிட்டா பாரம் இறங்கிட்ட மாதிரி.

     அவ்வளவுதான்.

     ரொம்ப சாதாரணமா, ஒரு வார்த்தை பேசிட்டுப் போயிட்ட... 

     சாக வேண்டிய வயசில, ஏன் அடுத்தவங்க உரிச எடுக்கறீங்கன்னு...

     மழ விட்டும் தூவானம் விடலேன்னு ...

     பெத்தவங்க, புள்ளைங்களுக்கு எப்பவும் பாரமா இருக்கக் கூடாது ...

     ஆனா, பாசமா இருக்கனும்.

     இனி உனக்கு நாங்க தொந்தரவா இருக்க மாட்டோம்.

     அதுக்காக, சாகவும் மாட்டோம்.

     எனக்கு தெம்பிருக்கு, வாழறவரைக்கும் உழைக்கிறத்துக்கு.

     யாரை நம்பியும், யார் வாழ்க்கையும் இல்லை.

     எழுதி முடித்த கடிதத்தை ஒரு முறை படித்தார்.

     மறு முறை படித்தார்.

     மறு முறை படித்தார்.

     பின் கடிதத்தைக் கிழித்து, பொடிப் பொடித் துண்டுகளாக்கி வீசினார்.

---

ஒரு தந்தையின் வைராக்கியம் இது.

---

     இது பூர்விக சொத்துதான்.

     என் தாத்தாவோட சொத்து.

     எங்கப்பா, இதுல இருந்து வாழ்ந்து செத்தாரு.

     இப்போ நான் ...

     நீங்க பேசற நியாயப்படி, தாத்தா சொத்து பேரனுக்குத்தான், அதாவது எனக்குத்தான்.

     இதை என்ன பண்ணனும்னு முடிவு பண்ண வேண்டியது, நான்தான்.

     காலங்காலமா, இதுல வாழ்ந்துகிட்டிருந்தவங்க, செத்த பிறகும், இங்கதான் இருக்காங்க.

     இது வீடு இல்லை ... கோயில்.

     தெய்வங்கள் குடியிருக்கிற கோயில்.

     இதை விக்க முடியாது.

     எனக்கு அப்புறமும் இந்த வீடு இருக்கனும்.

     என் பேரப்புள்ளங்க, நிச்சயம் இங்க வருவாங்க.

     இருப்பாங்க.

     இந்த வீடு என்ன விலை போகுதோ, அந்தத் தொகையைப் பாகம் பிரிச்சா, ஆளுக்கு என்ன வருமோ, அதை நான் கொடுத்துடறேன்.

     இனிமே, இந்த வீட்டுக்கும், உங்களுக்கும் சம்பந்தமில்லேன்று பத்திரத்துல எழுதிக் கொடுங்க.

---

ஒரு தந்தையின் உறுதிப்பாடு இது.

---

     சங்கரன், இந்த வீட்டை இடிச்சாங்கல்ல, ஏதாச்சும் போடோ இருக்கான்னு கேளுங்க. அதுல ஒரு வேளை, உங்க தாத்தா முகம் கிடைக்கலாம்.

     அத அப்படியே, அந்த வீட்டுக் கொல்லைப் புறம் போட்டிருக்கோம்...

     இருந்தா எடுத்துக்கங்க...

     இரண்டு படங்கள் கிடைத்தன.

     ஒன்று குழு படம்.

     ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்தனர்.

     கறையான் அரித்திருந்தது.

     இன்னொரு படம்,

     நாற்காலியில் உட்காந்த நிலையில், ஒரு ஆணின் தனித்த படம்.

     அதில் நெஞ்சுக்கு மேல் இல்லை.

     கைகள் சுருங்கிக் கிடந்தன, உலர் திராட்சைகளைப் போல.

     எடுத்துச் சென்று அம்மாவிடம் காட்டினேன்.

     இது உன் தாத்தாவோட கைகள்தான்.

     வலது கை சுண்டுவிரலைப் பார்.

     மூட்டைப் பூச்சு மாதிரி ஒரு மச்சம்.

     இது உன் தாத்தாதான்.

     போட்டோவைப் பார்த்தேன்.

     மச்சம் இருந்தது.

     உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.

     கவிஜீவன் சொன்னார்.

     சங்கரன், இந்தக் கைகள் உள்ள போட்டோவை, அப்படியே பிரிண்ட் போட்டு, லேமினேஷன் பன்னிடுங்க.

     உங்களுக்குப் பிடிச்ச, உங்க அப்பாவைத் தூக்கி வளர்த்த கைகள் இவை.

     உங்கப்பா கைகள் உங்களை வளர்த்தது.

     இது தலைமுறை தொடர்ச்சி.

     இதுவும் கூட குலதெய்வம்தான்.

---

     படிக்கப் படிக்க மனம் நெகிழ்ந்து போகிறது.

     நெகிழ்வில் திளைத்த உள்ளத்தின்  வெளிப்பாடாய், கண்களின் வழி, சில துளிகள் எட்டிப் பார்க்கின்றன.

     மனதை ஒரு பெருந்துயர் அழுத்துகிறது.

     அப்பா, அப்பா என மனம் அரற்றுகிறது.

     தந்தையை இழந்த தனயன்களால், இந்நூலை எளிதில் கடந்துவிட முடியாது.

     படித்தபின், மறந்துவிடவும் முடியாது.

     எப்படி இவரால் முடிந்தது?

---

     இவர் உறவுகளைப் படித்தவர்.

     உன்னத நண்பர்களைப் படித்தவர்.

     வாழ்க்கையைப் படித்தவர்.

     படித்துக் கொண்டே இருப்பவர்.

     இவர் எழுதத் தொடங்கி, நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.

     எழுதிக் கொண்டே இருக்கிறார்.

     கதைகள் ஒவ்வொன்றும் என்னை எழுது, எழுது என இவரிடம் வரிசை கட்டி நிற்கின்றன.

     இவரும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார்.

---

     தாயைப் பற்றி நிறைய பேர், நிறையவே எழுதி இருக்கிறார்கள்.

     பாடி இருக்கிறார்கள்.

     கொண்டாடி இருக்கிறார்கள்.

     ஆனால், தந்தையைப் பற்றி எழுத்தில் வடித்தவர்கள் குறைவு.

     மிகக் குறைவு.

     இக்குறையினைப் போக்க வந்த, அருமருந்து இவரது நூல்.

     இந்நூலைப் படிக்கும் போது, பல பக்கங்களில், என் உள்ளம், தேங்கித் தேங்கி நின்றது.

     காரணம், எழுத்தோடு எழுத்தாய், தன் வாழ்வியல் நிகழ்வுகள் பலவற்றையும், இறக்கி வைத்திருப்போரோ, என்னும் ஓர் ஐயம்.

     அப்படித்தான் இருக்க வேண்டும்.

     அதனால்தான் எழுத்துக்களோடு, உள்ளத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.


அப்பா

சிறு கதைத் தொகுப்பு

14 கதைகள்

அப்பா, அப்பா, அப்பா

என

ஒவ்வொரு சிறுகதையிலும்

ஓர் அப்பா.

 

அப்பாக்களின்

உணர்வுக் குவியல்

எண்ணக் குவியல்

எழுச்சிக் குவியல்

அப்பா

 

இவர்தான்

அண்ணாமலைப் பல்கலைக் கழக

தமிழ்த் துறை, மேனாள் பேராசிரியர்


முனைவர் க.அன்பழகன்

ஹரணி.