28 ஆகஸ்ட் 2014

தமிழ் மண்ணின் மைந்தர்


ஆண்டு 1891. கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து, தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியபோது, அவரின் உடல் நடுங்கத் தொடங்கியது. மருத்துவர் வரவழைக்கப் பட்டார். மருத்துவம் பார்த்தும் பலன்தானில்லை.

     கருணைக் கடலாம் கர்த்தரை மனதில் நினைத்து, மறை  மொழிகளால் மனதாரத் தொழுது, புண்ணியா, உன்னிடமே போதுகின்றேன் என்றார். அடுத்த நொடி, அவரது மண்ணுலக வாழ்வு நிறைவு பெற்றது.

     அந்நாள் 28.8.1891

20 ஆகஸ்ட் 2014

சங்கமம்


பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே,
பழகிக் களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ

     நண்பர்களே, இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், நமது எண்ணங்கள், இறக்கைக் கட்டி, பின்னோக்கிப் பறப்பதையும், இளமைக் கால நினைவலைகளில் மூழ்கி, நிகழ் காலத்தை மறந்து, கண்ணின் விழிகளில் இருந்து, ஒரு துளி நீர் எட்டிப் பார்ப்பதையும், நாம் அனைவரும் அனுபவித்து இருக்கிறோமல்லவா.

14 ஆகஸ்ட் 2014

கரந்தை காந்தி


வாழ்கநீ எம்மான், இந்த
     வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
      விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
     பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
     மகாத்மாநீ வாழ்க வாழ்க
                          - மகாகவி பாரதி

     நண்பர்களே, நம் பாரதத் திருநாடானது, தனது 68 வது சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு தியாகி, கரந்தை காந்தி அவர்களைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.

10 ஆகஸ்ட் 2014

சோழ மண்ணில்




நண்பர்களே, மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எனது அழைப்பினை ஏற்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எங்களுடன் இணைந்து, எங்கள் குல தெய்வம் கோயிலுக்கு, வருகை தந்த, தங்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளியாகப் புரிகிறது. இனி இக்குல தெய்வம், எங்கள் குல தெய்வம் மட்டுமல்ல, இன்று முதல் இத் தெய்வம், நம் குல தெய்வம்.

      எனது மனைவியின் விருப்பப்படி, பட்டீசுவரம் துர்க்கையையும், வைத்தீசுவரன் கோயில் வைத்தியநாத சுவாமியையும் தரிசித்தாகிவிட்டது.

      அடுத்து

                கங்கை கொண்ட சோழபுரம்.

04 ஆகஸ்ட் 2014

கொள்ளிடத்தின் நடுவில்

     

நண்பர்களே, நம் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குல தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். குல தெய்வம் என்பது பெரும்பாலும், ஊருக்கு வெளியில் இருக்கும் காவல் தெய்வமாகவே இருக்கும்.

     எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் போல், உங்களுக்கு அமைந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆம் நண்பர்களே, எங்கள் குல தெய்வம், ஊருக்கு வெளியில் மட்டுமல்ல, ஆற்றிற்கு நடுவில் அமைந்துள்ளது.

     தீவு என்ற சொல்லை நாம் நன்கறிவோம். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி தீவு எனப்படும். எங்கள் குல தெய்வம் இருக்கும் இடமும், ஒரு தீவுதான். ஆனால் கடலால் அல்ல, ஆற்றினால் நாற்புறமும் சூழப்பட்ட, அதுவும் கொள்ளிடம் ஆற்றினால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட, ஒரு சிறு நிலப் பரப்பில், ஒரு திட்டில் எங்கள் குல தெய்வம்  கோயில் கொண்டுள்ளது.